வியாழன், 23 செப்டம்பர், 2021


தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம்
 அறியப்படாத   பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற
 ஒரு வகை சிறிய கல் ஆகும்.

சூ
ரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில்
 இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து 
வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ 
என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், 
இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை 
எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். 
அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 
தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ 
வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.


ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத 
பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். 
குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் 
பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம்
 பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் 
இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை 
அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் 
இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக 
பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு
 தகவல்களை இங்கே காணலாம்.

ராமர் கணையாழி

ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட 
கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக 
புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது 
லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு 
ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் 
உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் 
தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள்
 துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.

கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி,
 காஞ்சீபுரம், 
அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய 
பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில்
 வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச 
துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக 
உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.

பிள்ளையார் சுழி

கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் 
என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. 
இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக 
பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. 
அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். 
பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன்
 உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக
 கோமதி சக்கரம் கருதப்படுகிறது.

நட்சத்திர பாகங்கள்

அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது 
மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது
 ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி
 சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும்
 என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.

* அசுவினி, பரணி, கிருத்திகை - நெற்றி.

* ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை - முகப்பகுதி.

* புனர்பூசம், பூசம் - இரு தோள்கள்.

* ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் - மார்பு பகுதி.

* சித்திரை - வயிற்று பகுதி.

* சுவாதி, விசாகம் - புஜங்கள்.

* அனுசம் - உடலின் மைய பகுதி.

* கேட்டை, மூலம் - இரண்டு கைகள்.

* பூராடம், உத்திராடம் - இரண்டு தொடைகள்.

* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - கால் பாதங்கள்.

நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் 
கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ 
வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில்
 நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் 
இல்லாமல் வழிபாடு செய்யலாம்.

* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும்.
 அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு 
பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.

* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். 
ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. 
இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது 
அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.

* கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ 
அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு
 வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.

* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு
 உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள்,
 யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய 
முடிவதில்லை. 
விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. 
ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள 
வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.

* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும்.
 அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. 
மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் 
அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை 
காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது 
‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து 
செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.

* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. 
எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக
 அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, 
நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும்
 பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம்
 பெற்றவையாக இருக்கின்றன.

* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக 
பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி 
வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு 
தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும்
 சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.


* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த 
நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். 
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் 
இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.

திங்கள், 3 மே, 2021

உங்கள் வீடு இருள் நீங்கி, சந்தோஷமாக இருக்க

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும். நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும்.kalasam

வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம்.யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும் இனம்புரியாத ஏதோ ஒரு கஷ்டமும் நம் மனதை பிசையும் போது, நம்முடைய வீட்டை அந்த இருளிலிருந்து வெளியில் கொண்டுவர வேண்டியது கட்டாயம் நம்முடைய கடமை.
vilakku-deepamஇதற்கு என்ன செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை தான் செய்யவேண்டும் என்றெல்லாம் காத்திருக்க வேண்டாம். உங்கள் மனதிற்கு எப்போது கஷ்டம் என்று படுகிறதோ அப்போதே இதை ஒருமுறை செஞ்சுடுங்க. 
முதலில் வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, வாசனையாக இருக்கும் சாம்பிராணி தூபத்தை போட்டுவிடுங்கள். அதன்பின்பு பூஜை அறையை அலங்காரம் செய்து வாசனை உள்ள பூக்களை போட்டு, முடிந்தவரை ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்தாலும் போதும். ஒரு சொம்பில், கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய் 2, கிராம்பு 2, பச்சைக் கற்பூரம் ஒரு துண்டு, பன்னீர் நான்கு சொட்டு, விரலி மஞ்சள், சோம்பு, கொஞ்சம் கற்பூரவள்ளி இலை, கொஞ்சம் மருதாணி இலை, துளசி இலை, நன்னாரி தூள் ஒரு ஸ்பூன்,  இவைகள் அனைத்தையும், ஒன்றாக போட்டுக்கொள்ள வேண்டும். மொத்தமாக கிடைக்கவில்லை என்றாலும், இதில் எது உங்கள் வீட்டில் இருக்கின்றதோ அதை, அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். காலை நேரத்திலேயே இந்த தண்ணீரை தயார் செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மாலை நேரம் வரை இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் நன்றாக ஊறிய உடன், மா இலையை வைத்தோ அல்லது வெற்றிலையை வைத்தோ, அந்தத் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டாலே போதும். கூடவே, உங்கள் வீட்டின் உறுப்பினர்களது தலையில் இந்த தீர்த்த தண்ணீர் தெளித்து விடுங்கள். 

வீட்டில் இருக்கும் இருள்நீங்கி மகாலட்சுமி மீண்டும் வாசம் செய்வாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டில் இருள் சூழ்ந்து பிரச்சினை வரப்போகிறது என்று உங்கள் உள் மனது சொல்லும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த தண்ணீரை தெளித்து விட்டால், வரக்கூடிய பெரிய கஷ்டங்களில் இருந்து கண்டிப்பாக தப்பித்துக் கொள்ளலாம்
இந்த பதிவு உங்க எல்லாருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும் இதை உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க என்னுடைய blog யை follow பண்ணுங்க இன்னும் இதைப்பற்றி தெரிந்து  கொள்ள என்னுடைய சேனல் Tamilnattu  samayal யை subscribe பண்ணிகோங்கள் நன்றி வணக்கம் ---ஈஸ்வரி சரவணன் 






துளசி தேவிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்! (4.5.2021)செவ்வாய் கிழமை

துளசி தேவிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்! (4.5.2021)செவ்வாய் கிழமை 

துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம் 
முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை பாடுங்கள். உபதெய்வங்கள் பிரபாவத்தை, சக்தியை எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும் அவை ஈடாகுமா. கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை தனது சிரத்தில் விஷ்ணு தாங்கினார். 
துளசி மாதா,நமஸ்காரங்கள். விஷ்ணுவின் சரீரத்தில் நீ சாற்றப்படும் போது, எல்லோரையும் நீ பரிசுத்தமாக்குபவள். துளசி தேவி, உனது தளத்தால் நான் ஸ்ரீ ஹரியை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும் இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில் இருக்கிறேனே. 
துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான். துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு பக்க துணையாக இருந்தவளே நீ தானே. 
துளசி மாதா,நீ சாமான்யமானவளா. சரயு நதிக்கரையில் வசிஷ்டர் அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே ராக்ஷசர்களை அழித்தார்.உனக்கு நமஸ்காரம். அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ அவளுக்கு தெம்பை தந்தவள். 
அம்மா துளசி, சிவ பிரானை அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே வளர்த்து பார்வதி தேவி வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும் சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள்ளவும். அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி. உனக்கு நமஸ்காரங்கள். 
துளசி தேவி, ஸ்ரீ ராமபிரான் உன்னை வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை வளர்த்து பூஜித்தாள் . உனக்கு நமஸ்காரங்கள். 
துளசி தேவி, உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல் சகல ஸ்தாவர ஜங்கம ஜீவர்களும் வணங்குபவள் நீ. 
அம்மா உன்னை வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன் சுக்ரீவன், வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள் 
ஹனுமான், உன்னை வணங்கியபிறகு தானே, சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை வெற்றி கரமாக முடித்து திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள் 
துளசியை தொடுவதாலே, சகல பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும் நாடும் துளசி மாதா உனக்கு நமஸ்காரங்கள். Helpmeyoga - Drinking Theertham – Taste Sense Activated... | Facebook
ஒரே ஒரு துளசி தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம் செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும், பாத்து பசுக்களை தானம் செய்த புண்யமும் பெறுவானே. உனக்கு நமஸ்காரங்கள் தாயே. 
தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின் பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே, எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம். 

துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை கிருஷ்ணன் அவன் செய்த பாவங்களை மன்னித்து அருள்கிறார். துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம் இல்லை. ஏன் என்றால் அங்கே அதிர்ஷ்ட தேவதை குடி கொண்டவள்.துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே. 





சனி, 1 மே, 2021

GOOD NEWS

அறிவிப்பு👏

Tamilnattu Samayal YouTube Channel Analytics Report - PLAYBOARDநண்ப👏👏👏👏ர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.எனக்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகின்ற என்னுடைய followers அனைவருக்கும் என் blog அண்ட் channel மூலமாக நன்றி 🙏.என்னுடைய சேனல் Tamilnattu channel லையும் பாருங்கள் subscribe பண்ணிகோங்க அனைத்து ஆனமீக தகவலை தெரிந்து பலன்களை அடையுங்கள்.இறைவனின் அருளால் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் .இது ஆனமீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே நான் சொல்லுவது. மற்றவர்களுக்கு அல்ல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என் சேனல் பார்த்து பலன் பெறுங்கள்.இனி தொடர்ந்து blog கும் வரும் நல்ல விஷயங்களை நம் மனதில் ஏற்றும் போது நல்லதே நமக்கு நடக்கும் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய 🙏🙏---ஈஸ்வரி சரவணன்  

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரம்கிடைக்கும்

    see my YouTube channel Tamilnattu samayal this channel is related to god .subscribe and support my channel

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய 
வரம்கிடைக்கும்


  நிறைய பணம் சம்பாதிக்கனும், வீடு வாங்கனும், வாகனம் வாங்கனும், இப்படி எல்லோருடைய மனதிலும் ஆசை இருக்கத்தான் செய்கின்றது. இதற்கெல்லாம், நமக்கு யோகம் கிடைக்க வேண்டுமென்றால், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை என்றே சொல்லலாம். வெள்ளிக்கிழமை அன்று, நாம் செய்யும் பூஜையோடு சேர்த்து, மகாலட்சுமியையும், அஷ்டலட்சுமியையும் நினைத்து, இந்த முறைப்படி பூஜை செய்தால், வேண்டிய வரம் கூடிய விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தர்கள் தங்களுடைய சித்த குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கும் முறையை வைத்து, சுலபமாக சொல்லப்பட்டுள்ள, ஒரு பூஜை முறை தான் இது. இந்த பூஜைக்கு, தேவையான பொருட்கள் என்னென்ன? இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்ளலாம்.The Pital Store Brass plate 6 inch long for multipurpose use Quarter Plate
ஒரு சிறிய பித்தளைத் தாம்பாளத் தட்டு, ஒரு சிறிய மண் பானை, மண் பானை நிரப்பும் அளவிற்கு தேவையான கல் உப்பு, மல்லிகைப் பூ, ஒரு ரூபாய் நாணயம், இரண்டு மண் அகல் தீபம், தீபம் ஏற்ற நல்லெண்ணெய், நெய், வெற்றிலை 3. இவ்வளவுதான். வெள்ளிக்கிழமை பூஜையை நீங்கள் எப்படி செய்கிறீர்களோ அந்த பூஜையோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரின் முன்பு இந்த முறைப்படி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய வேண்டுதல், லட்சுமி தேவியின் செவிகளில் சீக்கிரம் விழும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலில் மல்லிகை பூவை வைத்து பூஜை அறையையும், மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்தையும் அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, பூஜை நன்றாக நடந்து முடியவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் நீங்கள் ஏற்றக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு உங்கள் வீட்டு வழக்கப்படி ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது மகாலட்சுமி பூஜையை தொடங்க போகின்றோம். மனதிற்குள் ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே, சிறிய அளவிலான பித்தளை தாம்பூலத்தை எடுத்து வைத்து, அதன் மேல் மண் பானையை வைத்து, Clay Handi in Delhi, Delhi | Clay Handi Price in Delhiமண் பானையில்ண்நேரடியாக பித்தளை தட்டில் வைத்தால் நிற்காது. இதற்காக பச்சரிசியையோ அல்லது சிறிதளவு மஞ்சளையோ குழைத்து பானையின் அடியில் வைத்து கீழே சாயாமல் நிற்க்க வைத்துக் கொள்ளுங்கள்.) மண் பானையின் வாய்ப்பதியை சுற்றி வெளிப்பக்கமாக, மல்லிகைப் பூ  கட்டி விட வேண்டும். அதன் பின்பு மண் பானை நிறைய கல் உப்பைக் கொட்டி விட வேண்டும். அந்த மண் பானையில் கல்லுப்பு முழுமையாக நிறைந்து இருக்க வேண்டும்.Sea Salt (கல் உப்பு) - Grocery D2D Onlineகல் உப்பின் மேல், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.  பின்பு, நீங்கள் வைத்திருக்கும் ஒரு மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். ஒரு தீபத்தில் எண்ணை ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு தீபங்களையும், வெற்றிலையின் மேல் வைத்து, ஏற்ற வேண்டும். இரண்டு  வெற்றிலைவரம்கிடைக்கும் வைத்து, தனித்தனி தீபங்களாக இரண்டு தீபங்கள் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றும்போது உங்களது கோரிக்கைகள் என்ன என்பதை மனதார சொல்லிக்கொண்டே ஏற்ற வேண்டும். மகாலட்சுமியும், அஷ்ட லக்ஷ்மி தேவியர்களும், நீங்கள் வைத்திருக்கும் அந்த மண் பானையில், நிறைந்திருக்கும் உப்பில் வந்து அமர்ந்து, நீங்கள் வேண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக தீப, தூப ஆராதனை காட்டி உங்களது வெள்ளிக்கிழமை பூஜை எப்படி நிறைவு செய்வீர்களோ அப்படி நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த மண் பானையானது உங்கள் வீட்டு பூஜை அறையில் அப்படியே இருக்க வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து முடித்த பின்பு, சனிக்கிழமை அன்று அந்த கல் உப்பை எடுத்து, தண்ணீரில் கரைத்து விட்டு, உப்பு கலந்த தண்ணீரை கால் படாத இடங்களிலோ, அல்லது மரத்திற்கோ ஊற்றி விடலாம். கல் உப்பின் மேல் வைத்திருந்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களது பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நம்பிக்கையோடு மகாலட்சுமியை வேண்டி செய்யும் இந்த பூஜையானது, மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்று சொல்லப்பட்டுள்ளது நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பலனடையலாம்.  

intha pathivu ellorukkum pidichurukkum nu ninaikkirean  
subscribe and support my blog and channel Tamilnattu samayal 🙏