வெள்ளி, 31 ஜூலை, 2015

மதுரையை ஆளும் மீனாக்ஷி

ஹாய் எல்லோருக்கும் வணக்கம் 

மதுரை மீனாக்ஷி 

இன்னிக்கு வெள்ளிக்கிழமை .அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை .பெரும்பான்மையான  மக்கள் காலை யிலேயே அம்மனை கோவில் சென்று வழிபடுவது உண்டு. நான் வெள்ளிகிழமை தோறும் , லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் அம்மா என் வீடு தேடி வந்திடுவாங்கள்.அதில்  ஒன்றும் சந்தேகமே இல்லை 


என்னுடைய பிரியமான  தோழி உமா  என்னிடம் ,மதுரை மீனாட்சியைப்  பற்றி எழுதுமாறு கேட்டுக்கொண்டதால் அந்த மீனாக்ஷி அம்மன் அருளுடன் இந்த பதிவை  எழுதுகிறேன் .









காசியில் இறந்தால் முக்தி .திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி .மதுரை வீதியில் நடந்தாலே முக்தி .  


அந்த மதுரை மீனாட்சியைப் பற்றி கேட்டாலோ ,அவள் புகழை சொன்னாலோ நமக்கு நன்மை நிச்சயம்  என்று நம்புவோம். எனக்கு கிடைத்த  தெய்வீக அருள் உங்களுக்கும் கிடைக்க அந்த மீனாட்சி தாயாரை வேண்டுகிறேன்.

பொதுவாக சிதம்பரம் என்றால் சிவபெருமானுக்குதான் முதலிடம் .மதுரை என்றால் நம் அம்மா 
மீனாட்சிக்கு தான் முதலிடம் .இதைத்  தான் நிறைய பேர் மதுரைக்காரர்களை பார்த்து உங்க வீட்டுல மீனாட்ஷி ஆட்சிதானே ?என்று கிண்டல் செய்வார்கள் .


காரணம் மதுரை முழுவதும் அம்மாதான் இரவு ,பகல் என்று பாராமல் வலம்  வந்து அருள் புரிகிறாள் .


மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்ஷி என பெயர் பெற்றாள் .அன்னையின் 
கடைக்கண் பார்வை பட்டாலே சகல செளபாக்கியம் நம்மை வந்து சேரும்.மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது .அம்மனுக்கு மரகத வல்லி ,தடாதகை ,அங்கையற்கண்ணி,
சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே .

மீனாட்ஷி பிறப்பு   



அம்பிகை அவ்வப்போது பல அவதாரங்களை செய்து உலகிலுள்ள ஜீவராசிகள் அனைவருக்கும்
அருள்கிறாள் .அதில் ஒன்றுதான் சூர்யவம்சத்தில் நடந்தது .

மதுரையை ஆண்ட மலையத்வஜனுக்கும்,காஞ்சன மாலைக்கும் மகளாக, புத்ரகாமேஷ்டி யாகத்து அக்னியில்  இருந்து 3 வயது பெண்ணாக வந்தவள்  தான் மீனாட்ஷி . அக்னியிலிருந்து தோன்றிய பெண் மூன்று மார்புடன் தோன்றியதால் அரசன் அதை எண்ணி  வருத்தப்பட்டான் .அப்போது ஒரு குரல் கேட்டது .எப்போது அவள் மனதிற்கு பிடித்த கணவனை காண்கிறாலோ அப்போது மூன்றாவது மார்பு மறைந்து விடும் என்று அந்த குரல் கூறியது .அந்த குழந்தைக்கு "தடாதகை "என்று பெயர் சூட்டினார் .


அரசன் 64 கலைகளையும் தன்  மகளுக்கு கற்று தந்தார் .
தடாதகை எல்லா கலைகளிலும் வல்லவளாய் ,எட்டு திசைகளிலும் போரிட்டு வென்றாள் . பிறகு கைலாயத்தையும் வெல்ல வேண்டும் என்று சென்றாள் . அங்கு  சிவபெருமானை கண்டவுடன் அன்னையின்  உடலுள் ஒரு மாற்றம் .அவரே தன் மணாளன் என்ற உணர்வு மேலிட,அவருக்கு மாலையிடத் தயாராகிறாள் .




மதுரையில் ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் மிகச்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது .தன்  தங்கையை தாரை வார்த்து கொடுக்கிறார் நம் விஷ்ணு பெருமாள் .அன்று இரவு பல வண்ண பூக்களால் ஆன பல்லாக்கு  வீதிகளில் வரும். இதற்கு பூப் பல்லாக்கு என்று பெயர் .சுந்தரேசரும் ,மீனாட்ஷியும் பல்லாக்கில் வந்து மதுரை மக்களுக்கு காட்சியளிப்பர் .
மதுரையில் அடுத்த நாள் தேரோட்டம் நடைபெறும்.மறுநாள் அழகர் ஆற்றில் இறங்குவார் .ஒவ்வொரு மண்டபமாக சென்று பக்தர்களுக்கு அருள் புரிகிறார் .இறுதியாக அழகர் கோவிலுக்கு சென்று விடுவார் .

முத்தமிழருக்கு இயல் ,இசை, நாடகங்களை காட்டும் கலைக் கோவிலாகவும்,சிலை கோவிலாகவும் மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.


பொற்றாமரை குளம் 


இந்திரன், தான் பூஜிப்பதற்கு பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் .ஒரு நாரைக்கு சிவபெருமான் அருளிய வரத்தின்படி ,இக்குளத்தில் மீன்களும் ,நீர்வாழ் உயிரினங்கள்  இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.









இக்கோவிலில் மூலவர் சுந்தரேஸ்வரர்.இந்திரன்,வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு  பெற்ற தலம் .

மீனாட்க்ஷி அம்மன் கோவில் வெள்ளி அம்பலம் என்று அழைக்கப்படுகிறது . மதுரையில் 
சிவபெருமான் பாண்டிய மன்னனுக்காக  வலது காலை தூக்கி ஆடினார் என்பது சிறப்பு மிக்கது .


தலவிருட்சம் -----கடம்ப மரம் . மீனாட்ஷி அம்மன் கோவில்  சுவர்களில்  மீனாட்ஷி வரலாற்றை மிக அழகாக சித்திரம் வரைந்து ,பார்ப்பவர்களுக்கு எளிதாக புரியும்படி உள்ளது .


மதுரையில் வடக்கே குபேரன் வழிப்பட்ட பழைய சொக்கநாதர் கோவில் ,மேற்கே சிவனே லிங்க வடிவில் உள்ள  தன்னை ,தானே  வழிபட்ட   இடம் நன்மை தருவார் கோவில் .கிழக்கில் வழிபட்ட ஐராவத நல்லூர் மூத்தீஸ்வரன் கோவில் ,தெற்கில் எமன் வழிபட்ட திருவாலவாய் கோவில் .
  



மதுரை திரு மீனாட்சி அம்மன்  108 போற்றி

1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி4. ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி5. ஓம் அரசிளங்குமரியே போற்றி6. ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி7. ஓம் அமுத நாயகியே போற்றி8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி9. ஓம் அருள்நிறை அம்மையே போற்றி10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி12.ஓம் ஆதியின் பாதியே போற்றி13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி16.ஓம் இமயத்தரசியே போற்றி17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி18.ஓம் ஈசுவரியே போற்றி19.ஓம் உயிர் ஓவியமே போற்றி20.ஓம் உலகம்மையே போற்றி21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி23.ஓம் ஏகன் துணையே போற்றி24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி25.ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி26.ஓம் ஒப்பிலா அமுதே போற்றி27.ஓம் ஓங்காரசுந்தரியே போற்றி28.ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி29.ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி32.ஓம் கனகமணிக் குன்றே போற்றி33.ஓம் கற்பின் அரசியே போற்றி34.ஓம் கருணயூற்றே போற்றி35.ஓம் கல்விக்கு வித்தே போற்றி36.ஓம் கனகாம்பிகையே போற்றி37.ஓம் கதிரொளிச் சுடரே போற்றி38.ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி39.ஓம் காட்சிக்கினியோய் போற்றி40.ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி41.ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி42.ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி43.ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி44.ஓன் கூடற்கலாப மயிலே போற்றி45.ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி46.ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி47.ஓம் சக்தி வடிவே போற்றி48.ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி49.ஓம் சிவகாம சுந்தரியே போற்றி50.ஓம் சித்தந்தெளிவிப்பாய் போற்றி
51.ஓம் சிவயோக நாயகியே போற்றி52.ஓம் சிவானந்த வல்லியே போற்றி53.ஓம் சிங்கார வல்லியே போற்றி54.ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி55.ஓம் செல்வத்துக்கரசியே போற்றி56.ஓம் சேனைத் தலைவியே போற்றி57.ஓம் சொக்கர் நாயகியே போற்றி58.ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி59.ஓம் ஞானாம்பிகையே போற்றி60.ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி61.ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி62.ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி63.ஓம் திருவுடை யம்மையே போற்றி64.ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி65.ஓம் திரிபுர சுந்தரியே போற்றி66.ஓம் திருநிலை நாயகியே போற்றி67.ஓம் தீந்தமிழ்ச் ச்சுவையே போற்றி68.ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி69.ஓம் தென்னவன் செவ்வியே போற்றி70.ஓம் தேன்மொழியம்மையே போற்றி
71.ஓம் தையல்நாயகியே போற்றி72.ஓம் நற்கனியின் சுவையே போற்றி73.ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி74.ஓம் நல்ல நாயகியே போற்றி75.ஓம் நீலாம்பிகையே போற்றி76.ஓம் நீதிக்கரசியே போற்றி77.ஓம் பக்தர்தம் திலகமே போற்றி78.ஓம் பழமறையின் குருந்தே போற்றி79.ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி80.ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி81.ஓம் பவளவாய்க் கிளியே போற்றி82.ஓம் பல்லுயிரின் தாயே போற்றி83.ஓம் பசுபதி நாயகியே போற்றி84.ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி85.ஓம் பாண்டிமா தேவியே போற்றி86.ஓம் பார்வதி அம்மையே போற்றி87.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி88.ஓம் பெரியநாயகியே போற்றி89.ஓம் பொன்மயிலம்மையே போற்றி90.ஓம் பொற்கொடி அம்மையே போற்றி91.ஓம் மலையத்துவசன் மகளே போற்றி92.ஓம் மங்கள நாயகியே போற்றி93.ஓம் மழலைக் கிளியே போற்றி94.ஓம் மனோன்மணித்தாயே போற்றி95.ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி96.ஓம் மாயோன் தங்கையே போற்றி97.ஓம் மாணிக்கவல்லியே போற்றி98.ஓம் மீனவர்கோன் மகளே போற்றி99.ஓம் மீனாட்சியம்மையே போற்றி100.ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி101.ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி102.ஓம் யாழ்மொழியம்மையே போற்றி103.ஓம் வடிவழகம்மையே போற்றி104.ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி105.ஓம் வேதநாயகியே போற்றி106.ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி107.ஓம் அம்மையே அம்பிகையே போற்றி108.ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி



இந்த போற்றியை சொல்லி அம்மன் அருள் பெறுங்கள் .

அம்மா கருணை மழை பொழிந்தால் மட்டுமே நமக்கு நல்ல வாழ்வு அமையும் என்று சொல்லி ,நம்பிக்கையுடன் அம்மனை வேண்டுங்கள் .அம்மா நம்முடன் என்றும் இருப்பாள் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன் .

வார  இறுதி நாளை நல்லா  என்ஜாய் பண்ணுங்க .மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 




























வியாழன், 30 ஜூலை, 2015

சங்கர நாராயணன்

சங்கர நாராயணன் 


தபசு என்றால் தவம் என்று பொருள்.ஆதிசக்தி கோமதியம்மனாக அவதரித்து,சிவனை நோக்கி தவமிருந்த விழாதான் ஆடி தபசு.

ஒரு காரியத்தில் இறங்கும்போது அதிலிருந்து சிறிதும் விலகாமல்,வெற்றி அடைவது மிகப்பெரிய செயல்.

ஏன் பார்வதிதேவி தவம் இருந்தார்கள்?

சங்கரன்,பத்மன் என்ற நாக அரசர்கள் இருந்தனர்.இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே அவர்கள் எலியும்,பூனையுமாக இருந்தனர்.அது என்ன தெரியுமா?அதுதான் சிவன் பெரியவரா?விஷ்ணு பெரியவரா? என்பதுதான்.

அதற்கு காரணம் சங்கரன்--வீர சைவன் 

                             பத்மன் ---பழுத்த வைணவன் 

நேராக இதற்கு விடைகாண,உலகாளும் அம்மா இருக்கும் கைலாயத்திற்கு போய் விவரத்தை சொன்னார்கள்.அம்மாள் புகுந்த வீட்டுபக்கம் பரிந்து பேசுவாளா?பிறந்த வீட்டு பக்கம் பரிந்து பேசுவாளா?

ஹரியும்,சிவனும் ஒன்றுதான் என்று எவ்வளவோ அம்மாள் சொல்லிப் பார்த்தாள்.அதிலும் ஹரியைத்தானே முதலில் சொல்றீங்கனு?வம்பு பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.அம்பாள் பாடு திண்டாட்டம் ஆயிருச்சு!

அம்பாளுக்கு இவர்கள் வாயால் சொன்னால் சரிபட்டு வர மாட்டார்கள் என்று சிவனை நோக்கி தபசில் உட்கார்ந்து விட்டாள்.ஒரு கையில் விபூதியும்,ஒரு காலை தூக்கியும் நம் அன்னை தவம் செய்தாள்.

காதல் கணவன் சிவபெருமான் கோமதிஅம்மன் முன் தோன்றினான்.அன்னையும் வரத்தை கேட்டாள்.

அன்னை கேட்ட வரத்தை கேட்டு ஈசன் ஒரு நிமிடம் ஆடி போனார்.அன்னையிடம்,நல்லா யோசித்துதான் இந்த வரத்தைக் கேட்கிறாயா?என்று கேட்டார்.ஆமாம் ஐயனே!நான் கேட்கும் வரத்தை உங்கள் அன்பு மனைவிக்கு தர மாட்டீர்களா?என்றால் அன்னை.

அந்த வரம் என்ன தெரியுமா?இதுதான்.

அன்னை தன்னுடைய இடப்பாகத்தை தன் அண்ணனுக்கு கொடுப்பதுதான்.

விஷ்ணு எங்கும் நிறைந்தவர்.தூணிலும்,துரும்பிலும் இருக்கும் என் அண்ணன் விஷ்ணுவை வாம பாகத்திலும் [இடப்பாகம்] காட்டி அருள வேண்டும் என்று அம்மாள் சிவனிடம் வரம் கேட்டாள்.

தேவி!உடலையும்,ஆத்மாவையும் பிரிக்க முடியுமா?அதுபோல் நானும்,ஹரியும் ஒருவரே! என்ற உண்மையை உலகத்திற்கு விளக்க,சங்கர நாராயணனாக காட்சி அளிக்கிறேன்  என்று கூறி, காட்சி கொடுத்தார் சிவபெருமான்.
ஹரி ஓம் நமசிவாய!

ஒரு புறம் சிவன் உருவம்,இடப்பாகம் விஷ்ணு 
ஒரு புறம் செம்மேனி,மறுபுறம் நீல மேனி 
ஒரு புறம் தலையில் கங்கை --சந்திரன் சடை முடி ,மறுபுறம் வஜ்ர மாணிக்க மகுடம்   
ஒரு புறம் புலித்தோல் ,மறுபுறம் பீதாம்பரம் 
ஒரு புறம் ருத்திராட்சம்,மறுபுறம் துளசி மாலை 

ஆடி பவுர்ணமி அன்று ஆடிதபசு விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது.சங்கர நாராயணன் சன்னதியில் விபூதி பிரசாதம்,துளசி தீர்த்தம் உண்டு.வில்வ அர்ச்சனையுடன் துளசி அர்ச்சனையும் செய்யப்படுகிறது.சிவனையும்,விஷ்ணுவையும் இணைக்கும் அம்மாளுக்கு குங்கும அர்ச்சனையும் உண்டு.

அம்மாளுக்கு எந்த குழந்தையிடமும் பேதம் பார்ப்பது இல்லை.சைவ குழந்தையோ,வைணவ குழந்தையோ என்றைக்கும் குழந்தை குழந்தைதான்.அம்மா அம்மா தான்.கோமதி தாய் திருவடியை 
வணங்குவோம்.

சங்கரன் கோவில் திருநெல்வேலியில் உள்ளது.இங்கு புற்றுமண் பிரசித்தி பெற்றது.இதை உடலில் பூசி,தங்கள் வயல் ,வீடுகளில் தெளித்து சுகம் பெறுவர்.உடல் நோய்,பூச்சிக்கடி நீங்கும்.

தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும்.வேண்டிய வரத்தை வேண்டியபடி தருவாள்.குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். சுபிஷங்கள் அனைத்தும் தேடி வரும். 

கருணைக்கடலான அம்பாள் நம் மீது கருணை மழை பொழிந்து ,நம்மை எல்லையில்லா ஆனந்த வாழ்க்கைக்கு அழைத்து செல்வாள்.

ஓம் சக்தி!ஓம் சக்தி !ஓம் 



































புதன், 29 ஜூலை, 2015

ஹயக்ரீவர்

ஹாய் ப்ரண்ட்ஸ் ,


       எல்லோருக்கும்  என் இனிய வணக்கம். கல்விக்கு தலைவி சரஸ்வதி தேவி என்பது அனைவரும்
அறிந்தது .இந்து சமயத்தில் இருப்பவர்கள் நம் கடவுளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் .
  கல்வி ,கலை  ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு  ஹயக்ரீவர் .குழந்தைகளுக்கு கல்வி 
கிடைக்க ஹயக்ரீவரை வணங்க வேண்டும் .

