செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பாபாவின் அறிவுரை

ஹாய் ப்ரண்ட்ஸ்    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் .

எல்லோரும் வரலக்ஷ்மி பூஜையை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள்? .நான்கூட வரலக்ஷ்மி விரதம் இருந்ததால் தொடர்ந்து என் பதிவை போடமுடியவில்லை.உங்களுடன் எனக்கு தெரிந்தவற்றை   பகிர்ந்து கொள்வதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன் .

போனபதிவில் சொன்ன மாதிரி நான் ஓரு தீவிர பாபாபக்தை .பாபாவை நினைக்காத நாளே இல்லை .ஒவ்வொரு நொடியும் அவரை நினைக்கிறேன் .நான் செய்யும் செயல்கள் அனைத்தும் பாபாவின் இயக்கமே .

இன்னிக்கு பாபா நமக்கு சொன்ன சில அறிவுரைகளை சொல்லலாம் என்று இருக்கேன்.
வாங்க !பார்க்கலாம்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள் .என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் .நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன்.

 எல்லா  ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன் ,என்னை நினைப்பவனை எந்த துன்பமும் நெருங்காது . 

எவர்  உள்ளத்தில்  நான் இருக்கிறேனோ  அங்கு அன்பு இருக்கும் . 

  • நம்பிக்கை ,பொறுமை  பாபா மீது  வைத்தால் நாம் நினைத்தது  நிறைவேறும் .

    சாயி சாயி  என்று சொன்னால்  பாவங்கள் தீர்ந்து விடும்.

    பாபா எண்ணம் ,செயல் ,சொலால் இறைவனை சரணடை என்கிறார் .

    என்னை வணங்க பூஜை பூனஸ்காரம்  தேவையில்லை .ஆத்மார்த்தமாக என்னை வணங்கு .நான் உன்னுடன் இருப்பேன் .

    கஷ்டம் வந்தால் துவண்டு போகாதே .அது உன் பூர்வ ஜென்ம கர்மா .இன்பத்தை எவ்வாறு சந்தோசமாக ஏற்கின்றாயோ அதே போல் கஷ்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று என் மீது போட்டு விடு .நான் பார்த்து கொள்கிறேன் . கவலைபடாதே !

என்ன நண்பர்களே  பாபா அறிவுரையை கேட்டு அவரை முழுமையாக நம்பிக்கையுடன் ஜெபம் செய்தால் நிச்சயமாக பாபா நம் மீது கருணைக்காட்டுவார் .
ஜெய் சாய்  ராம் !
வாழ்க வளமுடன் 
உங்கள் அன்பு தோழி  ஈஸ்வரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக