ஞாயிறு, 6 டிசம்பர், 2015

ஸ்ரீ கற்குவேல் அய்யனார்

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம் .இன்னிக்கு என் அப்பா வீட்டு குலதெய்வமான ஸ்ரீ கற்கு வேல் அய்யனார்  சுவாமியைப் பற்றி சொல்லலாம் என்று  இருக்கேன் .


குல தெய்வம் நம் குலத்தை காக்கும் .நாம் எத்தனையோ சுவாமிகளை வணங்கினாலும் ,குல தெய்வங்களை வணங்காவிட்டால் ,பயன் ஒன்றும் இல்லை .ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் வேறாக இருக்கும் .

குல தெய்வம் என்பது நம் முன்னோர்கள் வழி  வழியாக வணங்கி  வந்த  தெய்வமாகும் .


வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ வழிபாடு செய்தல் வேண்டும் .நம் கோரிக்கைகளை கேட்டு நம் இன்னல்களை களைந்து ,நம்மை மேலும்  மேலும் வழிநடத்தி செல்பவர் நம் குலசாமி தான் .
ஆதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு   முதலில் முடி இறக்குவது குலதெய்வ சாமிக்குதான்.ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் எங்கு உள்ளது ?அவர் மகிமை என்ன? என்று பார்ப்போம் .இந்த பதிவை எழுதுவது நான் செய்த பாக்கியம் என எண்ணுகிறேன் .








ஸ்ரீ கற்குவேல் அய்யனார்   கோவில் தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரிலிருந்து , 13 கிலோ மீட்டரில் உள்ளது காயா மொழி எனும் ஊர் .அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் குதிரைமொழி எனும் கிராமத்தில் உள்ளது தேரிக் குடியிருப்பு .இங்குதான் ஸ்ரீ கற்குவேல்  அய்யனார் பூரணம் ,பொற்கலை தேவியருடன் கோவில் கொண்டுள்ளார் .இங்கு கார்த்திகை மாதம் முழுவதும் மிகச் சிறப்பாக வழிபாடுகள் இருக்கும் .இங்குள்ள மண் செந்நிறத்தில் இருக்கும் .

இயற்கை வளம் மிகுந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது .அந்த மரத்தில் தோன்றிய அய்யனார்  பல அற்புதங்களை நிகழ்த்தியதால் கற்குவா அய்யன் என்றழைக்கப்பட்டார் .காலப் போக்கில் கற்கு வேலப்பன்,கருக்குவாலை அய்யன் என்றழைக்கப்பட்டு  தற்போது கற்குவேல் அய்யனார் என அழைக்கப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த மக்களிடம் திருடர்கள் களவாடி சென்றனர் .அவர்கள் துன்பங்களை தீர்க்க வேண்டி அய்யனாரிடம் முறையிட்டனர் .அளவு கடந்து போன கள்வர்களின் அட்டூழியத்தை அழிக்க தானே சென்று கொள்ளையர்களை விரட்டி பிடித்து தண்டனை கொடுத்தாராம் அய்யனார் .



இன்றும்  கார்த்திகை மாத கடைசி நாளில் இந்த நிகழ்ச்சியை நினைவுப்படுத்தும் படியாக ,கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது.இதைக் காண காட்டருவி போல் மக்கள் வருகிறார்கள் .
கள்ளர் வெட்டு நிகழ்ச்சியில் , பூசாரி இளநீர்  காய்களை வெட்டியவுடன் ,அந்த தண்ணீர் விழுந்த செம்மண் மண்ணை எடுக்கிறார்கள் பக்தர்கள் .அந்த கைப்பிடி மண்ணை பிரசாதமாக எண்ணி தங்கள் பூஜையறையில் வைத்து பூஜிக்கிறார்கள் .இதனால் குடும்பத்திலுள்ள பல பிரச்சனைகள் மறைந்து ,அமைதி ,மகிழ்ச்சி நிலவுவதாக நம்பிக்கை .


அந்த மண்ணை வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் வைத்து கொண்டால் வியாபாரம் செழிக்கும் .தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பவர் ஸ்ரீ கற்குவேல்  அய்யனார் .



நன்றி வணக்கம்

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி

















செவ்வாய், 1 டிசம்பர், 2015

கிழமை விரதமும்,அதன் பலன்களும்

கிழமை விரதமும்,அதன் பலன்களும்                   



என் அன்பு தோழிகளே ,


வணக்கம் .என்னுடைய முந்தின பதிவில் ,விசேஷ நாட்களில் விரதங்கள் இருந்தால்  என்ன பலன் கிடைக்கும் என்று எழுதியிருந்தேன் . இன்னைக்கு எந்த கிழமைகளில் விரதம் இருந்தால்  என்ன பலன் ?என்பதைப்  பற்றி  பார்ப்போம் .


விரதம்

விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு .நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து ,மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.ஜீரண  உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து ,உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.


சிற்றுண்டிகளை  சாப்பிட்டு விரதம் இருப்பதை விட ,பால் ,பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம் விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள் .அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது

அசைவ உணவை தவிர்த்து ,சைவ உணவு உண்பது ,நீர் ,பால் ,பழம் ,ஜுஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தி விரதம் இருக்கலாம் .ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள் .எந்த முறையை பின்பற்றினாலும் ,பலன் கிடைப்பது நிச்சயம் .

ஞாயிற்று கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.


திங்கள் கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம் .

செவ்வாய் கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்  .


புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும் .

வியாழன் கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.


வெள்ளி கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன்  வாழ்வர் .

சனி கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.




நாமும் விரதமிருந்து , அனைத்து நலன்களும் பெற ஆண்டவனை பிராத்திப்போம் .

நன்றி .வணக்கம்



திங்கள், 23 நவம்பர், 2015

கார்த்திகை திருநாள்

ஹாய் பிரண்ட்ஸ் எப்பிடி இருக்கீங்க ? எல்லோருக்கும் என்  இனிய காலை வணக்கம் .


இன்னிக்கு நான் கார்த்திகை தீபம் பற்றி உங்களுடன் என்  கருத்தை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் .



ஆதி காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் அக்கினியை தெய்வமாக வழிப்பட்டு வந்துள்ளனர் .
அதன் அடிப்படையில் தான் பெரும் பாலான பண்டிகைகளை  நாம் தீபங்களை ஏற்றி கொண்டாடி வருகிறோம்.

கார்த்திகை மாதம் ,கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது .

பஞ்ச  பூதங்களையும் திருப்தி செய்வதுதான் இந்த பண்டிகையின் நோக்கமாகும்.அதாவது ,கிளியான் சட்டியில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது .களிமண் அகல் விளக்குகள் மண் கொண்டு நீர்  ஊற்றி, காயவைத்து ,நெருப்பில்  சுட்டெடுத்து செய்யப்படுகிறது .


இந்த அகல் விளக்குகளை வாங்கி விளக்கு ஏற்றுவதால் ஒரு ஏழை தொழிலாளி வாழ நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் .ஆகையால் அகல் விளக்குகளை  வாங்கி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம்.எத்தனையோ தீபங்கள் விற்பனைக்கு இருந்தாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் அழகுதான் .



கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் கடைசி தேதி வரை இந்துக்கள் தினமும் மாலையில் வீடுகளிலும் ,ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்து கொண்டாடுவர் .தினமும் விளக்கு ஏற்ற இயலாதவர்கள் துவாதசி,சதுர்த்தி ,பெளர்ணமி  ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் .






ஆண்டுதோறும் திருவண்ணா மலையில் கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .


அடி முதல் முடி வரை சிவபெருமான்  ஜோதி பிழம்பாக காட்சி அளித்ததை உணர்த்தும் விதமாக கார்த்திகை தீபம் அமைந்துள்ளது .மற்றுமொரு காரணம்,கார்த்திகை பெண்களை போற்றும் நாளாக திருகார்த்திகை விளங்குகிறது.


தீபம் ஏற்றி வழிபடுவதால் முப்பெரும் தேவியரது அருள் நமக்கு கிடைக்கும் .


பொருள் ,புகழ் அனைத்தும் இருக்கும்.ஆனால் ,மன நிம்மதி இருக்காது.ஜென்ம ஜென்மங்களுக்கும் நாம் செய்த பாவங்களே மனநிம்மதி இல்லாமைக்கு காரணம் .ஜென்மாந்திர பாவங்கள்  போக  தொங்கும் சர விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும் .


நாரதர்,கார்த்திகை விரதத்தை  12 ஆண்டுகள் கடைபிடித்து,சப்த ரிஷிகளுக்கும் மேலான பலன்களை பெற்றார் .

திரிசங்கு மன்னன்,பகீரதன் இந்த விரதத்தை மேற்கொண்டதால்  பேரரசன் ஆனார்கள் .

தீபம் ஏற்றினால் எல்லா தீவினைகளும் விலகும் என்று கூறப்படுகிறது .கார்த்திகை தீபம் அன்று  தீபதானம் செய்வது மிகவும் நல்லது.வெள்ளி ,வெண்கலம் ,பித்தளை ஆகிய ஏதாவது  ஒன்றினை ஏற்றி ,தீபதானம் செய்ய வேண்டும் .

வஸ்திர தானம் பித்ரு தோஷம் நீக்கும் .

என்  ஊரில் கார்த்திகை தீபம்  அன்று  பாயாசம் வைத்து ,சிவனை வேண்டி தீபம் ஏற்றுவர் .அனைவருக்கும் கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி








செவ்வாய், 17 நவம்பர், 2015

விரத வழிபாடுகளும் அதன் சிறப்புகளும்

விரத வழிபாடுகளும் அதன் சிறப்புகளும்


ஹாய் பிரண்ட்ஸ் ,

வணக்கம் . இந்த பதிவில் நாம் இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்  கிடைக்கின்றன ?என்பதைப்  பற்றி  பார்ப்போம் .


இந்த பதிவை நான் எழுதுவதற்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் .அத்துடன் இதை எழுத என் கணவரும் ,குழந்தைகளும் எனக்கு உறுதுணை இருப்பது  நான் செய்த பாக்கியம் .


எனக்கும் ,என்  ஆன்மீக நண்பர்களுக்கும் என்றென்றும் கடவுள் அருள் கிடைக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் .


எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்காமல் செய்வது இல்லை .அவரே நமக்கு முழு முதல் கடவுள் .நானும் அவரை வணங்கி ஆரம்பிக்கிறேன் .


சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நம் வாழ்வில் ஏற்படும்  சங்கடங்கள் அனைத்தும் விலகி மனஅமைதி ஏற்படும் .


விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் கவலை தீர்ந்து பூரண அருள் கிட்டும் .


சிரவண விரதம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி ,ஆனந்தம் ,சந்தோசம் உண்டாகும்.


வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் வறுமை நீங்கி ,செல்வவளம் கிட்டும்.


சஷ்டி விரதம் முருகனுக்கு இருந்தால் மனதில் எண்ணிய காரியம் அனைத்தும் இனிதே நிறைவேறும் .

கெளரி நோன்பு இருந்தால் குறையாத செல்வம்,நீண்ட ஆயுள் ,நல்ல மனைவி ,குழந்தைகள் கிடைக்கும் .


வரலக்ஷ்மி விரதம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியமும்,கணவன் மனைவி ஒற்றுமை நிலைத்து இருக்கும் .


பிரதோஷ விரதம் இருப்பதால் மன அமைதி ,நீண்ட ஆயுள்,செல்வவளம் கிடைக்கும் .


மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து விரதம் இருந்தால் ,அய்யனின் அருளும் ,அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.


வைகாசி விசாகம் விரதத்தினால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் .


நவராத்திரி விரதம் இருந்தால் மன நலம் ,நீண்ட ஆயுள் ,குன்றாத செல்வம் கிடைக்கும் .முப்பெரும் தேவியரின் அருள் நம் இல்லத்தில் நிலைத்து இருக்கும் .


பெளர்ணமி விரதம் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ,சுகமான வாழ்வு அமையும்.


கார்த்திகை விரதம் இருப்பதால் எல்லாவித நன்மைகளும் கிடைப்பதுடன் ,முருகனின் பரிபூரண ஆசி  கிட்டும் .


கோகுலாஷ்டமி விரதத்தினால் மனநிம்மதி ,நல் ஆயுள் ,கண்ணனின் அருளும் கிடைக்கும் .



விரதம் இருக்க முடியாதவர்கள் உள்ளன்புடன் ஒரு பூ ,கற்கண்டு ,பேரீச்சம் பழம் ,பழம் ஏதாவது ஒன்றை வைத்து , எந்த கடவுளை நினைத்து வணங்கினாலும் , நம்முடைய குரலுக்கு செவி சாய்த்து ,நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மை எல்லையில்லா ஆனந்ததிற்கு அழைத்து செல்வர் .


நன்றி வணக்கம்            


இன்னுமொரு ஆன்மீக  தேடலில் சந்திப்போம்

உங்கள் தோழி
ஈஸ்வரி























திங்கள், 16 நவம்பர், 2015

பஞ்சமுக ஆஞ்சநேயர்

என் அன்பார்ந்த ஆன்மீக தேடல் அன்பர்களுக்கு என் இனிய வணக்கம் .



நமக்கு அஞ்சநேயரை தெரியும் .பஞ்சமுக அஞ்சநேயரை சில   கோவில்களில் பார்த்தீருப்போம் .அவரைப் பற்றி என் பதிவில் போடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.ஏன்? என்றால் எனக்கு அஞ்சநேயரை மிகவும் பிடிக்கும் .அதுவும் ஐந்து முகம் கொண்ட அஞ்சநேயரை தரிசிக்க இரு கண்கள் போதாது .


         



அஞ்சநேயர் பலம் நிறைந்தவர் .நம்மால் ஆகாத மிகப் பெரிய காரியத்தையும் நொடி பொழுதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்.

பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பீர்கள்? .வாங்க !அவரைப் பற்றி பார்ப்போம் .


ராமாயணத்தில், இராவணன் ராமனுடன் போர் புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .அந்த யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது .ஒரு முறை ராமருக்கும் ,ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் நிராயுதபாணியானான் .


கருணைக்கடலான ராமன் ராவணனை கொல்ல  மனமின்றி ,"இன்று போய்  நாளை வா "என திருப்பி அனுப்பி விட்டார் .இதன் மூலம், ராவணன் திருந்த ராமர் ஒரு வாய்ப்பு கொடுத்தார் .ஆனால் ,அரக்கக் குணம் படைத்த ராவணன் ராமன் அளித்த மன்னிப்பு ,தான் திருந்துவதற்குத்தான் என உணராமல் மீண்டும் ராமருடன் போர்  புரியவே நினைத்தான் .


 


மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான் .ராமனை அழிக்க  மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த விபீஷணன் ,யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான் .ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர்,ஹயக்கிரீவர் ,வராகர் ,கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார் .இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற ,தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர் .



இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் .

இப்படி பஞ்சமுகத்தில் அவதாரம் எடுத்ததால் பக்தரின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார் .


இவரை வழிபடுபவருக்கு , நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி ,லக்ஷ்மி கடாட்சமும்,ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும்,ஆன்மீக பலன் ,வராகரின் அருளால் மன துணிவு ,கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும் ,ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி ,சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .


ஆஞ்சநேயர் எப்படி பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தார் என்பதைப் பற்றி  தெரிந்து கொண்டோம் .இனி பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி ,எல்லா நலமும்  பெறுவோம் .


                                               ஸ்ரீ ராம ஜெயம் 
நன்றி வணக்கம் 

 உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி 




















வியாழன், 12 நவம்பர், 2015

கந்த சஷ்டி விழா

ஹாய் பிரண்ட்ஸ்


தீபாவளி முடிந்து ,அன்றாட வாழ்க்கைக்கு  வந்து இருப்பீர்கள்? .உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்னிக்கு கந்த சஷ்டி விழாவைப் பற்றி உங்களுடன் பகிர இருக்கிறேன் .

எந்த வினை ஆனாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி  ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு .


முருகனுக்கு உரிய விரதங்களில் இது முக்கியமானது .தேவர்களுக்கு தொல்லை தந்த சூரபத்மன் , தாரகன் -சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களை சம்ஹாரம் செய்தார் .


கந்த பெருமான் தமது வேலாயுதத்தால் சூரபத்மனை இரு கூறாக்கினார் .அவரது பேரருளால் ஒன்று சேவலானது .மற்றொன்று மயிலானது.முருகன் மயிலை வாகனமாகவும்,சேவலை கொடியாகவும் கொண்டார்.


சஷ்டி விரதம் 6 நாட்கள் கொண்டாடப்படுகின்றன .ஆறு நாட்களும் பூரண  உபவாசம் இருத்தல் வேண்டும் .இதை கடைப்பிடிக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்கள் பால்,பழம்  உட்கொள்ளலாம். ஆறாவது நாள் சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.


குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த விரதத்தை கடைபிடித்தால்  ,முருகனே குழந்தையாக  அவதரிப்பார்  என்பது ஒரு நம்பிக்கை .

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் (அகப்பை)கருப்பையில் வரும் என்பது  பழமொழி .


முசுகுந்தச் சக்ரவர்த்தி ,வசிஷ்ட முனிவர் இந்த விரதம் பற்றி கேட்டறிந்து ,கடைப்பிடித்து பெரும் பயன் அடைந்துள்ளனர் .


சஷ்டி அன்று ,அதிகாலையில் எழுந்து ,நீராடி நெற்றிக்கு விபூதி,சந்தனம் ,குங்குமம் இட்டு பூஜை அறையில் கோலம் போட்டு வாசனை மலர்களால் முருகனின் படம் அல்லது விக்ரகத்தை  அலங்கரித்து திருவிளக்கை ஏற்றி நறுமண பொருட்களான பத்தி ,சாம்பிராணி ஏற்றி வைத்து  முதலில் குலதெய்வம் ,பிள்ளையார் ,முருகன் என சுலோகம் சொல்லி வணங்க வேண்டும்.


கந்த சஷ்டி கவசம் ,கந்த குரு கவசம் ,கந்தர் அனுபூதி ,சுப்ரமணிய புஜங்கள் துதியை சொல்ல வேண்டும் .இதுவும் சொல்ல தெரியாதவர்கள் கந்த சரணம்,முருகா சரணம் என்று கூறி வணங்கலாம் .


தீப ஆராதனை செய்து பழம்,பால் நிவேதியம் வைக்க வேண்டும்.



அன்று மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று,தரிசனம் செய்து ,விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.எளியோனான முருகன் நாம் நிவேதியமாக எது வைத்தாலும் ஏற்று கொண்டு நினைத்ததெல்லாம் கொடுப்பார்.


முருகன் அருளால், மணப்பேறு ,மகப்பேறு ,நல்வாழ்வு ,ஆரோக்கியம் ,ஆயுள் ,புகழ்,செல்வம் நிச்சயம் கிடைக்கும் .


என்றென்றும் நம் வாழ்வில் நிம்மதி ,சந்தோசம் ,உற்சாகம் கிட்ட முருகனை வேண்டுவோம்.

நன்றி ,அடுத்த பதிவில்
ஈஸ்வரி



















ஞாயிறு, 8 நவம்பர், 2015

தித்திக்கும் தீபாவளி

 தீபாவளி




என் அன்பு ஆன்மீக தோழிகளுக்கு என் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் .

தீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் எல்லோரும் ரெடி ஆகிட்டு இருப்பீங்க .இந்த சமயத்தில் தீபாவளியைப்  பற்றி ஆன்மீகத்தில் என்ன உள்ளது? என தெரிந்து கொண்டாடால்  அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் .


தீபாவளி என்றாலே நமக்கு எல்லாம் புத்தாடை ,பட்டாசு ,பலகாரங்கள் தான் உடனே ஞாபகத்திற்கு வரும்.சிறு குழந்தைகளுக்கு   கூட தீபாவளிக்கு பட்டாசு போடுவது என்றால் ஆனந்தம் தான்.


ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் .காலையில் வேலை ,இரவில் ஓய்வு , அன்றாட கடமைகள் என நாட்கள் செல்கின்றன .அதற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவே ,நம் முன்னோர்கள் பண்டிகைகளையும் ,விழாக்களையும் வைத்து கொண்டாடி மகிழ்தனர்.



பண்டிகை காலத்தில் நம் உறவினர்களை சந்திப்பது ,ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ,விளையாடுவது போன்ற செயல்கள் நம் மனதிற்கு சந்தோசத்தையும் ,தெம்பையும் அளிக்கிறது.



அடுத்து வரும் பண்டிகைகளுக்காக மனம் ஏங்குகிறது .






தீபம் என்றால் விளக்கு .ஆவளி என்றால் வரிசை .வரிசையாய் விளக்கேற்றி ,இருள் நீக்கி ,ஒளிதரும் பண்டிகை தீபாவளி .
நம் மனத்தில் உள்ள இருட்டாகிய அகங்காரம் ,பொறாமை ,தலைக்கனம்  போன்றவற்றை அகற்றி ,பிரகாசமான ஒளியை நாம் கொண்டு வரவேண்டும் என்பதே இதன் கருவாகும் .