நான் என் பூஜையறையில்  வைத்து தினமும் வணங்கி வருகிறேன் . ஒவ்வொரு கடவுளும் நமக்கு 
ஒவ்வொரு விதத்தில்  பல நன்மைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் . நாம் 
ஒன்றே ஒன்று தான் செய்ய வேண்டும் .அதுதாங்க !கடவுள் நம்முடன்  கூட இருக்கிறார் .அவர் 
எது நடந்தாலும் நம்மை கை தூக்கி விடுவார் என்ற நம்பிக்கையை வையுங்கள்  .தொடர்ந்து சாமி 
கும்பிட்டுடே வாங்க .அவர் காலை விடாதீர்கள் . கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் .இது எல்லாம் என்  அனுபவத்தால்  சொல்லப்பட்ட உண்மைகள் .


இந்த பதிவை எழுதுவதே" நான் செய்த பாக்கியம் "என்று  நினைக்கிறேன் .

ஹயக்ரீவர் 


  

ஹயக்ரீவர் குதிரை முகமும் ,மனித உடலும் கொண்டவர் .விஷ்ணுவின் வடிவமாக கருதி ,வைணவர்கள் வழிபடுகிறார்கள் .இவர் கல்வி தெய்வம் .




மது ,கைடபன் என்ற இரு அசுரர்கள் .படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்து கொண்டு ,பாதாள உலகத்திற்கு சென்று ஒளிந்து கொண்டனர் .அதனை மீட்டு தரும்படி பிரம்மா ,காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார் . 

அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணு குதிரை முக  அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார் .இதன் ரூபமே ஹயக்ரீவர்.அசுரர்களிடம் வேதத்தை மீட்டு  பிரம்மாவிடம் தந்தார் .


லக்ஷ்மி ஹயக்ரீவர் 



அசுரர்களை  அழித்தப்  பின்னும் ஹயக்ரீவருக்கு கோபம் குறையாததால் ,லக்ஷ்மி தேவியை அவர் 
மடியில் அமர வைத்துள்ளார் .இங்க லக்ஷ்மி ஹயக்ரீவர் அழகாக காட்சி அளிக்கிறார்கள் என்பதை 
பாருங்கள் நண்பர்களே !




இதற்கு லக்ஷ்மி ஹயக்ரீவர் என்று பெயர் .

லக்ஷ்மி கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும்,லக்ஷ்மி உடனிருப்பதால்
செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் உள்ளார் .

அகத்திய முனிவருக்கு "லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தவர் ஹயக்ரீவர் .இதைக் கேட்டு மகிழ்ந்த அகத்தியர்,எந்த தலத்திற்கு சென்று  இதை அம்மன் முன் சொல்வது ?என்று ஹயக்ரீவரிடம் வேண்டினார்  .அகத்தியரை திருமியச்சூர்  கோவிலுக்கு  சென்று சொல்ல சொன்னார் ஹயக்ரீவர் .அதன்படியே ,அகத்தியரும்,அவர் மனைவியும் திருமியச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ர நாமத்தை சொன்னார்கள்  .

அம்பாள் மகிழ்ந்து  நவரத்தினங்களாக காட்சி தந்தாள் .அப்போது பாடியதுதான்

"நவரத்தின மாலை" 


ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்


"ஞானானந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆதாரம்ஸர்வ  வித்யானாம்ஹயக்ரீவம் உபாஸ்மஹே "


பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்வி கற்று ,சிறப்புடன் தேர்ச்சி அடைய இந்த பாடலை பாடி பயன் பெறுங்கள்.

ஹயக்ரீவருக்கு  வேக வைத்த கடலை பருப்பில் வெல்லம் ,தேங்காய் கலந்து நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், குறைவற்ற கல்வியை அள்ளி தருவார் .

என்ன நண்பர்களே !உங்கள்  குழந்தைகள் நன்றாகப் படிக்க ஹயக்ரீவரை வணங்குவீர்கள்! என்று நினைக்கிறேன் .

 நன்றி .மீண்டும் நாளை சந்திப்போம் .


உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி




செவ்வாய், 28 ஜூலை, 2015

வெற்றிலை , பாக்கு ,பழம்

அன்பார்ந்த நண்பர்களே


பக்தி மார்க்கத்தில் தழைத்து  இருக்கும் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் .

நாம் வீட்டில் ,கோவிலில்  பூஜை செய்யும் போது  வெற்றிலை , பாக்கு ,பழம் வைத்து  பூஜை செய்வோம்.அது எதுக்கு? என்று நிறைய பேர்களுக்கு தெரியாது .எது செய்தாலும் ஏன் ,எதுக்கு செய்கிறோம் என்று தெரிஞ்சு செய்தால், நாம் செய்கின்ற காரியம் சரியான முறையில் சென்றடையும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை .


நம் மூதாதையர் நமக்கு நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.நாம்தான் அதை பின்பற்ற மறந்து விடுகிறோம் . இனிமேலாவது அதைக் கடைபிடிப்போம்.

 சுவாமிக்கு ஏன் வெற்றிலை ,பாக்கு , பழம்  வைத்து பூஜை செய்கிறோம்?



வெற்றிலையும் , பாக்கும்  மகாலட்சுமியின் அம்சம் . வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும்,நடுவில்
சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் இருக்கிறார்கள் .வெற்றிலை ,பாக்கு ,பழம் வைத்து
இறைவனை வணங்குவது மரபு. வெற்றிலை,பாக்கு  வைத்து வணங்கவில்லையெனில், எந்த ஒரு பூஜையும்  நிறைவு பெறாது .


வெற்றிலை  ,நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


பாக்கு  செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது .பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும் .



