வியாழன், 31 மே, 2018

பூசை அறையை எப்படி வைப்பது?

பூசை அறையை எப்படி வைப்பது? 

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் க்கான பட முடிவு

சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.
இன்றைய அவசர யுகத்தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் கூடச் செய்ய நேர மின்றி நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் வீட்டில் பூஜை யறையில் ஒருசில நிமிடங்கள் கண்கள் மூடிப் பிரார்த்திப்பது மன நிம்மதியைத் தருவதாக அநேகர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
மனிதனுக்கு வாழ்க்கை யில் நிம்மதியைத் தரு வது ஆன்மீகமே. வாழ்க்கையில் ஏற்படும் சுகதுக்கங் கள் எல்லாவற்றிற்கும் தெய்வ வழிபாடு முக்கியமானதாகின்றது.
இதில் எந்த தெய்வத்துக்கு எதை எப்படிச் செய்தால் நல்லது என்று எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன, மத, மொழி பேதமின்றி நம் நாட்டு மக்கள் கோயிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி தினசரி பூஜைகள், விரதங்கள், ஹோமங் கள், யாகங்கள் என்று பலவாறாக தெய்வத்தை வணங்குகிறார்கள். இப்படி இருக்க நம் நாட்டு பெண்கள் தினமும் வீட்டில் பூஜை செய்வது என்பது ஒரு பழக்கமாக உள்ளது. நாம் தெரிந்து சில விஷயங்களை செய்கிறோம். தெரியாமல் பல விஷயங்களை செய் கிறோம். இதில், நாம் நல்லது என்று நினைத் துக் கொண்டு பல தவறான பூஜை விதிகளை கடைப் பிடிப்பதும் உண்டு. வீட்டில் அனைவரும் நலமுடன் வாழவும், சந்தோஷமாக இருக்கவும் பூஜையறையை தூய்மையாக கோவில் போல  வைத்துக் கொள்ள வேண்டும்.
சில வீடுகளில் இடப்பற்றாக்குறை. காரணமாக படுக்கை அறைச் சுவரில் அல்லது சமையலறைச் சுவரில், உள்ள அலுமாரிகளைப் பூஜை அறையாகப் பயன்படுத்துவதுண்டு. சில சமயங்களில் மரப்பெட்டிகளில் கடவுளின் படங்களை வைத்து வழிபாடு செய்யப்படுவதும் உண்டு.
பூஜையறை என்பது நம் வீட்டில் உள்ள கோவில் என்றே சொல்லலாம். பூஜையறையில் முதலில் தெய்வ படங்களை சுவரில் மாட்டும் பொழுது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும். படங்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். இறந்தவர்கள் படங்களை பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.
சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. குடும்பம் சந்தோஷமாக, ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புவது உண்டு. ஆகையால் உக்ர தெய்வங்களை வழிபடுவது அவ்வளவாக உகந்தது அல்ல.
உக்ர தெய்வங்களை வழிபடுவது என்றால் அதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சில வீடுகளில் சில உக்ர தெய்வங்களை வழிபடுபவர்கள் உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் தனியாக சுத்தமாக இருக்க வேண்டும்.
தெய்வச் சிலைகளை சில பேர் வீட்டில் வைத்து பூஜை செய்வது உண்டு. சிலைகள் எப்பொழுதுமே 2 அடிக்கு மேல் இருக்க கூடாது. மண் சிலைகளாக இருந்தாலும் சரி, விக்ரஹங்களாக இருந்தாலும் சரி, முறையாக பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வைத்திருந்தால் நமக்கு பலன் ஏதும் இல்லை.பூஜை அறை க்கான பட முடிவு
பூஜை அறை என்று தனியாக இருந்தால் பூஜை முடிந்தவுடன் கதவுகளை சாத்தி வைப்பது நல்லது. பெண்கள் சுத்தமாக இருக்கும் பொழுது மட்டுமே வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது. அப்படி இல்லாதபட்சத்தில் அது தெய்வ குற்றமாகும்.பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜைக்கு ஏற்ற மலர்கள் என்று பார்த்தால் வாசனை மலர்களால் மட்டுமே அர்ச்சனை செய்வது நல்லது. கண்டிப்பாக செவ்வரளி மலர் வீட்டில் பூஜைக்கு ஏற்றதல்ல. கோவிலில் துர்க்கைக்கு மற்றும் அம்மனுக்கு அரளி பூ உகந்தது. ஆனால் வீட்டில் அரளி பூவால் அர்ச்சனை செய்யக் கூடாது. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல் பெண் தெய்வங்களுக்கு மல்லிகை, முல்லை, மற்றும் ஜாதி, தாமரை இப்படி அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்லது.
தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும் அது பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது. ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும். தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக் கக் கூடாது. பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜையறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. சிலபேர் முப்பாட்டனார் காலத்தில் உள்ள படங்கள், கடையில் விற்கும்சக்கரம், இயந்திரங்கள், உறவினர், நண்பர்கள் கொடுத்தார்கள் என்று பூஜையறை முழுவதும் படங்களை ஒட்டி அது பாதி கிழிந்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் படங்களை நாம் கடலில் போடுவது நல்லது. தொடர்புடைய படம்தொடர்புடைய படம்