தீபாவளியை கொண்டாடுவதற்கு பல காரணங்கள்  உள்ளன .
ராமர் 14 வருடங்கள் வனவாசம் முடித்து ,நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி  வரவேற்றனர் .


புராண கதைகளின் படி ,கிருஷ்ணனின் இரு மனைவிகளில்  ஒருவரான பூமாதேவிக்கும் ,வராக (பன்றி) அவதாரம் எடுத்த கிருஷ்ணனுக்கும்  பிறந்த மகன் நரகாசுரன்.


நரகாசுரன் பிரம்மாவிடம் தன் தாயால் மட்டுமே மரணம் உண்டாக வேண்டும் என்று வரம் வேண்டி னான்.பிரம்மாவும் வரம் அளித்தார் .தாய் தன் மகனை கொல்ல மாட்டாள் என்ற காரணத்தால் அவ்வரம் வாங்கினான்.தேவர்களை துன்புறுத்தி வந்ததால் ,துன்பத்திலிருந்து விடுபட கிருஷ்ண பகவானை தேவர்கள்  நாடினர்.

அதர்மம் தோன்றும் போது ,கிருஷ்ணர் அவதாரம் எடுப்பார் .பூமாதேவி சத்ய பாமாவாக அவதரித்து ,கிருஷ்ணருக்கு துணையாக தேர் ஓட்டி சென்றாள் .கிருஷ்ணனுக்கும் ,நரகாசுரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது.கிருஷ்ணனின் எண்ணம், நரகாசுரனை பூமா தேவியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதால் கிருஷ்ணன் நரகாசுரனின் அம்பு வரும் போது வீழ்வது போல் நடித்தார்.தேவி மானிட பிறவி எடுத்ததால் ,தன்  மகனை வீழ்த்துகிறோம் என்பதை மறந்து ,தன்  கணவனை காப்பாற்ற நரகாசுரனை கொன்றாள் .


கணவனுக்கு  மனைவி  துன்பத்திலும் ,இன்பத்திலும் சேர்ந்து இருக்க  வேண்டும் என்பதை உலக மக்களுக்கு  கிருஷ்ணபகவான்  உணர்த்துகிறார் .
தன் இறப்பை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் பகவானிடம் வேண்டிக் கொண்டதால், நாம் எல்லோரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் .


தீபாவளி அன்று  நாம் சூரியன் வருவதற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும் .அன்று தண்ணீரில் கங்கையும்,எண்ணெயில் லக்ஷ்மியும்,அரப்பில் சரஸ்வதியும்,சந்தனத்தில் பூமா தேவியும்,புத்தாடையில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம் .

எல்லோரும் சிறப்பாக ,மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க .என்றென்றும் ,உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சியும் ,இன்பமும் நிலைத்திருக்க நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன் .

நம் வீட்டு பக்கத்தில்  உள்ள  ஏழை மக்களுக்கு ஆடை ,பலகாரம் வாங்கி கொடுங்க .ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .நீங்களும் சந்தோஷமாக இருங்கள் .உங்களை  சுற்றி இருப்பவரையும் சந்தோஷப்படுத்துங்கள் .
உங்கள் கருத்துகளை சொன்னால் ,எனக்கு பதிவினை எழுத தூண்டுகோலாக இருக்கும் .
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .





உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி






திங்கள், 2 நவம்பர், 2015

அஷ்டமி ,நவமி

ஹாய் பிரண்ட்ஸ் ,

என்னுடைய பதிவை தொடர்ந்து படித்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.


இன்னிக்கு என்ன தலைப்பு எழுதலாம்  என நினைத்து கொண்டிருக்கையில் ,நாட்காட்டியில் நாளை அஷ்டமி என்று போட்டிருந்ததால் அதைப் பற்றி எழுதலாம் என நினைத்து எழுதுகிறேன் .

இந்துக்கள் வழிபாடுகளில் முக்கிய இடம் வகிப்பது நட்சத்திரங்களும் ,திதிகளும் தான் .


ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் நட்சத்திரங்கள் ,திதிக்கு ஏற்ப விரதம் ,பண்டிகைகள் வருகின்றன.

சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி ,ஆவணி மாதம் ஆவணி அவிட்டம் ,தை மாதம் தை அமாவாசை வருகின்றன .

இந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு  பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே "நவராத்திரி "விழாவாகும்.

இது பராசக்திக்கு எடுக்கப்படும் விழா.
  

நவமி முடிந்தவுடன் அடுத்த நாள் வருவது தசமி .இந்த நாளை தேவி மகிசாசுரனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் விஜய தசமியாக நாம் கொண்டாடுகிறோம் .


தசம் என்றால் பத்து .பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் 'தசரா 'என்று அழைக்கிறோம்.நவராத்திரியில் கடைசி மூன்று நாட்களான  அஷ்டமி ,நவமி ,தசமி மிகவும் விசேஷமானது .

சாதாரணமாக நம் இல்லங்களில் நடக்கும் நல்ல காரியங்கள் ,விசேஷங்கள் ,முக்கிய நிகழ்ச்சிகளை அஷ்டமி ,நவமியில்  செய்ய மாட்டோம் .

அஷ்டமி ,நவமி இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.தொடர்ந்து கொண்டே இருக்கும்  என்பதால்  தான் .  


ராமர் பிறந்தது நவமி ,கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமி .நவராத்திரியில் வரும் அஷ்டமி ,நவமி இரு தினங்களும் ,ராமர்,கிருஷ்ணர் பிறந்த இரு தினங்களில் மட்டுமே கொண்டாடுகிறோம் .இதை தவிர வரும் அஷ்டமி ,நவமி நாட்களில் நாம் நல்ல காரியங்கள் செய்வது இல்லை .

அஷ்டமியில் பிறந்த  காரணத்தால் கிருஷ்ணன் பல துன்பங்களை அனுபவித்தார்.நவமியில் பிறந்த ராமன் நாட்டை இழந்து காட்டிற்கு சென்று ,சீதையை பிரிந்து பல துன்பங்களை அனுபவித்தார் .அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் செய்யவில்லை .

அஷ்டமி ,நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம் .அஷ்டமி திதியில் சரபேஸ்வரர் ,பைரவர் ,வராகி போன்றவர்களுக்கு பூஜைகள் ,ஹோமங்கள் செய்யப்படுகின்றன .

காவல் தெய்வம்,எல்லை  தெய்வங்களுக்கு பூஜை செய்ய இந்த இரு திதிகளும் உகந்தது.


எனக்கு தெரிந்ததை உங்கள் அனைவருக்கும்  சொன்ன மகிழ்ச்சியில் என்  பதிவை முடிக்கிறேன் .


வாழ்க வளமுடன் 

நன்றி வணக்கம் .


ஞாயிறு, 1 நவம்பர், 2015

மஞ்சள்

அனைவருக்கும் என்  இனிய வணக்கம் .


மஞ்சள் என்றாலே நமக்கு ஞாபகம்  வருவது மஞ்சள் நிறம் ,மங்கள பொருள்  என்பதுதான் .