வாழைப்பழம் பாவ  -புண்ணிய விடுதலையை குறிக்கும் .


தேங்காய் அறிவை தரும் .

 



தேங்காய் ,வெற்றிலை,பாக்கு ,பழம் வைத்து அர்ச்சனை செய்வது நமக்கு அறிவு,ஆரோக்கியம் ,
செல்வம் ,பாவ-புண்ணிய விடுதலை ஆகியவற்றை தர வேண்டும் என்பதால் தான் .


கருணை கடலான இறைவனை பூஜிக்கும் போது  இவற்றை வைத்து பூஜிக்க  வேண்டும் .

திருமணத்திற்கு அழைக்கும் போது  வெற்றிலை , பாக்கு, பழத்துடன் அழைக்க வேண்டும் .அதுதான்
மரியாதைக்குரிய செயல் ஆகும்.

விருந்தினர்களுக்கு சுப காரியத்தின் போது  நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் ஒரு
பொருளோடு வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து கொடுத்தால் நம் குடும்பம் செழித்தோங்கும் .

   மங்கள பொருளான வெற்றிலை,பாக்கை வலது கையால் வாங்க வேண்டும்.



 வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது .சீதை , "ராமன் போரில் ராவணனை வென்றான்" என்ற செய்தி கூற வந்த அனுமனிடம் ,"வெற்றி  உண்டாகட்டும் "என்று  வெற்றிலை மரத்தில் வெற்றிலையை பறித்து ஆசீர்வதித்தாள்.ஆகையால்  வெற்றிலை மாலை சார்த்தி ,அஞ்சநேயரை வழிபட்டால் வெற்றி  கிடைக்கும் என்பது  உறுதி .

வெற்றிலையை வாட விடுவது வீட்டிற்கு நல்லதல்ல .



வெற்றிலை ஒரு கர்ப்ப மூலிகை .இதனுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட தேவையான கால்சியம்
சத்து கிடைக்கும்.


வெற்றிலை நரை ,மூப்பு ,திரை ,சாக்காடு ஆகியவற்றை நீக்கி ,உடலை என்றும் நோயின்றி
வைத்திருக்க பயன்படுகிறது .  புற்று நோயை குணப்படுத்துகிறது. இருமல்,வாயு கோளாறு போக்கவல்லது .தீப்புண்ணை ஆற செய்கிறது .


என்னுடைய கருத்துக்கள்  உங்களுக்கு நல்ல பயன்களை தரும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும்
எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.

உங்கள்  கருத்தை எழுதினால் எனக்கு ஒரு தூண்டு கோலாக அமையும் .

நன்றி .வணக்கம் .

உங்கள் ஈஸ்வரி
















திங்கள், 27 ஜூலை, 2015

ஏகாதசி விரதம்

 ஹலோ ப்ரண்ட்ஸ்  


வணக்கம். நேற்று  ஞாயிற்று கிழமை என்பதால்  உங்கள்  குடும்பத்துடன்  ஜாலியாக நேரத்தை செலவழித்து   இருப்பீர்கள் என்று  நினைக்கிறேன் .நானும் பிஸியாக இருந்ததால் பதிவை போட  முடியவில்லை . அதனால்  என்ன? இன்னிக்கு போட்டா போச்சு .


இன்னிக்கு ஏகாதசி நாள் .ஆதலால்அதைப்பற்றி உங்களிடம்  பகிர்ந்து கொள்கிறேன் .

ஏகாதசி விரதம் 





மோட்சத்தை அளிக்கும் விரதம் ஏகாதசி விரதம்
இந்நாள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த
தினமாகவே உள்ளது .அமாவாசை ,பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் அமாவாசை ,பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில்
ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
 
இதில் வளர்பிறை 1 ஏகாதசியும் ,தேய்பிறை 1 ஏகாதசியும் வரும்.ஆண்டு முழுதும் வரும் ஏகாதசிக்கு
ஒவ்வொரு பெயர்களும் ,அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு
கிடைக்க பெரும் பயன்கள் பல இருக்கின்றது .

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனைத் தந்தாலும் வைகுண்ட பதவிக்கும் வழி வகுக்கும் என்பது சிறப்பு .

ஏகாதசி விரதம் இருப்பதால் என்ன பலன் கிடைக்கும்?



சித்திரை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி "காமதா ஏகாதசி ",தேய்பிறை ஏகாதசி "பாப மோகினி
ஏகாதசி " என்றும் அழைக்கப்படுகிறது . இந்த இரு விரதங்களை இருப்பவர்களுக்கு விரும்பிய
அனைத்து பேறும்  கிடைக்கும் .


வைகாசி மாதம் வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி "மோகினி ஏகாதசி ",தேய்பிறையில் வரும்
ஏகாதசி "வருதித்  ஏகாதசி "என்றும் அழைக்கப்படுகிறது . இந்த ஏகாதசி காலங்களில் விரதம்
இருப்பவர்கள் அனைவரும் ,இமய மலை சென்று பத்ரி நாதரை தரிசனம் சென்று வந்ததற்கான
பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.


ஆனி மாதத்தில் வரும்  வளர்பிறை ஏகாதசி  "நிர்ஜலா ஏகாதசி" என்றும் ,தேய்பிறை ஏகாதசி
"அபார ஏகாதசி "என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தினை இருப்பவர்கள் சொர்க்கத்தை
அடைவார்கள் .

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "சயனி ஏகாதசி",தேய்பிறை ஏகாதசி "யோகினி ஏகாதசி "
என்றும் கூறுவர் .இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள்
கிடைக்கும்.


ஆவணியில் வரும் வளர்பிறை ஏகாதசி "புத்ரஜா " என்றும் ,தேய்பிறையை  "காமிகா" என்றும் கூறுவர்.இந்த விரதத்தை மேற்கொண்டால் மக்கட் பேறு கிடைக்கப் பெறுவார்கள் .


புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "பத்ம நாபா " ,தேய்பிறையில் வரும் ஏகாதசி "அஜா "என்றும் பெயர் பெற்றது .இந்த விரதம் இருப்பவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் .

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா "என்றும்,தேய்பிறையில் வரும் ஏகாதசி
"இந்திரா" என்றும் அழைக்கப்படுகிறது .இந்த விரதம் இருந்தால் வறுமை ஒழியும். நோய் அகலும் .
பசிப்பிணி நீங்கும் .நிம்மதி நிலைக்கும் .தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.


கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "பிரபோதின் " எனப்படும்.இந்த விரதம் இருந்தால்
இருபத்தியோரு தானம் செய்வதற்கான பலனும் ,தேய்பிறை ஏகாதசியான "ரமா " தினத்தில்
இறைவனுக்கு பழங்களை கொண்டு நெய்வேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும் .

மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி "என சிறப்பாக கொண்டாடப் படுகிறது .

ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும் .


அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும் .இம்மாதம் மகாவிஷ்ணு
அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம் .ஆகவே தான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு
வாய்ந்தது .தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி ஏகாதசி"எனப்படும் .

தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரதா "என்றும்,தேய்பிறை ஏகாதசி "சுபலா "என்றும் கூறுவர் .
இந்த விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் ,ஒளிமயமான வாழ்வு அமையும்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா ",தேய்பிறையில் வரும் ஏகாதசி "ஷட் திலா " என்றும் கூறுவர் இந்த விரதம்ம்  இருப்பதால் மூதாதையரின் பக்திக்கான வழியை பெறுவார்கள்.


பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "விஜயா " ஏகாதசி .இந்நாளில் விரதம் இருந்தால்
7 வகையான தானியங்களை  ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மகா விஷ்ணுவை வணங்கினால்
கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர் .

வளர்பிறை ஏகாதசி "ஆமலகி"என்றும் அழைப்பர்.இந்நாளில்  விரதம் இருந்தால் பசி தானம் செய்த பலன் கிடைக்கும்.


ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி "அன்று மகா லக்ஷ்மியை வழிபடுவது சிறப்பு .



என்ன தோழிகளே! ஏகாதசியைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் . இன்னும் பல பதிவுகளை உங்களுடன்பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் . இந்த ப்லாக்குடன் என்னுடைய புதிய வெப்சைட்பக்திதமிழ்.காம்  வெளி வருகிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அதுவும் பல தகவல்கள் இன்னும் அதிகமாக தரும் .அதையும் பார்த்து எல்லா நலமும் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க நான் வணங்கும் மூன்று தேவியரையும் பிராத்திக்கிறேன் .நாளை சந்திப்போம் .


உங்கள் அன்பு சகோதரி ஈஸ்வரி
























சனி, 25 ஜூலை, 2015

சித்தர்கள்

ஹலோ பிரண்ட்ஸ் ,

எல்லோருக்கும் வணக்கம். .இன்னிக்கு சித்தர்களைப்  பற்றி பார்க்கலாம்.  என் கணவர் கொடுத்த ஊக்கத்தினால் இந்த பதிவை எழுதுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .


 சித்தர்கள்



சித்தர் என்றால்  சித்தி பெற்றவர் ,சிந்தனை உடையவர் என்பது பொருள் .சிவத்தை நினைத்து
அகக்கண்ணால் கண்டு ,தியானித்து தரிசனம் செய்து ,ஆத்ம சக்தியை எழுப்பி ,செயற்கரிய
காரியங்களை செய்வது சித்தர்களது செயலாகும் .

உலகில்,கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது.அதனால் நமது கோரிக்கைகள்
கடவுளிடம் போய்  சேர ஒரு கருவியாக இருப்பவர்கள் சித்தர்கள் .கடவுளிடம் கேட்பதை ,
சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள் .


சித்த  நிலைக்கு எவ்வாறு உயரலாம்?


          முதலில் தன் மனதை அறிந்து ,பின் தன்னை அறிந்து ,பின் இறையை அறிந்து இறுதியில்
சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு .


         அவரவர் செய்த பாவ,புண்ணியங்களுக்கு ஏற்ப இன்பத்தையும் ,துன்பத்தையும் அனுபவிக்க
வேண்டும் என்பது விதி .அதனை நிறைவேற்றத் தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன .


         பரிகாரங்கள் செய்தாலும் ,சில சமயங்களில் மனிதனின் கர்ம வினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருக்குமானால்
அதிலிருந்து காப்பற்றுவது யார் ?


சித்தர்கள் மனிதனிடம் எதிர்பார்ப்பது எதுவும் இல்லை.அவர்கள் வலியுறுத்துவது உண்மை ,
நேர்மை,கருணை அன்பு ,தூய்மையான வாழ்க்கை மட்டுமே .




மற்றவர்களுக்கு உதவும் நல்ல  எண்ணம் ,நல்ல செயல் ,நல்ல சிந்தனை செயல்படுபவர்களுக்கு
சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும் .

இன்று பல  பிரசித்தி  பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருப்பதைக் காணலாம்.


அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வேண்டினால் நினைத்தது நடக்கும்.
நாம் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை தேடி தரும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை .

நான் கூட மகாலிங்க மலையில்  நிறைய சித்தர்கள் இருப்பதைப் பார்த்திருக்கேன்.

இன்று பழனி மலை பிரபலமாகவும் இருப்பதற்கு சித்தர்கள் ஒரு காரணம் .அந்த ஸ்தலத்தில்
நவ பாஷானத்தால்  குமரன்  வடிவேலனை உருவாக்கியவர் போக சித்தர் .



எல்லா மக்களும் திருப்பதி மலை நோக்கி செல்வதும் அங்குள்ள கொங்கணர் சித்தரே காரணம் .

அன்பு ,அருள், சிவம்,அளவற்ற சக்தி ஒருங்கே பெற்றுள்ள 18 சித்தர்கள் இன்று அருள் தரும்
சன்னிதிகள்.

18 சித்தர்கள்



திருமூலர் = சிதம்பரம்



இராமதேவர் =அழகர் மலை
அகத்தியர் =திருவனந்தபுரம்
கொங்கணர் =திருப்பதி
கமலமுனி =திருவாரூர்
சட்டை  முனி =திருவரங்கம்
கருவூரார் =கரூர்
சுந்தரனார்= மதுரை
வான்மீகர்  =எட்டிக்குடி
நந்தி தேவர் =காசி
பாம்பாட்டி சித்தர்= சங்கரன் கோவில்
போகர் =பழனி
மச்ச முனி = திருப்பரங்குன்றம்
பதஞ்சலி =இராமேஸ்வரம்
தன்வந்திரி = வைதீஸ்வரன் கோவில்
கோரக்கர் = பொய்யூர்
குதம்பை சித்தர் = மாயவரம்
இடைக்காடர் =திருவண்ணாமலை


வெறும் 18 சித்தர்கள் மட்டும் சித்தர்கள் அல்ல.


நாடு,நகரம்,மொழி ,இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள் .அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே .


அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால் ,திருக்கரத்தால் ஆசிர்வதித்தால் ,மனிதனிடமிருந்து
ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால் மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்று கொள்கிறார்கள்  என்பது பொருள் .அதன்பின் அந்த மனிதனின் வாழ்க்கை செம்மையாகவும் ,
நன்றாகவும் இருக்கும். நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கு சித்தர்கள் உதவ மாட்டார்கள் .


என்ன பிரண்ட்ஸ்! சித்தர்களை நாமும் வணங்கி நலம் பெற்று ஆனந்தமாக இருப்போம்.


என்  பதிவை எல்லா நாட்டிலும் பார்க்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கிறது .என்னுடைய பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய கமெண்ட்ஸ்யை எனக்கு  எழுதினால் அது என்னை ஊக்குவிப்பது போல் இருக்கும்.




நன்றி ,வணக்கம் .

நாளை மீண்டும் மற்றொரு பதிவில் ,












வெள்ளி, 24 ஜூலை, 2015

குத்து விளக்கு

நலம் தரும் குத்துவிளக்கு


         இந்துக்கள் பெரும்பாலான வீடுகளில்  குத்து விளக்கை வைத்து பூஜை செய்வதை எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். சில பேர் பாத்தும்  கூட இருக்கலாம் . குத்து விளக்கைப்  பற்றி சொல்லலாம் என்று  நான்  வந்திருக்கேன்.  விளக்குகளில் எத்தனையோ  விளக்குகள் இருக்கின்றன . அதில்  காமாட்சி விளக்கு ,குத்து விளக்கை   அம்பாளாக எண்ணி வணங்க வேண்டும் .

குத்து விளக்கு தெய்வீகமானது .தெய்வீக அம்சம் பொருந்தியது .குத்து விளக்கின் அடிப்பாகம்
பிரம்ம  அம்சம் ,நீண்ட நடுப்பகுதி விஷ்ணு அம்சம் ,மேற்பகுதி சிவ அம்சம் ஆகும். இந்த மூன்று
பாகம் சேர்த்து  குத்து விளக்கு என்பர் .


ஒளி வெளியே இருந்தால் மட்டும் போதாது .நம் உள்ளேயும் ஒளி இருக்க வேண்டும் .உள்ளும்
புறமும் ஒளி ஏற்றி அஞ்ஞான  இருள் அகலவே விளக்கு வழிபாடு  நம் பூஜையறையில் அவசியம்
செய்ய வேண்டும் .

அதிகாலை எழுந்ததும் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி
வைக்க வேண்டும் .தீபம் லக்ஷ்மி வாசம்  செய்யும் இடம்.காலை ,மாலை விளக்கு ஏற்றுவது நல்லது .
பூஜையறையில் 24 மணி நேரமும் விளக்கு எரிய வேண்டும் .

ஐந்து முக விளக்கு ஏற்றினால் சகல செளபாக்கியம் அத்தனையும் நமக்கு கிடைக்கும் .குத்து
விளக்கில் 5 முகங்களும் 5 குணங்களை சொல்கின்றன .அவை

அன்பு ,மன உறுதி ,நிதானம் ,சம யோகித புத்தி ,பொறுமை


விளக்கு பூஜை செய்ய உகந்த நாட்கள்


             வெள்ளிகிழமை ,கார்த்திகை ,பெளர்ணமி ,ஆடி செவ்வாய் , ஆடி வெள்ளி ,தை செவ்வாய் ,
தை வெள்ளி ,விசாகம்,அமாவாசை,சதுர்த்தி ,பஞ்சமி ,ஏகாதசி ஆகிய திதிகள் ,நவராத்திரி,சிவராத்திரி போன்ற நாட்களில் குத்து விளக்கு ஏற்றி வழிபட   வேண்டும் .

குத்து விளக்கு  108 மந்திரம் சொல்லி ,குங்கும அர்ச்சனை
அல்லது பூவால்  அர்ச்சனை செய்தால்  நன்மை பல கிடைக்கும் .

