திங்கள், 30 ஏப்ரல், 2018

மேன்மை சிறக்க வைக்கும் ஸ்ரீசக்ரமும்,அதன் தலங்களிலும்

தொடர்புடைய படம்

மேன்மை சிறக்க வைக்கும் ஸ்ரீசக்ரமும்,அதன் தலங்களிலும் 

சில கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பிகையின் பீடமாகவோ அல்லது அம்பிகைக்கு எதிரிலோ இவ்வாறு  அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம் மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆதிசங்கரர் போன்ற பரமாசார்யார்களால் நிறுவப்பட்ட இந்த ஸ்ரீசக்ரம் நமக்கு  நல்வாழ்வளித்து மேன்மை சிறக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது. சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமானது ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரத்தின் நடுவில்  பிந்துவும் சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. இந்த அமைப்பில் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ்நோக்கிய  ஐந்து சக்தியையும் குறிக்கும். எல்லையற்ற சக்தி, ஞானம், கல்வி, ஆரோக்கியம், முக்தி என அனைத்தையும் நல்கும் அற்புதச் சக்ரம் இது.  பாரத நாட்டில் 180க்கும் மேல் உள்ள தலங்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில தலங்களை நவராத்திரி காலத்தில்  தரிசிப்போம்:



திரு ஆனைக்காவல்: பஞ்சபூத ஸ்தலங்களில் இது அப்பு ஸ்தலம். அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர தாடங்கங்களை  சாத்தினார். இதில் ஒரு சக்ரம் சிவ சக்ரம் மற்றொன்று சக்தி சக்ரம் எனப்படும் ஸ்ரீசக்ரமாகும்.

* திருவிடைமருதூர்: இங்குள்ள மூகாம்பிகை சந்நதியில் பஞ்சலோகத்தினால் ஆன 12”x12”x12” என்ற அளவு கொண்ட ஸ்ரீசக்ரம் உள்ளது.  அம்பிகையே கிளி வடிவில் தோளில் அமர்ந்த பாக்யம் பெற்ற பாஸ்கரராயர் எனும் தேவி உபாசகரால் பூஜிக்கப்பட்ட சக்ரம் இது என்பது  விசேஷ செய்தியாகும்.

வேளச்சேரி: சென்னையில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வர் ஆலயத்தில் கருணாம்பிகையின் பாதங்களின் அருகில் ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டுள்ளது.

மாங்காடு: மிகப்பெரிய ஸ்ரீசக்ர கோயில். பல்லவர் காலத்தியது. கர்ப்பகிருகத்தில் உள்ள 6 அடி x 6 அடி x 3 அடி என்ற அளவிலான ஸ்ரீசக்ரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஏராளமான அதிசய ரகசியங்களைக் கொண்ட இந்தக் கோயிலில் இந்த சக்ரம் அர்த்த மேரு  வடிவில் அமைந்து பரவசப்படுத்துகிறது. 

திருவொற்றியூர்: இங்குள்ள தியாகராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வட்டப்பாறை அம்மன் சந்நதியில் கல்லினால் வட்டவடிவமான  மூன்றரை அடி குறுக்களவும், 1½ அடி உயரமும் உள்ள காளியந்திரம் ஆதிசங்கரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம்: இங்குள்ள சிவாலயத்தில் தேவிசந்நதியின் அருகில் ஸ்ரீசக்ரத்திற்காகவே தனி சந்நதி உள்ளது. 2’ x 2’ x 1’4” என்ற அளவில்  கருங்கல்லினால் ஆன ஸ்ரீசக்ரம் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது பராசக்தி பீடம் என போற்றப்படுகிறது.

* காஞ்சிபுரம்: இந்த நகரமே ஸ்ரீசக்ரவடிவிலானது. இங்கு பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காமகோடி என்னும் பெயர் பெற்ற  ஸ்ரீசக்ரத்தில் அம்பாள் காமாக்ஷி நித்ய ஸாந்நித்திய மாக விளங்குகிறாள். இந்த சக்ரத்தைச் சுற்றிலும் திருமியச்சூரில் லலிதா
ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எழுந்தருளியுள்ளனர்.

* குஜராத், த்வாரகா நகரில் உள்ள ஆலயத்திலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தை நிறுவியுள்ளார். கேரளத்தில் ஸ்ரீசக்ரம் பதிக்கப்பெற்ற ஆலயங்கள்  ஏராளம். கொடுங்களூரில் உள்ள பத்ர காளி சிலையின் அடியில் ஐந்து ஸ்ரீசக்ரங்களை ஆதி சங்கரர் ஸ்தாபித்துள்ளார்.

காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகளும்,பின்பற்ற வேண்டியவைகளும்


காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகளும்,பின்பற்ற வேண்டியவைகளும் தொடர்புடைய படம்ஜனவரி  8, 1994 ஆம் ஆண்டு தான் மகாபெரியவா  ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார்.

பெரியவர் தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும்.

மகாபெரியவரின் அந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.

1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்

2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள்

3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை,

4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு

5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.

6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு

7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்

8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்

9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்

10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.

இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.

இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.

கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’ – இதுதான் பெரிய
வருக்கே தியான மந்திரம்!
perumal க்கான பட முடிவு
கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.

‘பஜகோவிந்தம்’ என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.

இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பரமாத் மாவை பஜியுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லாமல், ‘கோவிந்தனைப் பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?

கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ‘அச்சுத, அனந்த, கோவிந்த’ என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ‘பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்’ என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.

ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.

‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று ஒரு இடத்திலும், ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும், ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.”

இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ‘எல்லாம் போச்சு… கோவிந்தா’ எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.







“நோயைக் குணப்படுத்த பெரியவா சொன்ன பரிகாரம்”

தொடர்புடைய படம்

“நோயைக் குணப்படுத்த பெரியவா சொன்ன பரிகாரம்”


பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்

காமாக்ஷி ஸ்தோத்திரம்தொடர்புடைய படம்
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
 மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
கஷ்ட நிவாரணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி 
குரு குஹ ஜனனி குறு கல்யாணம் குஞ்சர ஜனனி காமாக்ஷி 
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
==
பாராயணம் செய்யும் முறை kamakshi vilakku  images க்கான பட முடிவு
ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் காமாக்ஷி விளக்கை வைத்து,அதற்க்கு சந்தனம்,குங்குமம்,பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.முதலில் தெரிந்த விநாயகர் துதி சொல்ல வேண்டும்.பிறகு விளக்கை  ஏற்றி (நெய் விட்டு ஏற்றுதல் சிறப்பு)அதில் தீபலக்ஷ்மியை எழுந்தருளப் பிரார்த்திக்கவும்.பிறகு மேலே உள்ள காமாக்ஷி  ஸ்தோத்திரத்தை 7முறை பாராயணம் செய்யவும்.
பிறகு நம்மால் இயன்ற நிவேதனம் (பால்,பழம் ,முடிந்தால் ஏதேனும் இனிப்பு)செய்து,வெற்றிலை,பாக்கு ,பழம் நிவேதித்து கற்பூரம் காட்ட வேண்டும்.இந்தத் தாம்பூலத்தை பூஜை முடிந்த பின் சுமங்கலிகளுக்குத் தருதல் வேண்டும்.
ஏழு முறை ஆத்மபிரதக்ஷிணம்(நின்ற இடத்தில்,நமக்கு நாமே சுற்றுவது)செய்ய வேண்டும்.ஒவ்வொரு பிரதக்ஷிணத்துக்கும் ஒவ்வொரு நமஸ்காரம் வீதம் 7முறை நமஸ்கரிக்க வேண்டும்.
பின்,இரு கரங்களிலும் பூக்கள் எடுத்து விளக்குக்கு சமர்ப்பித்து,மஞ்சள் குங்குமம் கரைத்த ஆரத்தி நீராகி சுற்றிக்காட்டி,பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.இந்த நீரை,கால்படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்கோ (11,21,ஒரு மண்டலம் )ஒரு மண்டலம் என்பது 48நாட்கள் ஆகும்.அல்லது செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளிலோ செய்து வர காமாக்ஷி அம்மனின் கிருபையால்,சுபகாரியத் தடை  விலகி நலம் உண்டாகும்.

கருடாழ்வார் பெருமாளின் வாகனமானது எப்படி?

கருடாழ்வார் பெருமாளின் வாகனமானது எப்படி?



திருமாலிடம் சதாசர்வகாலமும் தொண்டு செய்துவரும் நித்ய சூரிகளில் முக்கியப் பங்கு வகித்து, நமக்காகப் பரிந்துரைசெய்து, வரங்களைப் பெற்று நமக்கு அருளும் கருடாழ்வாரைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?
திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய பொறுப்பில் இருக்கும் கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தில்.

கருடாழ்வாரின் கதை:
காசியப முனிவருக்கும் ,விநதாவுக்கும் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் கருடாழ்வார்; மற்றொருவர் சூரியனின் தேர்ப்பாகன் அருணன். இரண்டாவது மனைவி கத்ருதேவியின் புத்திரர்கள், அநேக கோடி சர்ப்பங்கள்.

பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளிப்பட்ட உச்சைசிரவம் என்ற வெண்குதிரையில் இந்திரன் பவனி வந்ததை, ஒரு சமயம் விநதாவும் கத்ருதேவியும் கண்டனர். வெண்குதிரையின் அழகை விநதா புகழ்ந்தாள். அதைப் பொறுக்காத கத்ரு, குதிரை முழுவதும் வெள்ளை இல்லை; வால் கறுப்பு என்று குதர்க்கம் பேசினாள். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பந்தயம் கட்டுவதில் முடிந்தது. எவர் சொன்னது சரி என்று ஊர்ஜிதமாகி, வெற்றி பெறுகிறாரோ அவருக்குத் தோற்றவர் அடிமை என்று முடிவாகிறது.
கார்க்கோடகனின் விஷமச் செயல்! 

கத்ருவோ தன் பாம்புப் பிள்ளைகளிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, மூத்தவளையும் அவள் பிள்ளைகளையும் அடிமைப்படுத்த இது நல்ல தருணம் என்றாள். இந்திரனின் வெண்குதிரையின் வாலில் நாகம் சுற்றிக்கொண்டால் கறுப்பு வால் போன்று தெரியும் என யோசனையும் சொல்கிறாள். இதற்கு கார்கோடகன் என்ற ஒரு மகனைத் தவிர, மற்றவர்கள் மறுக்கின்றனர். கார்க்கோடகன் தன் அம்மாவின் சொல்படி இந்திரனின் குதிரையின் வாலில் சுற்றிக்கொண்டு, தன் விஷ மூச்சையும் செலுத்தி, வால் கறுப்பு நிறமாகத் தோன்றும்படி செய்கிறான். அதை நம்பி ஏமாறும் விநதாவும், அவள் பிள்ளைகளும் கத்ருவுக்கு அடிமை ஆகிறார்கள். அவளும், இவர்களுக்குக் கடுமையான வேலைகளை ஏவி, கொடுமைப்படுத்துகிறாள். 

தாயின் துயரம்!
தாய் துயருறுவதைக் கண்டு பொறுக்காத கருடன், சித்தியிடம் அவளை விடுவிக்கும்படி வேண்ட, அவளோ தேவர்களின் பாதுகாப்பில் தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், தாயையும் மற்றவர்களையும் விடுதலை செய்வதாகக் கூறுகிறாள்.
கருடன் உடனே அமிர்த கலசத்தைக் கொண்டு வர, தேவலோகம் சென்று, தேவர்களோடு யுத்தம் செய்கிறார். இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாக்குகிறான். எனினும், பலசாலியான கருடனுக்கு வஜ்ராயுதம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், இந்திரனுக்குப் பெருமையும், வஜ்ராயுதத்துக்கு மதிப்பும் தரவேண்டும் என்கிற எண்ணத்தில், கருடன் தன் சிறகிலிருந்து ஒரு துளியை மட்டும் உதிர்த்துவிட்டு, இந்திரனிடமிருந்து பெற்ற அமிர்த கலசத்துடன் புறப்படுகிறார். 
அமிர்த கலசத்துக்கு அனுமதி
இதைக் கண்ட தேவாதி தேவர்கள், கொடிய பாம்புகளுக்கு அமிர்தம் கிடைத்துவிட்டால் விபரீதமாகிவிடுமே என்று அஞ்சி, திருமாலிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து திருமால், கருடன் மீது போர் தொடுத்தார். கருடனிடமிருந்து அமிர்த கலசத்தை மீட்கும்பொருட்டு,  திருமாலுக்கும், கருடனுக்கும் தொடர்ந்து 21  நாட்கள் போர் நடந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. தாய் மீது அளவற்ற பற்று வைத்திருந்த கருடனின் மன உறுதியைப் பாராட்டி, இறுதியில் அந்த அமிர்த கலசத்தைக் கொண்டு செல்ல, அனுமதி அளிக்கிறார் திருமால்.

வாகனமாக இரு!
தன்னுடன் போரிட்டு அமிர்த கலசத்தைப் பெற்ற கருடனுக்கு, திருமால் என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, கருடனோ தான் வெற்றிபெற்ற அகந்தையில், உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேட்டால், அதை நான் தருகிறேன்・என்கிறார். இறைவனும் உடனே, சரி, எனக்கு வாகனமாக இருந்து, சேவை சாதிப்பாயாக!・என வரம் கேட்டதாகப் புராணம் விவரிக்கிறது. 