மஞ்சள்  பூசி குளிக்கும் வழக்கம் கிராமங்களில் இருந்து வந்தது.இப்ப கிராமங்களில் கூட ஒரு சில பெண்கள் மட்டுமே மஞ்சள் பூசி குளிக்கிறார்கள் .கஸ்தூரி மஞ்சள்  வாசனையுடன் இருக்கும்.இன்றைய  பெண்கள் இதை பூசுகிறார்கள் 



மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .


ஆன்மீகத்தை வைத்து பார்க்கும் போது ,மஞ்சளில் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள் .அதனால்தான் மஞ்சளை தாம்பூலத்துடன் வைத்து கொடுக்கிறார்கள்.


அறுவடை நாளான பொங்கல் பண்டிகையின் போது ,பொங்கல் பானையில் மங்கள அடையாளமாக மஞ்சளை வைத்து கட்டுகிறார்கள்.நல்ல நாட்களில் மஞ்சள் சிறப்பிடம் வகுக்கிறது .நிம்மதியை கொடுக்கும் திறன் மஞ்சள் வாசனைக்கு உரிய குணமாகும்.

மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசலில் தெளித்தால் பூச்சிகள்,எறும்புகள் ,கரையான்கள் வராமல் தடுக்கலாம் .



மஞ்சள்  உடலுக்கு நிறத்தை கூட்டும் .மஞ்சளை  புனிதமானதாக இந்துக்கள் கருதுகிறார்கள் .அம்பாளுக்கு மஞ்சள் மிகவும் பிடிக்கும் .அதனாலேயே வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுத்து அம்பாளே வந்ததாக கருதி ,உபசரிக்கிறோம் .


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .

உங்கள் ஈஸ்வரி 

























புதன், 28 அக்டோபர், 2015

வில்வம்

ஹலோ ப்ரண்ட்ஸ் ,


எல்லாருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் .ஒவ்வொரு நாளையும் சந்தோசமாக ஆரம்பியுங்கள் .நம்முடன்  எப்போதும் கடவுள் இருக்கிறார் என்றும் ,கையைப் பிடித்து நம்மை நல்ல வழிகளுக்கு அழைத்து செல்கிறார் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள் .


சில பேருக்கு பேசிக்கிட்டு கல கல என்று இருந்தால் ஆனந்தமாக இருக்கும் .இன்னும் சில பேருக்கு நல்ல இனிமையான பாட்டுகள் கேட்டால் ஆனந்தமாக இருக்கும்.இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றில் சந்தோஷத்தை அனுபவித்து கொண்டு இருக்கோம் .

எனக்கு கடவுளுடைய நாமங்களை சொல்வதிலும்,அவர் புகழை பேசுவதிலும் தான் ஆனந்தம் .


அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது இது என் எண்ணம் .

இதே சந்தோசத்துடன் உங்களுடன் என்  கருத்தை பகிர்ந்து கொள்கிறேன் .


இன்னிக்கு வில்வத்தைப்  பற்றி தெரிந்ததை சொல்கிறேன் .







வில்வம் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம்  வருவது சிவபெருமானைத் தான் .சிவபெருமானுக்கு 
பூஜிக்கப்படும் இலை  வில்வம் .

தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் என வில்வம் ,பாதிரி ,வன்னி ,மா ,மந்தாரை போன்ற மரங்கள் அழைக்கப்படுகின்றன .

வில்வ இலை சிவனாகவும் ,அதன் முட்கள் சக்தியாகவும் ,கிளைகள் வேதங்களாகவும்,வேர்கள் முக்கோடி தேவர்களாகவும் போற்றப்படுகின்றன .


1 வில்வ இலையால் சிவனை பூஜித்தால் 1லட்சம் தங்க புஷ்பங்களை கொண்டு பூஜிப்பதற்கு  சமம் .சிவனுக்கு பிடித்த வில்வ இலை கொண்டு பூஜிக்க அவனை மிக அருகில் நெருங்க முடியும் .சிவனின் அருளை பெற முடியும் .



வில்வம் லக்ஷ்மி தேவியின் திருக்கரத்திலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது .வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் அருள் பரிபூரணமாக கிட்டும் .சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீயசக்தி அகன்று தோஷங்கள் மறைந்து ,ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.

சிவன் திருவாதிரை நட்சத்திரம் .அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினை தணிக்க நம் முன்னோர்கள் குளிமை பொருந்திய வில்வத்தை சாற்றி வழிப்பட்டன .

பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை சூரியோதயத்திற்கு முன்னதாகவே பறிக்கவேண்டும். வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.எத்தனை நாட்கள் ஆனாலும்,உலர்ந்து போனாலும் கூட பூஜைக்கு பயன்படுத்தலாம்.


அமாவாசை,பெளர்ணமி ,அஷ்டமி,நவமி ,சதுர்த்தி ,மாதப்பிறப்பு ,சோமவாரம் போன்ற தினங்களில் வில்வத்தைப்  பறிக்கக் கூடாது .இந்நாட்களில் பூஜைக்கு தேவையெனில் முதல் நாளே பறித்து வைக்க வேண்டும் ,

ஓம் நமச்சிவாயா என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம் . 


3 இதழ் கொண்ட வில்வ இலையையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் .7ஜென்ம பாவங்கள் விலக ஒரு வில்வம் போதும்.

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது போல் வில்வ இலையையும் வளர்க்கலாம் .வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும் ,ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும்  ,புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் ,உலகிலுள்ள எல்லா சிவாலயங்களை தரிசித்த பலனும் கிடைக்கும் .


வில்வத்தால் நம் கருணைக்கடலான சிவபெருமானை துதித்து ,அவன் அருள் பெறுவோம்.

நன்றி வணக்கம் 

மீண்டும் அடுத்த பதிவில் ,
உங்கள் தோழி ஈஸ்வரி 













ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சுமங்கலி பூஜை

என் அன்பு தோழிகளுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் .நவராத்திரி சீரும் சிறப்புமாக கொண்டாடிட்டோம் .நவராத்திரி நாட்களில் நமக்கு தெரிந்தவர்கள் ,நண்பர்கள் அனைவரையும் அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel


அடுத்த நவராத்திரிக்கு இன்னும் ஒரு வருடம் காத்து இருக்க வேண்டும் .இந்த 10 நாட்களும் எப்படி நேரம் போனது ?என்றே எனக்கு தெரியவில்லை .பூஜை ,சுலோகம்,பாடல்கள் என போய் கொண்டு இருந்தது .


அம்பிகைகளின் அருளுடன் மீண்டும் பதிவை எழுதுகிறேன் .என் தோழிகள் ,குடும்பம் இதை எழுத உதவியாக இருப்பது நான் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம் .

இன்னிக்கு சுமங்கலி பூஜையைப் பற்றி எழுதலாம் அது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன் .







அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயர் அம்மனுக்கு கொடுத்து சிறப்பிக்கிறது .

சுவாஷினி என்றால் மங்களம் நிறைந்தவள் என்று பொருள் .சுவாஷினி தான் சுமங்கலி என்று காலப்போக்கில் மாறியது .

கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடக்கின்ற பெண்களே சுமங்கலி  என அழைக்கப்படுவாள் .


நல்ல இல்லம் நடத்துகின்ற பெண்ணை இந்து மதம் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறது .அந்த பெண்களை வழிபடுவது பராசக்தியையே வழிபடுவதாகும் .

சுமங்கலி பூஜை நவராத்திரி தினத்தில் நடைபெறுவது சிறப்பானது .ஒரு வீட்டில் நெடு நாட்களாக திருமணம் ஆகாமல் கன்னி பெண் இருந்தால் அந்த பெண்ணின் தோஷத்தை நீக்க பூஜை நடத்தலாம் .

சுமங்கலி பூஜை எல்லா தோஷங்களையும்  நிவர்த்தி செய்யும் என்பது  நம்பிக்கை .

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?


இல்லத்தை தூய்மைப்படுத்தி ,மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.
சுவாமி படங்களுக்கு பூ,தூபம்  போட்டு விளக்கேற்ற வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .

நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி ,தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்து ,அவர்களுக்கு புடவை ,ரவிக்கை ,மஞ்சள் ,குங்கும சிமிழ் ,கண்ணாடி ,வெற்றிலை ,பாக்கு ,பூ ,பழம் ,தட்சனை கொடுக்க வேண்டும் .இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால்  தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .

பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே ,இல்லத்தலைவி சாப்பிட வேண்டும் .மீண்டும் ஒரு முறை வந்த பெண்களை வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.

இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள் ,புதன்,வெள்ளி .


இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே .இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை ,நோய் ,துன்பம்,தோஷம் நீங்கி வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம் .இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது .அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழிவகுக்கிறது .


அம்மனின் அருள் என்றென்றும் நிலைத்து ,இன்புற்று இருக்க  வேண்டுவோம் .

என் பதிவைப் படிக்கும் தோழிகள் உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் ,எனக்கு ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் .

நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி






























திங்கள், 19 அக்டோபர், 2015

சரஸ்வதி பூஜை

ஹாய் பிரண்ட்ஸ்  எப்பிடி இருக்கிறீர்கள் ? எல்லோரும் நவராத்திரி கொண்டாடிக்கிட்டு இருப்பீர்கள்? .சந்தோஷாமாக கொண்டாடுங்கள் .

இன்னிக்கு நவராத்திரி 8ம் நாள் .சரஸ்வதிக்குரிய நாள் .நாளை சரஸ்வதி பூஜை இருப்பதால் அதைப் பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாம் என இதை எழுதுகிறேன் .



சரஸ்வதி பூஜை எல்லோருக்கும் பொதுவான பூஜை ஆகும் .கொலு வைத்து இருப்பவர்கள் ,வைக்காமல் இருப்பவர்கள் அனைவருமே செய்யும் பூஜை ஆகும் .நவராத்திரியை மூப்பெரும் தெய்வங்களான துர்க்கா ,லக்ஷ்மி ,சரஸ்வதியை வணங்குவதற்காகவே உள்ள நாட்கள் .

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் ,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கும் ,அடுத்த மூன்று நாட்கள்  சரஸ்வதிக்கும் உரியவை .10ம்  நாள் மூன்று  தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி ,மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்து வெற்றி வாகை சூடுகிறாள் .அதையே விஜய தசமியாக கொண்டாடுகிறோம் .


சரஸ்வதியை கலைமகள் என்று அழைப்பர்.சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம் .அன்று ஆயுத பூஜை என்பதால் அலுவலகங்களிலும் பயன் படுத்தி வரும் இயந்திரங்களை வைத்து வணங்குவர்.


கல்வி, ஞானம் ,கலைகளில் வளர்ச்சி தருபவள் சரஸ்வதி .சரஸ்வதிக்கு வெள்ளை தாமரை ,முல்லை ,மல்லிகை,நந்தியா வட்டி ,சம்பங்கி ,தும்பைப் பூ ,வெள்ளரளி  அணிவிக்கலாம் .



உயிர் உள்ளவற்றிலும் ,உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள் .அதனாலேயே ,ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம் .


கல்வியுடன் கலைகளுக்கும் உரியவள் சரஸ்வதி .அவல் ,பொரி ,பொட்டுக்கடலை ,சர்க்கரை சேர்த்து கலந்து நிவேதினம் செய்யலாம்.


அவரவருக்கு ஏற்ற  காலை அல்லது இரவு நேரத்தில்  பூஜை செய்யலாம். கடலை சுண்டல் ,தேங்காய் சாதம் ,பால் சாதம் ,இனிப்பு வகைகள் வைத்து சரஸ்வதியை வணங்கலாம் .


புத்தகம் ,எழுது பொருள் ,கல்வி உபகரணங்கள் ,வாகனங்கள் ,கணினிகள் போன்றவைகளுக்கு சந்தனம் ,குங்குமம் வைத்து வணங்க வேண்டும் .


கொலு வைப்பவர்கள் தான் தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை .இந்த நாட்களில் கொலு வைக்காதவர்கள் கூட அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து தாம்பூலம் கொடுக்கலாம் .இவ்வாறு செய்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி .




என்  வீட்டில் அம்மன் மூவரும் அழகாக வீற்றிருப்பது என்  மனத்தை  கொள்ளை கொள்ள செய்கிறது .தினமும் பாடல்கள் ,பூஜைகள் செய்வது மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது . இதே சந்தோஷ த்துடன் ,நீங்களும் என்றென்றும் சந்தோசமாக இருக்க மூன்று தேவியரையும் பிராத்திக்கிறேன் .சந்தோஷமாக சரஸ்வதி பூஜையை கொண்டாடுங்கள் .


நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழிஈஸ்வரி
















செவ்வாய், 13 அக்டோபர், 2015

நலம் தரும் நவராத்திரி

நலம் தரும் நவராத்திரி 


என்  அன்பார்ந்த நண்பர்களுக்கு என்  இனிய காலை வணக்கங்கள் . முதலில் ,எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.


நாம் எல்லோரும் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறோம் .ஒரே பரப்பரப்பு .
இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் போது இந்த சக்தியை கொடுக்குறது யாரு ?என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .நமக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிட்டே இருக்கு .அந்த சக்தி உங்க இஷ்ட தெய்வம் ,குல தெய்வம் யாராகக்  கூட இருக்கலாம் . கடவுளுக்காக ஒரு நிமிடம் ஒதுக்கினாலே, நம்மை தேடி, நம் தேவைகளை நிறைவேற்ற ஓடி வருவார்கள் .
நவரத்திரியில் என்ன சிறப்பு? என்றால் மூன்று  தேவியரையும் வணங்குகிறது தான். நமக்கு ஒன்று வேண்டும்  என்றால் நாம்  முதலில் யாருகிட்ட கேட்போம் ?சந்தேகமே இல்லை .அம்மாக்கிட்டே தான் .நமக்கு என்ன வேண்டும் என்பதை  ,அகிலத்தை ஆளும் ஜெகன் மாதா பார்த்து பார்த்து கொடுக்கககூடியவள் .எல்லா உயிர்களையும் காத்து ரட்சிப்பவள் ஆதி பராசக்தி.



நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி  என்றால் ஒன்பது நாள்  தேவியை இரவில் வழிபடுவது .இது பெண்களுக்கே உரிய திருநாள் ஆகும் .  முதல் நாள் துர்கைக்கும் ,அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மிக்கும் ,அடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் வணங்கக்கூடிய நாட்கள் ஆகும் .வீரம் ,செல்வம் ,ஞானம் 3 தேவியரை வணங்குவதால் நமக்கு  கிடைக்கும் .

நவராத்தியில்  பகல்  நேரம் சிவனையும்,இரவில் சக்திதேவியை பூஜிக்க வேண்டும்.தேவியை இரவில் தேவர்கள் வழிபாடு செய்வதால் தேவியை இரவில் வழிபடுதல் வேண்டும்.

புராணங்களில் நவராத்திரி :

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.

பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

நவராத்திரி உருவான கதை
ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள்.

மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது 

“போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான்.
தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.



கொலுவில்  பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம்.



தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

“நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர்.தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.

காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.



மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் யை படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. 


  • அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
  • 1. ஏழ்மை வராது
  • 2. அன்பு கிடைக்கும்
  • 3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
  • 4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
  • 5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
  • 6. கல்வி ஞானம் பெருகும்
  • 7. உத்யோக உயர்வு
  • 8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
  • 9. மன அமைதி கிடைக்கும்.
  • 10. தேக ஆரோக்கியம் தேவி வழிபாடும் ,தேவி மகாத்மியம் படிப்பது அளவற்ற நன்மை தரும் .700 மந்திரம் கொண்ட ஸ்ரீ சப்தசதி பாராயணம் நன்மைகளை தரும் .மறுமையில் மோட்சத்திற்கு வழிகாட்டும் .
  • தேவியின் துதிகளை ,9 நாட்கள் சொல்லி ,நிவேத்தியம் செய்து அவளின் திருவடியை வணங்க வேண்டும் .
  • நவராத்திரி நாட்களில் தாம்பூலம் கொடுப்பதும் ,வாங்குவதும் நல்லது .வெற்றிலை ,பாக்கு ,மஞ்சள் ,குங்குமம் ,வஸ்திரம் கொடுப்பது பல மடங்கு பலனைத்  தரும் .அம்மா 9 நாட்கள் மகிசாசுரனிடம் போர் புரிந்து ,10வது நாள் வெற்றியுடன் வருவதைத் தான் விஜய தசமி நாளாக கொண்டாடுகிறோம் .அன்று செய்யும் நல்ல காரியங்கள் வெற்றியைத்  தரும்.
  • நன்றி வணக்கம்

















புதன், 7 அக்டோபர், 2015

அன்னபூரணி

ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள் . ஆன்மீகக் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சசி  அடைகிறேன் .


அன்னபூரணி என்றாலே நமக்கு எல்லாம் நினைவில் வருவது காசி மாநகரம் தான் . அங்கே தான் பார்வதி தேவியார் அன்னபூரணியாக இருந்து உணவு அளிக்கிறாள் .காசி நகரின் தலைமை கடவுள் அன்னபூரணி .


அன்னபூரணி கையில் தங்கக் கரண்டியும் ,உணவு பாத்திரத்தில் பால்  சோறும் கொண்டிருக்கிறாள் .தன்னை நாடி வருபவருக்கு வயிற்று பசியை போக்குவது மட்டுமில்லாமல் ஆன்ம பசியையும் தீர்த்து வைக்கிறாள்.


சிவபெருமானுக்கு அன்னம் அளித்து தோஷத்தை நீக்கியவள் .




ஒரு சமயம் சிவபெருமான்  பார்வதியிடம் ,உலகம்  மாயை .உணவு உட்பட எல்லாம் மாயை என்று கூறினார்,அதைக்கேட்ட பார்வதி அனைத்து பொருட்களிலும் இருப்பவளான பார்வதி கோபம் அடைந்தாள் .இவ்வுலக பொருட்களுக்குள் ஆற்றல் (சக்தி ) உண்டென்று நிரூபிக்க மறைந்தார் .தேவியின் மறைவு உலகத்தையே பதித்தது .எங்குமே உணவின்று எல்லோரும் பசியால் வாடினார்கள்.சிவனும் தன்  தட்டை எடுத்து பார்வதியிடம் ,உலக பொருட்கள் மாயையல்ல என புரிந்து கொண்டேன்.இதைக் கேட்டு தாய் உள்ளம் கொண்ட நம் அன்னை சிவபெருமானுக்கு உணவு அளித்தாள் .இது நம் புராணங்களில் சொல்லப்பட்டது.


சிவபெருமான் பிச்சை எடுத்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு .







ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்மா ,தனக்கும் 5 தலை .சிவனுக்கும் 5 தலை .தானே !பெரியவன் என்ற ஆணவத்துடன் இருந்தார்  .சிவன் அவரது ஆணவத்தை அடக்க ,பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி  ஏறிய முயன்ற போது ,அந்த கபாலம் கையில் ஓட்டி  கொண்டது. அந்த தோஷத்தை விலக்கவே ,அம்பாளிடம் சிவன் திருவோடு ஏந்தி அன்னம் யாசித்தார் .


உலக மக்களுக்கு மிகவும் இன்றியாமையாதது உணவு .அதை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறாள் நம் அன்னை ,தங்கு தடையில்லாமல் உணவு நமக்கு கிடைக்க ,அன்னையை நாள்தோறும் வணங்குவோம் .

நன்றி 
மீண்டும் சந்திப்போம்.

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 









ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நவகிரகங்களும் தீபங்களும்


ஹாய் பிரண்ட்ஸ் ,

வணக்கம் .எல்லாரும் இன்புற்று வாழ நான் இறைவனை பிராத்திக்கிறேன் .நவகிரகங்கள் நமக்கு
பல சோதனைகளை கொடுத்தாலும் கடைசியில் நன்மையே செய்யும் .அவை எல்லாம் கடவுளின் ஆணையின்படி செயல்படுகின்றன .

அந்த தாக்கத்தில் இருந்து சிறிது தப்பிக்கவே ,நவகிரகங்களை  நாம் வணங்குகிறோம் . சில ஊர்களில் உள்ள நவகிரகங்களை வணங்குவது மிகச் சிறப்பு வாய்ந்தது .







நவகிரக கோவில்களில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றினால் பற்பல பலன்கள் உண்டாகும் .எந்த கோவில்களில் எத்தனை  தீபங்கள் ஏற்றினால் என்ன பலன்? என்பதை பார்ப்போம் .


சூரியனார் கோவில் -----11 தீபம் ஏற்றினால் கண் நோய் தீரும் .

திங்களூர் ------10 தீபம் ,கவலைகள் அகலும்

வைத்தீஸ்வரன் கோவில் ----9 தீபம் ,திருமணம் கூடும்


திருவெண்காடு ------9 தீபம் ,கல்வி பெருகும்

ஆலங்குடி -----28 தீபம் ,வாக்கில் வன்மை

தென் திட்டை ----33 தீபம் ,மன சாந்தி உண்டாகும்

கஞ்சனூர் -----11 தீபம் , வாழ்வில் நல்ல துணை கிட்டும் .