குத்து விளக்கு 108 மந்திரம்


பொன்னும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி 
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 
முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 
மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 
வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி! 
இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 
பிறர் வயமாகா பெரியோய் போற்றி 
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 
பேரருட் கடலாம் பொருளே போற்றி ! 
முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 
மூவுலகுந்தொழ மூத்தோய் போற்றி 
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி ! 
இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 
மங்கல நாயகி மாமணி போற்றி 
வளமை நல்கும் வல்லியே போற்றி 
அறம் வளர்நாயகி அம்மையே போற்றி 
மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி ! 
மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி 
தையல் நாயகித் தாயே போற்றி 
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி 
முக்கட் சுடரின் முதல்வி போற்றி 
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி! 
சூடாமணியே சுடர் ஒளி போற்றி 
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி 
அருள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி 
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி 
இல்லற விளக்காம் இறைவி போற்றி! 
சுடரே விளக்காம் தூயாய் போற்றி 
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி 
எரி சுடராய் நின்ற இறைவி போற்றி 
ஞானச் சுடராய் நின்றாய் போற்றி 
அருமறைப் பொருளாம் ஆதிபோற்றி ! 
தூண்டு சுடர் இனிய சோதி போற்றி சோதியே போற்றி 
சுடரே போற்றி ஓதும் உள் ஒளி விளக்கே போற்றி 
இருள் கெடுக்கும் இல்லத்து விளக்கே போற்றி 
சொல்லக் விளக்காம் சோதியே போற்றி! 
பலர்காண் பல்கலை விளக்கே போற்றி 
நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி 
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி 
உணர்வுசூழ் கடந்ததோர் விளக்கே போற்றி 
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி ! 
உள்ளத் தகளி விளக்கே போற்றி 
மடம்படும் உணர் நெய் விளக்கே போற்றி 
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி 
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி 
நோக்கு வார்க்கு எரிகோள் விளக்கே போற்றி ! 
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி 
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி 
சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி 
தில்லைப் பொதுநட விளக்கே போற்றி 
கற்பனை கடந்த சோதியே போற்றி ! 
கருணையே உருவாம் விளக்கே போற்றி 
அற்புதக் கோல விளக்கே போற்றி 
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி 
சிற்பர வியோம விளக்கே போற்றி 
பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி ! 
உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி 
கள்ளப் புலனை கரைப்பாய் போற்றி 
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி 
பெருகு அருள் சுரக்கும் பெரும் பொருள் போற்றி 
இருள் சேர் இருவினை எறிவாய் போற்றி ! 
அருவே உருவே அருவுரு போற்றி 
நந்தா விளக்கே நாயகியே போற்றி 
செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி 
தீபமங்கல ஜோதி விளக்கே போற்றி 
மதிப்பவர் மனமணிவிளக்கே போற்றி ! 
பாகம் பிரியா பராபரை போற்றி 
ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி 
ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி 
ஊழி ஊழி உள்ளோய் போற்றி 
ஆழியான் காணா அடியோய் போற்றி ! 
ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி 
அந்தமிலா இன்பம் அருள்வாய் போற்றி 
முந்தைய வினையை முடிப்போய் போற்றி 
பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி 
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி ! 
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி 
இருநில மக்கள் இறைவி போற்றி 
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி 
ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி 
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி ! 
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி 
எத்திக்குந் துதிஎய்தாய் போற்றி 
அஞ்சேலென்றருளும் அன்பே போற்றி 
தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி 
ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி ! 
ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி 
எல்லா உலகமும் ஆனாய் போற்றி 
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி 
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் போற்றி 
செல்வாக்கு செல்வம் தருவாய் போற்றி ! 
பூங்கழல் விளக்கே போற்றி போற்றி 
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி 
உயிர்களின் பசிப்பிணி ஓழித்தருள் போற்றி 
செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி 
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி ! 
விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் 
போற்றி நலம் எல்லா உயிர்க்கும் நல்குக போற்றி 
தாயே நின்னருள் தந்தாய் போற்றி 
தூய நின் திருவடி தொழுதனம் போற்றி போற்றி 
என்பார் அமரர் விளக்கே போற்றி ! போற்றி 
என்பார் மனிதர் விளக்கே போற்றி போற்றி 
என் அன்பொளி விளக்கே போற்றி போற்றி! போற்றி! 




விளக்கு வைத்தவுடன் என்ன செய்யக் கூடாது ?
---------------------------------------------------------
விளக்கு ஏற்றியவுடன் தலை சீவக் கூடாது .

வீட்டை பெருக்கக்கூடாது .

வெளியே செல்லக் கூடாது .

துணி துவைப்பது ,தலைக்கு குளிப்பது கூடாது .

அம்பாள் வரும் நேரம் உறங்கக்  கூடாது .

சாப்பிடக்கூடாது .

பால்,மோர்,உப்பு ,தவிடு ,சுண்ணாம்பு ,அரிசி ,கடன் கொடுக்கக் கூடாது .


விளக்கு பூஜை செய்வோருக்கு

-------------------------------------

இரு  விளக்கு வைத்து வணங்கக் கூடாது .1 அல்லது 3 விளக்கு வைத்து வழிபட வேண்டும் .நெய் தீபம் சிறந்தது .

விளக்கை கிழக்கு திசை நோக்கி வைப்பது சிறப்பு .கிழக்கு ,வடக்கு பார்த்து சாமீ கும்பிடுவது நல்லது .

அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும் ,தலை உச்சி வகிடுலும் வைத்து வர கணவர் நலமுடன் வாழ்வர் .

பூஜை செய்யும் போது  விளக்கை தலைவாழை இலையிலோ ,தாம்பாள  தட்டிலோ வைத்து  பூஜை
செய்ய வேண்டும் .

விளக்கின் சுடர் நிதானமாக எரிய வேண்டும் .தானாக அணையக் கூடாது .

விளக்கின் சுடரில் மகாலட்சுமி வாசம் செய்வதால் கையால் வீசி  அணைக்கவோ ,வாயால் ஊதி
குளிர வைப்பது குற்றம் .பூவால் அணைத்து குளிர செய்யலாம் .திரியை உள்ளே இழுத்து ஒளியை
எண்ணெயில்  மறைய செய்யலாம் .

என்ன திரி போட்டால் என்ன நன்மை ?


தாமரை  திரி ----மனதிற்கு பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும் .

 வாழை திரி ----மக்கட் பேறு

வெள்ளை எருக்கு பட்டை தீபம் ---துர் ஆவிகளிடமிருந்து காப்பாற்றும் .

உங்கள் மனை விளங்க ,குலம் விளங்க விளக்கேற்றி வழிபடுங்கள்

மீண்டும் நாளை சந்திப்போம்

உங்கள் ஈஸ்வரி