கருடன் தனது ஆணவத்தைத் துறந்தார்.  அப்படியே ஆகட்டும் ஐயனே! என் தாயை மீட்டவுடன், ஓடோடி வந்து தங்களுக்குச் சேவை செய்கிறேன்・என வாக்களித்துவிட்டுச் செல்கிறார். பிறகு, சித்தியிடம் அமிர்த கலசத்தைக் கொடுத்து தாயையும் சகோதரரையும் மீட்ட பின்பு, சொன்னது போலவே வைகுண்டம் வந்து, திருமாலிடம் சேவை செய்யத் தொடங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பெற்ற தாயைப் போற்றி வணங்குங்கள்!
திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமை, திருமாலுக்கே வாகனமான பெருமை என இரு பெரும் பேறுகள், பெற்ற தாயைப் போற்றி வணங்கியதன் காரணமாக கருடனுக்குக் கிடைத்தன.

தாயைப் போற்றி வழிபட்டு வந்தால், வீரம், விவேகம் மட்டுமின்றி, என்றும் நீங்காத இறை இயல்புகளும் கிடைக்கும் என்பதை கருடாழ்வாரின் கதை நமக்கு உணர்த்துகிறது. அவர் திருமாலுக்கு அருகிலேயே இருந்து, அனுதினமும் தொண்டு செய்து வருவதைப் பயன்படுத்தி, பெரிய திருவடியான கருடாழ்வாரிடம் நம் வேண்டுதல்களை வைத்தால், அவர் திருமாலிடம் நமக்காகப் பரிந்து பேசி, வேண்டும் வரங்களைப் பெற்றுத் தருவார்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

குரு வார விரதம் எப்படி இருக்க வேண்டும்?



குரு வார விரதம் எப்படி இருக்க வேண்டும்?
raghavendra image க்கான பட முடிவுகுரு வார விரதம் க்கான பட முடிவுmaha periyava images க்கான பட முடிவு




ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின்அருளைப் பெறலாம்.

· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை  வழிபடுவதன்மூலம்குருவின்அருளைப்பெறலாம்.

· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும்,
ஏழைகளுக்கும்தானம்செய்வதாலும், குரு பகவானின்அருளைப்பெறலாம்.

· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

· தாங்கள் படித்த பள்ளியின்ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின்அருளைப்பெறலாம்.

· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக
உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில்அமைதியை நிலவச்செய்வார்.

· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !

• மடப்புரம் தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சமாதியில் வழிபாடு செய்தாலும்
  குருவின் அருள் கிடைக்கும்.

• பெருவள நல்லூரில் (லால்குடி அருகில்) உள்ள நந்தி அடிகள் சமாதியில்
   வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்.

• மந்திராலயம் ராகவேந்திரர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
  அருள் கிடைக்கும்.

• ஷீரடி சாய் பாபா சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின் அருள்
  கிடைக்கும்

• திருவண்ணாமலை ஸ்ரீ ஷேசாத்ரி சுவாமிகள் சமாதியில் வழிபாடு
  செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்

• திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
  அருள் கிடைக்கும்

• வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு
  வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்

• திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சமாதியை வழிபாடு
  செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்

குரு வார விரதம்:

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால்
எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும். ஏழ்மையில் இருப்பவர்களும்,
திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை
இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை
வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.


நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து
சாயிபாபாவிற்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது
சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை
முடித்துவிட்டு, மஞ்சள் நிற  ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும்.


தென்முக கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது
ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள்,
அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப்
பயன்படுத்தலாம்.



ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ
ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரத மிருந்து அடுத்த நாள் அதை
நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.

குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.

முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது
பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும்.

அதன்மூலம்கிடைக்கும்ஆசீர்வாத பலன்  விலைமதிப்பற்ற சொத்தாகும்.

ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு

 ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு 

திவ்ய தேசங்களான 108 திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். காவிரி, கொள்ளிடம் ஆறுகள் இத்தலத்தைப் பூ மாலை போல் சுற்றிச் செல்வது இந்தத் தலத்துக்கு அபரிமிதமான இயற்கை அழகை வழங்குகிறது.
தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரம் கொண்டது இத்திருக்கோயில். ஏழு மதில் சுவர்களும், 21 கோபுரங்களும் கொண்ட இத்திருக்கோயில், பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.
தல வரலாறு
ஸ்ரீரங்கம் கோயில் விமானம் சுயம்புவாக, பிரம்மாவின் தவப்பயனால், திருபாற்கடலில் இருந்து வெளிவந்தது என்கிறது ஸ்ரீரங்க மகாத்மியம். இந்த விமானத்திற்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார் பிரம்மா. சூரியன் பல்லாண்டு காலம் பூஜை செய்து வர, சூரிய குலத்தில் பிறந்த இட்சுவாகு என்ற மன்னன் அயோத்திக்கு இவ்விமானத்தை எடுத்து வந்தான். சூரிய குலம் இட்சுவாகு குலம் என்றும் அழைக்கப்பட்டது. அக்குலத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீராமன்.
கைமாறிய குலச் சொத்து
ராவணனை வென்று, சீதையை மீட்டு இலங்கையைத் தன் வசப்படுத்திய ஸ்ரீராமருக்கு, அயோத்தியில் பட்டாபிஷேகம். அதனைக் காண வந்தவர்களுக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார் ராமர். அந்த வகையில், ராவணன் தம்பி விபீஷணனுக்கு, தான் பூஜித்துவந்த ஸ்ரீரங்க விமானத்தைக் கொடுத்தார் ராமர். சூரிய குலச் சொத்து அன்புப் பரிசாகக் கை மாறியது.
அதனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் விபீஷணன். அப்படியே தன் நாடு நோக்கிக் கிளம்பினான். ஆகாய மார்க்கமாகச் சென்ற அவன், இயற்கை எழில் கொஞ்சும் தற்போதுள்ள ஸ்ரீரங்கத்தைக் கண்டான். அங்கு சந்தியாகால பூஜை செய்ய, ஆற்றங்கரையை அடைந்தான்.
தலையிலிருந்த விமானத்தை இறக்கி வைத்தான். நீரில் இறங்கி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். பின்னர் வந்து விமானத்தைத் தூக்க முயல, அவ்விமானம் தரையோடு ஒட்டிக்கொண்டது.
அங்கு ஆண்டு வந்த மன்னன் தர்மவர்ம சோழனிடம், இதனை பெயர்த்து எடுத்துத் தர உதவி கோரினான் விபீஷணன். மன்னனும் தனது படைவீரர்களைக் கொண்டு பெயர்க்க முயல, அசீரீரி கேட்டதாம். தான், தென் திசையில் உள்ள இலங்கையை நோக்கிப் பள்ளி கொண்டருளுவதாகக் கூறினாராம் ஸ்ரீரங்கநாதர். அதனையடுத்து அவ்விமானத்தை சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்துவந்தான் தர்மவர்ம சோழன் என்கிறது தலபுராணம். தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டதைப் பாசுரமாக்கி உள்ளார்.
கோயில் ஒழுகு
காவிரிக்கரையில், உலா வந்தான் கிளிச் சோழன். அப்போது அங்கே மரத்தின் மீதிருந்த கிளி ஒன்று, செய்யுளொன்றைத் திருப்பித் திருப்பிக் கூறியது. வைகுந்தத்தில், பெருமாள் இருந்த கோயில் இங்குள்ளது. அதனை இன்றும் காணலாம் என்று அச்செய்யுளின் பொருள் இருந்தது. இதனை அறிந்த கிளிச் சோழன், அவ்விடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய, விமானத்துடன் தர்மவர்மன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் மீண்டெழுந்தது என்கிறது கோயில் ஒழுகு என்ற நூல்.
தற்போது உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் அனைத்தையும் சீர்படுத்தி மேம்படுத்தியவர் உடையவர் என்று பெருமாளால் அழைக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர். வரலாற்றுப் பெருமை கொண்ட இந்த கோயிலில்தான் ஜூன் மாதமான இம்மாதம் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஜேஷ்டாபிஷேகம் காண்டல்
ஸ்ரீரங்கம் மூலவர் ரங்கநாதப் பெருமாள் சயனத் திருக்கோலம் கொண்டவர். இந்த சிலா ரூபம் சுதையால் ஆனது. அதனால் மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை தைலம் அதாவது எண்ணெய்ப் பூச்சு செய்வார்கள். இதற்கு ஏதுவான நாள் நட்சத்திரமாக கொண்டு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயரிட்டுள்ளனர். 
பெருமாளின் திருமுகத்தையும், திருமேனியையும் சுத்தம் செய்து, தைலத்தை அழகாகப் பூசுவார்கள். பின்னர் திருமுகம் மட்டும் காட்சி அளிக்க, திருமேனியை வெளிக் காட்டாமல் மறைத்து விடுவார்கள். தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மூலவர் தைலக்காப்பில் இருக்கும்பொழுது, உற்சவர் புறப்பாடு கிடையாது.
நாற்பத்து எட்டு நாட்கள் நிறைவு பெறுவதை ஒட்டி, தொடந்து வரும் பத்து நாட்களுக்கு பெருமாளுக்குச் சாந்து காப்பு இடுவார்கள். இதுவும் தைலம்தான், என்றாலும் கெட்டியாக இருக்கும். இந்தக் காப்புகள் முடிந்த பின் பெருமாள் திருமேனி விகசித்து ஜொலிக்கும். இந்தப் பத்து நாட்கள் உற்சவர் புறப்பாடு உண்டு. தீபாவளித் திருநாளை ஒட்டி, ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் திருமுக தரிசனத்துடன் திருமேனி தரிசனத்தையும் முழுமையாக காணலாம் என்பது பக்தர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும்.

ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள் :


ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள் :


திரிசூலம் :
Related image

மூன்று இதழ்கள் கொண்ட சூலம் அம்மனோட பிரதான ஆயுதம். 
 பெரும்பாலான அசுரர்களை, அம்பிகை சூலத்தால் குத்தி 
சம்காரம் செய்ததாகவே புராணங்கள் சொல்கிறது.  ஆனால், 
இதனோட உண்மையான கருத்து என்ன தெரியுமா?  எந்த ஒரு 
தீயவனையும் அம்பிகை தன்னோட கருணையால், அவன் கிட்டே 
இருக்கிற ஆசை, காமம், வெகுளிங்கற  மும்மலங்களையும் 
வேரறுத்து, அவனை நல்லவனாக மாற்றி தன்னடி 
சேர்த்துக்கொள்கிறாள். அப்படிங்கறதுதான், மும்மலங்கள்லேயும் 
 ஒட்டாம பிரிஞ்சு நிக்கறவ அம்பிகைங்கறதை, சூலத்தோட 
மூன்று பிரிவுகளும், எல்லாம் சேர்ந்து இணைஞ்ச கைப்பிடியை
அம்பிகை பிடிச்சுகிட்டு இருக்கிறது.  இந்த மூன்று தீய குணங்களும்,
 என் பக்தர்களை நெருங்க விடாம நான் கட்டுப்படுத்தி வைச்சிருக்கேன்னு அம்மன் சொல்ற விதமாகவும் அமைஞ்சிருக்குன்னு தேவிபுராணம் சொல்கிறது.
கதவுகளில் அவற்றை பொருத்தி வைத்திருப்பதும் வழக்கம்.அதன் முலம் தீய சக்திகளின் தாக்கம் வீடுகளுக்குள் வராமல் காப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.
ஸ்ரீ சக்கரம்:
சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி,உபதேசம் பெற்று,உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும் ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும். ஆதி சங்கரர் பல்வேறு தலங்களுக்கு சென்று அங்கு உக்கிரமாக இருக்கும் அம்பிகையின் மூல ஸ்னாத்துக்கு முன்னர் அந்த கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை அந்த தெய்வங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார்.ஒற்றைகாலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும் அர்த்த மேருஅமைப்பில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்ய பட்டு வழிபாடுகள் நடந்தது வருகின்றன.
Image result for ஸ்ரீ சக்கரம்:
ஓம்காரம்:
ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்படுகிறது. ஏனென்றால் அதற்குள் நல்ல அதிர்வுகள் உள்ளார்ந்து அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
Image result for ஓம்காரம்:
ஷட்கோணம் :
ஆன்மிகத்தில் முக்கோணத்திற்கு தனிப்பட்ட சிறப்பு உண்டு. முக்கோணம் என்பது சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களை உணர்த்துகிறது. முக்கோணத்தின் உச்சி கீழ்நோக்கி இருந்தால் அது சக்தியாகிய பெண் அம்சமாகவும், மேல்நோக்கி இருந்தால் சிவமாகிய ஆண் அம்சத்தையும் குறிப்பிடும். இரண்டும் இணைந்த அறுங்கோணமானது சிவசக்தி ஐக்கியத்தையும், உலகத்தின் தோற்றத்தையும் குறிக்கிறது.
Image result for ஷட்கோணம் :
பூரண கலச சின்னம்:
மண்ணால் ஆன அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட, நீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் தேங்காய் வைத்து அதில் மாவிலைகள் செருகி வைக்கப்படும் அமைப்பு கலசம் எனப்படுகிறது. இந்த கலசத்தின் உள்ளிருக்கும் நீர் புனித நதிகளின் நீராகவும், அதில் வாசனை  திரவியங்கள் கலக்கப்பட்டதாகவும் இருக்கும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல், பானையின் மேலிருந்து கீழாக நுணுக்கமாக சுற்றப்படும். பானையின் மேல் புறத்தில் அழகான வடிவங்கள் குங்குமத்தால் வரையப்படும். இவ்வாறு சகல அலங்கார அமைப்புடனும் உள்ள பாத்திரம் பூரண கும்பம் என்று அழைக்கப்படுகிறது.
Image result for பூரண கலச சின்னம்:
 இதைகிரகப்பிரவேசம்,திருமணம்,தினசரி பூஜை கோவில்களின் கும்பாபிஷேகம் மற்றும் இதர ஹோம பூஜைகளுக்கும் இந்த கும்ப அமைப்பு முக்கியமான ஓன்றாக இருக்கும். பூரண கலசமானது உயிருள்ள ஒரு தேவைதையின் வடிவமாக கருதப்படுகிறது.

