செவ்வாய், 21 மே, 2019

சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்

தொடர்புடைய படம்

சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்



நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.
சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.
சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.
இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.
கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.
விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.
சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.
ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.
மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.
நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.
நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

லக்ஷ்மி நரசிம்மர் 108 போற்றி

 ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
ஓம் யோக நரசிங்கா போற்றி
ஓம் ஆழியங்கையா போற்றி
ஓம் அங்காரக் கனியே போற்றி
ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
ஓம் சங்கரப்ரியனே போற்றி
ஓம் சார்ங்க விற்கையா போற்றி

ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
ஓம் தாமரைக்கண்ணா போற்றி
ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
ஓம் இராவணாந்தகனே போற்றி
ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

ஓம் பெற்ற மாளியே போற்றி
ஓம் பேரில் மணாளா போற்றி
ஓம் செல்வ நாரணா போற்றி
ஓம் திருக்குறளா போற்றி
ஓம் இளங்குமார போற்றி
ஓம் விளங்கொளியே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
ஓம் எங்கள் பெருமான் போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேங் கடத்துறைவா போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நால் தோளமுதே போற்றி
ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

ஓம் மூவா முதல்வா போற்றி
ஓம் தேவாதி தேவா போற்றி
ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
ஓம் வடதிருவரங்கா போற்றி
ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

ஓம் மாலே போற்றி
ஓம் மாயப் பெருமானே போற்றி
ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
ஓம் அருள்மாரி புகழே போற்றி
ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
ஓம் முந்நீர் வண்ணா போற்றி
ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
ஓம் அரவிந்த லோசன போற்றி
ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
ஓம் பின்னை மணாளா போற்றி
ஓம் என்னையாளுடையாய் போற்றி

ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
ஓம் நாரண நம்பி போற்றி
ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
ஓம் இனியாய் போற்றி
ஓம் இனிய பெயரினாய் போற்றி
ஓம் புனலரங்கா போற்றி
ஓம் அனலுருவே போற்றி
ஓம் புண்ணியா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கோளரியே போற்றி

ஓம் சிந்தாமணி போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மாமணி வண்ணா போற்றி
ஓம் பொன் மலையாய் போற்றி
ஓம் பொன்வடிவே போற்றி
ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
ஓம் தயரதன் வாழ்வே போற்றி

ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வரமருள்வாய் போற்றி
ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
ஓம் பத்தராவியே போற்றி
ஓம் பக்தோசிதனே போற்றி 













ஓம்