வீட்டில் பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள். ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்யலாம். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.
பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில் தெய்வ படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால் தெய்வம் நம்மில் குடிகொள்ளும். சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.

புதன், 30 மே, 2018

தலையிலேயே விடிந்த சாபம்!


தலையிலேயே விடிந்த சாபம்! 

பகவானிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவனருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பதில்லை பகவான். “பகவானே… எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு…’ என்று கூறினாலே போதும்; கிடைக்கும். கீதோபதேசம் முடிந்ததும், “கிருஷ்ணா… நீ சொன்னதையெல் லாம் கேட்டேன். இப்போது நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; செய்கிறேன்…’ என்று, முடிவை பகவானிடமே விட்டு விட்டான் அர்ஜுனன்.
மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது, ஜயத்ரதன் என்பவனை, சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள், அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை; அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது. “என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று கேட்டான்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான்; இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்…’ என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடன், அர்ஜுனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது…
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
இந்த ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். அவர் கோரமான தவம் செய்ததன் பலனாக, இந்த பிள்ளையைப் பெற்றார். அந்த பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்…’ என்றது.
இதைக் கேட்ட விருத்தட்சரன், “தன் தவ வலிமையால், யுத்த களத்தில் எவன் என் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்…’ என்று சாபம் விட்டார்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி, “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோ பாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள்ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவரே சொல்லியிருந்தபடி இவரது தலையே சுக்கல்களாகியது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால், பகவானுடைய சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது.
நாம் என்ன தான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான் தான்.
அதனால், எல்லாப் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்து விட்டு, “பகவானே… எல்லாம் உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய்!’ என்று சொல்லி, அவனையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவன் கடமை, அவன் செய்வான்!

செவ்வாய், 29 மே, 2018

வார தீப பரிகார பூஜை


 வார தீப பரிகார பூஜை 


வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சனைகளும் படிப்படியாக மறையும்.தடைகள், பிரச்சனைகளை தீர்க்கும் வார தீப பூஜை

குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச் செய்யும் பரிகாரம்

வார பரிகாரம் க்கான பட முடிவு
குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச் செய்யும் பரிகாரம் 
சில குடும்பங்களில் எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தேவையில்லா விஷயங்களுக்கு கூட சண்டை வரும்.எவ்வளவு செல்வம் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி,மகிழ்ச்சி இருக்காது.

குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை,விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொள்ளுங்கள்.. அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி, பூஜை அறையில் வைத்து அதுக்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்கள் முன்னோர்களையும்,குலதெய்வத்தையும் வணங்கி வாருங்கள் . கூடிய சீக்கிரம் உங்க குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.

கோவில் மூடியிருக்கும் போது கடவுளை தரிசிக்கலாமா?


கோவில் மூடியிருக்கும் போது கடவுளை தரிசிக்கலாமா? க்கான பட முடிவு



கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்ரதாயங்கள் உண்டு. அதை பற்றிய சில ஆன்மீக தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.தொடர்புடைய படம்
எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.
இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.
கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.
குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
செவ்வாய் கிழமை, புதன் கிழமை ,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.
இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.


வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. 


பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.









தீர்க_சுமங்கலி_பவா …!என்றால் என்ன?

தீர்க_சுமங்கலி_பவா க்கான பட முடிவு

“தீர்க சுமங்கலி பவா ” என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
திருமணத்தில் ஒன்று,
60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று
இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
uy;




பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
';lh
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம்,
அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய…
அக்னி,
சூரியன்,
சந்திரன்,
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும், அதிபதிகள் ஆவார்கள்.
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே….
எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
uyo
காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான்,
சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்
இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு
96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்தொடர்புடைய படம்

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.
சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.
நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
 

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
1.தெய்வீகக் குணம்,
2.தூய்மைக் குணம்,
3.மேன்மை,தொண்டு,
4.தன்னடக்கம்,
5.ஆற்றல்,
6.விவேகம்,
7.உண்மை,
8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
9.மேன்மை
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
திருமணம் என்பது ஓர் உன்னதமான நாள் ஆகும். இல்வாழ்வில் இணையும் மணமக்களை ஆல் போல் தழைத்து! அருகு போல் வேரூன்றி! மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர்கள் என பெரியோர்கள் வாழ்த்த நடைபெறும் திருமணத்தை ஒரு பொன் நாள் ஆக அமைத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

திங்கள், 28 மே, 2018

காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?



காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?


ஞாயிறு, 27 மே, 2018

திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்



திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்


சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா?

சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா? 


னம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்தவர் சாய் பாபா. ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை இரண்டை மட்டுமே தன் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறுபவர். 
சாய் பாபா
நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார்.
பின்வரும் சம்பவம் அந்தப் பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது.
ஷீரடிக்கு நானூறு மைல் தொலைவில் வாழ்ந்தவர் திருமதி சாந்தா என்னும் பெண்மணி. இவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவுக்கு விரதமிருந்து, நைவேத்தியம் செய்து அவரின் திருவுருவப் படத்துக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம்.
ஒருநாள் வியாழக்கிழமை...
அன்று விடுமுறை என்பதால், அவளின் மகன் பாபு வீட்டில் இருந்தான். தன் தாய் பலவிதமான பலகாரங்களைச் செய்வதைக் கண்டு, அவளிடம், ''அம்மா! இன்று நம் வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரவிருக்கிறார்களா? ஏன் இத்தனை விதமான இனிப்புகளும் பட்சணங்களும் செய்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அவனுக்கு பதில் அளிக்கும்விதமாக சாய் பாபாவின் புகைப்படத்தைக் காட்டி, "இவர் ஷீரடியில் வசிக்கிறார். இவருக்கு நைவேத்தியம் செய்வதற்காகவே அதிரசம், பாயசம் முதலியவற்றைச் செய்துவைத்திருக்கிறேன்" என்றாள்.
இதைக் கேட்ட பாபு ஆச்சர்யத்துடன், ``அம்மா! படத்துக்கு முன்னாடி வைத்தால், இவர் எப்படி சாப்பிடுவார்?’’ என்று கேள்வி எழுப்பினான். மேலும், ``ஷீரடி ரொம்பத் தொலைவில் உள்ளது. அங்கிருந்து அவரால் எப்படி வர முடியும்?’’ என்றான்.
தன் பூஜை வேளைகளில் மும்முரமாக இருந்த சாந்தா அவனைச் சமாதானப்படுத்தும்விதமாக, "சரியாகப் பன்னிரண்டு மணிக்கு பாபா நம் வீட்டிற்கு வருவார். நீ பொறுமையாக இரு. நிச்சயம் அவர் வருவார்" என்றாள். 
அப்போது விளக்கில் எண்ணெய் இல்லாததைக் கவனித்தவள், தன் மகனிடம், ''கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டுக்கொள். நான் கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிக்கொண்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டுக் கடைக்குச் சென்றாள்.
சாய் பாபா
பாபுவின் கண்கள் வாசலை நோக்கியே இருந்தது. படத்தில் இருக்கும் சாய் பாபாவை நேரில் காண அவன் மனம் விரும்பியது. அவன் மணி பன்னிரண்டு ஆவதற்காகக் காத்திருந்தான்.
அதே நேரம் - 
ஷீரடியில் மதிய ஆரத்தி முடிந்து அனைவரும் பாபாவிடம் கற்கண்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால், கற்கண்டை விட மிகவும் சுவையானது அவரின் அருளுரை. கல்கண்டின் இனிமையைப்போலவே அவர் பேசத் தொடங்கினார்.
"உங்களுக்கு எந்த வகையிலும் உறவில்லாத ஒருவர், ஆறறிவு உள்ள மனிதராக இருக்கட்டும், பிராணிகள், விலங்குகள் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை அன்புடன் நடத்துங்கள். உங்களை நாடி வருவோரை அன்புடன் வரவேற்று, உபசரியுங்கள். அவர்களிடத்தில் வெறுப்பினைக் காட்டாதீர்கள். அவர்கள் வேண்டியதை உங்களால் கொடுக்க இயன்றால் அளியுங்கள். இல்லையேல் அமைதியாயிருங்கள். அதை விடுத்து அவர்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். உலகமே தலைகீழாக மாறட்டும். ஆனால், நீங்கள் உங்களுடைய நல்ல குணத்தை மாற்றாதீர்கள். கடவுள் ஒருவரே நமக்கு மேலானவர். அவரின் செயல்கள் அனைத்தும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நம்முடைய ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் அவரே. அவரின் அருளாசியினால் மட்டுமே நாம் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும்" என்று கூறினார்.
இத்தகைய சிறப்பான அமுதமொழிகளை பாபா கூறி முடித்ததும், பக்தர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அந்தத் தருணத்தில் பாபுவின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்ப்பதற்கு கதவைத் திறந்தான் பாபு. வெளியே வெள்ளை உடையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து சாயிநாதர் நின்றிருந்தார்!
சாய் பாபா
கடையிலிருந்து தன் தாய் திரும்பி வந்ததும், ''அம்மா, நீ சொன்னதுபோல் பாபா நம் வீட்டுக்கு வந்தார். அதுவும் சரியாக பன்னிரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினார்.  திறந்து பார்த்தால் பாபா நின்றுகொண்டிருந்தார். 'நீ என்னை நினைத்து அழைத்தால், நான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வந்துவிடுவேன்' என்று கூறி, ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்'' என்று கூறினான்.
பாபாவின் லீலைகள் அந்தத் தாய்க்கு நன்றாகத் தெரியும் என்பதால், மகன் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனவளாக, பாபாவின் திருவுருவப் படத்துக்கு நமஸ்காரம் செய்தாள்.
தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் சென்று சாயிநாதர் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார். இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்
இன்னொரு சம்பவம்...
பாபாவின் மீது பக்தி அதிகம் கொண்ட ஒரு பெண், தினமும் தான் சமைத்த உணவினை பாபாவுக்கு நைவேத்தியமாக வைத்துவிட்டு, அதன் பிறகே அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். 
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால், பாபாவிற்கு அன்றாடம் செய்யும் நைவேத்தியத்தைச் செய்ய இயலவில்லை. அதைப் பற்றி அவள் யோசித்து மனம் வருந்திக்கொண்டிருக்கும்போது, அவள் வீட்டின் வாசலில் ஒரு நாய் நிற்பதைக் கண்டாள். அதற்கு அளிப்பதற்காக திண்பண்டம் எடுக்க வீட்டிற்குள் விரைந்தாள். 
ஆனால், அவள் திரும்பி வருவதற்குள் அந்த நாய் சிறிது தொலைவு சென்றுவிட்டது. அந்தப் பெண் ஏமாற்றத்துடன் பின்வருமாறு வேண்டலானாள், 'சாயிநாதா! தாங்கள்தான் அந்த நாயின் வடிவில் என்னிடம் உணவு பெற வந்தீர்கள் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நான் நினைத்தது உண்மையானால் அந்த நாய் இங்கு வந்து நான் கொடுக்கும் திண்பண்டத்தை உண்ண வேண்டும்' என்று வேண்டினாள்.
அதிசயிக்கும் விதமாக தொலைவில் இருந்த நாய் ஓடி வந்து, அவள் வைத்த தின்பண்டத்தைச் சாப்பிட்டது.