என்ன கோலம் போட்டால் என்ன பலன்

என் அன்பு தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்.இந்த பதிவு பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஒரு குடும்பத்தலைவி அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு விளக்கேற்றி இறைவனை வழிப்பட்டால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழலாம் .சந்தோஷமாக வாழ்வதற்கு கடவுளின் அருள் தேவை.அவர்கள் அருள் பெற ஒரு வழியே கோலம் போடுதல் ஆகும்.கோலம் ஒரு மங்கள நிகழ்வுக்கு போடக்கூடிய ஒன்றாகும்.மங்களத்தின் அடையாளம்.
என்ன கோலம் போட்டால் என்ன பலன்தொடர்புடைய படம்

கோலங்களில் சக்தி வாய்ந்த எந்திரங்கள் மறந்திருக்கின்றான்.நாள்தோறும் போட வேண்டிய கோலம் ,பண்டிகை காலத்தில் போடா வேண்டிய கோலம்,ஹோமம் ,பூஜைகளில் போது போட வேண்டியவை,சுபகாரியங்களில் போட  வேண்டிய கோலங்கள் எனத் தனித்தனி கோலங்கள் உள்ளன.நம் முன்னோர்கள் ஒரு காரியம் தொடங்கும்முன்,அதை நிறைவேற்றித் தரும் தேவதைகளின் அருட்சக்தியை ஈர்த்து நமக்கு தரும் வகையில் அத்தெய்வங்களின் எந்திரங்களை எளிய கோலங்களாக மாற்றி,நமக்கு தந்திருக்கிறார்கள்.ஆகவே,நிகழ்வுக்கு  பொருத்தமான கோலங்கள்,நினைத்த காரியம் கைகூட வழிவகுக்கும்.மேலும் கோலங்கள் தெய்வீக சக்தி கொண்டவை.தினமும் வாசலில் கோலம் போடுவதால் துர்சக்திகள் அண்டாது.

தினமும் வாசலில் போடும் கோலங்கள் 

பொதுவாக வாசலில் இந்துக்கள் அனைவரும் கோலம் போடும் வழக்கம் தென்று தொட்டு வந்துள்ளது. மகாலக்ஷ்மியை  அதிகாலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு அழைப்பர்.ஸ்டார் கோலம்,ரங்கோலி கோலம் முதலானவை நாம் வாசலில் போட  வேண்டும்.தெய்வங்கள் சார்ந்த கோலங்களை ஒரு போதும் வாசலில் வரையக்கூடாது.கோலத்தை வைத்தே ஒரு பெண்ணின் மனநிலையை அறிந்து கொள்ளலாம்.நம்மிடம் சண்டை போட நினைத்து வருபவர்களையும் அழகான கோலம் மாற்றி விடும்.நமக்கெல்லாம் லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நம் வீட்டையும்,வீட்டு வாசலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.முதலில் லட்சுமி தேவி வருவதுடன் 8வகை லட்சுமிகளும் நம் வீட்டுக்கு வந்து சகல செளபாக்கியத்தையும் கொடுப்பர்.
தொடர்புடைய படம்    



பூஜையறை கோலங்கள் 

ஸ்ரீபாத கோலம் 
4099e0c41d2b5077ac780a00e67c3846.jpg 720×960 pixels










 இதை வரைந்து,பாதங்களை சுற்றி, மஞ்சள் குங்குமத்தால்,நலங்கு இட்டு,அம்பிகையை பூஜித்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி உண்டாகும்.


ஐஸ்வர்ய கோலம் 

This Kolam is called "Aishwarya Kolam". 8 - 3 interlaced dots (Idukku Pulli) Kolam - Start with 8 dots in the center, next 7 interlaced d...






ஐஸ்வர்ய கோலம் 





ஐஸ்வர்ய கோலம்,ஹ்ருதயக் கமலம் போடாத வீடுகளே இல்லை.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அரிசிமாவால் ஒரு பலகையில் ஐஸ்வர்ய கோலம் போட்டு,நடுவில் ஐந்து முகக்குத்து விளக்கு ஏற்றி லலிதா சஹஸ்ரநாமம்,செளந்தர்ய லஹரி பாராயணம் செய்து,சர்க்கரை பொங்கல் அல்லது 
வெல்லப் பாயாசம்  நிவேதனம் செய்து அம்பிகையை வணங்கி வர திருமணம் கைகூடும்.

குறிப்பிட்ட வாரங்களுக்கு இந்த பூஜையை செய்வதாக நேர்ந்து கொண்டு,கடைசி வாரம் 12வயதுக்குட்பட்ட குழந்தைகளை அம்பாளின் அம்சமாக எண்ணி ,நலங்கு   இட்டு,இனிப்பு,உடை,வளையல்,பொட்டு,கண்மை,
மருதாணி  முதலியவற்றை கொடுக்க வேண்டும்.

சுமங்கலிகளுக்கு  (எண்ணிக்கை அவரவர் வசதியை பொறுத்தது)
உணவு,மஞ்சள்,குங்குமம், மஞ்சள் கயிறு ,வெத்தலை பாக்கு வைத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.சகல செளபாக்கியமும் உண்டாகும்.

ஹ்ருதயக் கமல கோலம் 
Related image

 நம்முடைய வேண்டுதல் நிறைவேற பூஜையறையில் 48நாட்கள் இந்த கோலத்தை தேவியின் படத்திற்கு முன் போட்டு  பக்தியுடன் விளக்கேற்றி வணங்கி  வந்தால், எண்ணிய யாவையும் ஈடேறும். 
Related image
ஒரு சுத்தமான பலகையில் மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் 21தாமரை பூ கோலம் போட்டு கனகதாரா ஸ்தோத்திரம் கூறி,1ஸ்லோகத்திற்கு நாணயம் வீதம் (1ரூபாய் அல்லது 5ரூபாய்)ஒவ்வொரு பூவை வைத்து,மஞ்சள் ,குங்குமம், பூ தூவி நம்மால் இயன்ற நிவேதனம் செய்து லட்சுமி தேவியை வேண்டி வந்தால் ,பணக்கஷ்டம் அகலும்.

சஞ்சீவிமலைக்  கோலம் 

Image result for hanuman jayanti kolamசஞ்சீவி  கொலம் க்கான பட முடிவு

கோலத்தின் வால் பகுதியில் மஞ்சள் குங்குமம் இட  வேண்டும்.ஆஞ்சநேயர் அருளால் சனியின் தாக்கம்,ராகுவினால் விளையும் கஷ்டம் அகலும்
navagraha kolangal க்கான பட முடிவுவக்கிரக கோலங்கள்  
ஒவ்வொரு  நாளுக்குரிய  நவக்கிரக கோலங்களை பூஜையறையில்
 போடலாம்.அந்தந்த கிரகங்களின் நிறங்களை போடுவது   சிறப்பு.hayagreeva க்கான பட முடிவு

புதன் கிழமை பச்சை நிறத்தில் புதன் கிரக கோலம் போட்டு,ஹயக்கிரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி ,"ஹயக்கீரிவப் பிண்டி "எனப்படும் கடலைப்பருப்பு பூரணம் நிவேதனம் செய்து,அனைவருக்கும் கொடுத்தால் ஞாபக மறதி அகலும்.குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.

குருவின் அருள் வேண்டிவோர்,வியாழக் கிழமை மஞ்சள் நிற கோலமிட்டு,நெய் விளக்கேற்றி கொண்டைக்கடலை சுண்டல்,லட்டு நிவேதனம் செய்து கொடுக்க வேண்டும். 

நவராத்திரி சமயம்,ஒவ்வொரு தினத்திற்கு  உரிய கோலம் போடலாம்.

குபேர கோலம் 
kubera kolam tamil க்கான பட முடிவு





















வெள்ளிக்கிழமை குபேர கோலத்தில் காசு வைத்து,குபேரஸ்துதி,லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்து மாதுளம் பழம்,இனிப்பு நிவேதனம் செய்து வர பணக்கஷ்டம் அகலும்.காலை 7மணிக்குள் இப்பூஜையை செய்வது சிறப்பு.
பூஜையறை கோலங்களை கால்மிதி படாத இடத்தில்தான் போட வேண்டும். அரிசி மாவால்தான் கோலம் போட வேண்டும்.வெள்ளிக்கிழமை பூஜை  முடித்தவுடன் நாணயத்தை எடுக்காமல் மறுநாள்  காலையில்தான் நாணயத்தை எடுக்க வேண்டும்.

புள்ளி சிவனின் அம்சம்.கோடுகள் சக்தி ஸ்ரூபமாகும்.செய்வாய்,வெள்ளி கிழமைகளில் காவி இட வேண்டும்.கோலங்கள் போடும் போது  தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி கொண்டே போட வேண்டும். இது தெய்வீக அலைகளை நமக்கு பெற்றுத் தரும்.கை அல்லது துணி கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும்.
kariya siddhi kolam க்கான பட முடிவு
என் அன்பு தோழிகளுக்கு ஒரு இனிய பதிவை கொடுத்துள்ள திருப்தியில் இந்த பதிவை முடிக்கிறேன்.என்றென்றும் தேவியின் அருள் நமக்கு கிடைக்க நான் அன்னையை பிராத்திக்கின்றேன்.  


நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.


நன்றி 

உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்