திருநள்ளாறு ----9 தீபம் ,ஆயுள் கூடும்

திருநாகேஸ்வரம் -----21 தீபம்,நாக தோஷம் விலகும் .

கீழபெரும்  பள்ளம் -----9 தீபம் ஏற்ற மோட்சம் கிட்டும்


இந்த ஊருக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபட்டால் ,நன்மைகள் நம்மை தேடி வரும் என்பது நம் முன்னோர்கள் கூற்று .

நன்றி வணக்கம் .

மீண்டும் அடுத்த பதிவில் ,
ஈஸ்வரி



வியாழன், 1 அக்டோபர், 2015

லக்ஷ்மி கடாட்சம் பெருக

லக்ஷ்மி கடாட்சம் பெருக






என் அன்பு தோழிகளுக்கு இனிய காலை வணக்கம் .


எனக்கு தெரிந்த ,அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த பதிவை பகிர்ந்து கொள்வதே பகவான் எனக்கு அருளிய பாக்கியமாக கருதுகிறேன் .இன்னிக்கு வெள்ளிக் கிழமை .எல்லா நாளையும் விட வெள்ளிக்கிழமை  என்றால் அது தனிச் சிறப்புதான் போங்கள்  !

  இன்னிக்கு செய்கின்ற குபேர லக்ஷ்மி பூஜைக்கு பலன் உண்டு என நான் நம்புவதால் ,தொடர்ந்து பூஜை பண்ணுகிறேன் .


லக்ஷ்மி அருள் நமக்கு கிடக்க என்ன செய்யலாம்? 

  • அதிகாலை 5 மணிக்கு பின்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே முன்வாசலைத்  திறக்க வேண்டும் .


  • காலையில் விழித்தவுடன் பசுவையாவது ,தன் முகத்தை கண்ணாடி கொண்டு பார்த்தோ ,தன்  வலது உள்ளங்கையையாவது முதலில் பார்க்க வேண்டும் .













  • செவ்வாய் ,வெள்ளிக்கு 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளான லக்ஷ்மியை வழிபட வேண்டும் .


  • வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும் ,தண்ணீரும் கொடுக்க வேண்டும் .அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பொருளும் ,சந்தோஷமும் கிடைக்கும் .


  • ஒவ்வொரு பெளர்ணமி  அன்றும் மாலை குளித்து ,சத்திய நாராயணரை துளசி ,செண்பக மலர் கொண்டு அர்ச்சித்து ,பால் ,பாயாசம் ,கல்கண்டு ,பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண  வேண்டும் .







அன்பு தோழி ஈஸ்வரி













புதன், 30 செப்டம்பர், 2015

இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொருட்களும் ,பலன்களும்

ஹாய் பிரண்ட்ஸ் ,

வணக்கம் .நாம் எல்லோரும் சாமி கும்பிட கோவிலுக்கு போவோம் .அப்படி போகும் போது  வெறும்
கையுடன் போகக்கூடாது .பொதுவாக, நம் உறவினர்கள் வீட்டிற்கு போனால், அங்கே , சின்ன
குழந்தைகள் ,பெரியவர்கள் இருப்பாங்க .அதனால ,அவங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு போக வேண்டும் .

சாதாரண மனிதர்களுக்கே இப்படினா ?நம்மை எல்லாம் படைத்த அம்மாவையும் ,அப்பாவையும் பார்க்கப்  போகும் போது வெறும் கையோட போனால் நல்லவா இருக்கும் ? அவங்ககிட்ட இல்லாதது இல்லை . ஆனாலும் நம் சக்திக்கு முடிந்த பூ ,பழம்  .கற்பூரம் கொண்டு செல்வதில் தவறு ஒன்றும் இல்லையே?.நம்ம கையால் ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால், அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான் போங்கள் .

இன்னிக்கு அதைப்பற்றிதான் இந்த பதிவில் எழுதுகிறேன் .

சுவாமியையும் ,அம்பாளையும்  அபிஷேகம் பண்ணும் பொருட்களும்,பலன்களும் 


பழங்கள் ---ஜன வசீகரம்

பஞ்சாமிர்தம் ----வெற்றி ,தீர்க்க ஆயுள்
பால் ---ஆயுள் விருத்திதயிர் ----திடகாத்திரம்தேன் ----சங்கீத வன்மைநெய் ---சுகவாழ்வு ,மோட்சம்கரும்பு சர்க்கரை ----பகைவரை ஒழிக்கும்  இளநீர் ---நன்மக்கட் பேறு ,போகம்விபூதி ----ஞானம்சந்தனம் ----சுவர்க்க போகம்பன்னீர் ---புகழ்வஸ்திரம் -----வெகுமதிபுஸ்பம் ----  சந்தோஷம்கற்பூரம் ---- அத்வைத முக்திகுங்குமம் ----  மங்களம்மாப் பொடி -----  கடனை நீக்கும்

செவ்வாய் ,வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம்  செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் .

வாழ்க!வளமுடன்!

நன்றி .மீண்டும் அடுத்த பதிவில்

என்றும் உங்கள் தோழி ஈஸ்வரி  



















திங்கள், 28 செப்டம்பர், 2015

பெளர்ணமி அன்று விளக்கேற்றும் பலன்கள்

என் அன்பு தோழிகளுக்கு அன்பார்ந்த வணக்கங்கள் .எல்லாரும் எப்பிடி இருக்கீங்க !
நாம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுகிறோம் .பெளர்ணமி அன்று கோவிலுக்கு போய் விளக்கு ஏற்றினால் ,அம்பாளின் அருள் கிடைப்பதுடன்,பல பலன்களை பெறலாம்.

ஒவ்வொரு மாதம் வரும் பெளர்ணமி அன்று கோவிலில் திருவிளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப்  பற்றி பார்ப்போம்.






பெளர்ணமி அன்று விளக்கேற்றும் பலன்கள்


சித்திரை மாதம் ---தானியம் பெருகும் .
வைகாசி மாதம் ----விவாகப் பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும்.
ஆனி மாதம் ---பிள்ளைப்பேறு உண்டாகும்
ஆடி மாதம் ---தேக ஆரோக்கியம்
ஆவணி மாதம் ---புத்திர பாக்கியம்

புரட்டாசி மாதம் ---பசுக்கள் விருத்தி ஏற்படும் .

ஐப்பசி மாதம் ----பசிப்பிணிகள் போகும்
கார்த்திகை மாதம் ----நிலைத்த புகழ்  கிடைக்கும் .
மார்கழி மாதம் ----நல்ல உடல்நலம் உண்டாகும்
தை மாதம் ---வெற்றி உண்டாகும்
மாசி மாதம் ---துன்பங்கள் நீங்கி வாழ்வில் இன்பங்கள் ஏற்படும் .
பங்குனி மாதம் ----தர்ம புன்ணிய எண்ணங்கள் மேலோங்கும் .

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி