வியாழன், 30 ஜூன், 2016

சாய்பாபாவின் உதி

அன்பு தோழிகளுக்கு என் அன்பு நமஸ்காரங்கள்.


என் குருநாதராகிய சாய்பாபாவின் அருளால் அவரைப் பற்றியும் ,அவர் அளித்த உதியின் மகிமையைப் பற்றியும்   சொல்வது ஒரு உண்மையான பக்தியை அறிய ,ஒரு வாய்ப்பு ஆகும்.





வாருங்கள்! அவர் கொடுத்த உதியின் பெருமையை அறிவோம்.


 சாய்பாபாவின் உதி


துவாரகாமாயீயில்  சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார்.அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

தன் பக்தர்களுக்கு இந்த அக்னி  குண்டத்திலிருந்து 'உதி' என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்து தருவார்.அக்னி  குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.எல்லாவித
ஊழ் வினைகளையும்,வியாதிகளையும் போக்கவல்லது.தினமும் குளித்தபின் உதியை நெற்றியில்  இட்டு கொண்டும் ,கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும்,பொறுமையும் ஆகும்.அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால்,பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

உதி விதியை மாற்றும் 


துகாராம் பார் ஷீரடியில்  விவசாயம் செய்து வந்தார்.1912ம் ஆண்டு ஷுரடியிலிருந்து 20கிலோ மீட்டர் தொலைவில் கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்க புறப்பட்டு விட்டார்.

அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு வேலை கிடைக்கும் என புறப்பட்டார். 

கோபர்கான் சாலையில் செல்லும்போது பாபா அவரது கழுத்தில் தன் கையை போட்டு போகாதே என்றார்.ஆனால் துகாராம்  பாபாவின் வார்த்தை கண்டு கொள்ளவில்லை.கரஞ்சிகாவோன் வந்தார்.வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் நிற்கவே இல்லை.தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர் தற்போது சொந்தக்காரர்களை சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.

பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார்.காய்ச்சல் நிற்கவில்லை. 45நாட்கள் தொடர்ந்தது.உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்ப சொன்னார்.உதியை இட்டு கொண்ட  மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று  விட்டது.

உதியின் சக்தியும் செயல் திறமையும் 

ஒருமுறை பாலாஜியின் திவசத்தின் போது சில விருந்தினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்ட பேர்களை விட  மூன்று மடங்கு பேர் வந்து விட்டனர்.

பாலாஜி மனைவி திகைத்து போய் விட்டாள்.குழுமியுள்ள மக்களுக்கு சாப்பாடு பற்றாது என்றும்,அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கெளரவம் பாதிக்கக்கூடும் என்றும் அவள் நினைத்தாள்.அவளுடைய மாமியார் பயப்படாதே.அது நம்முடைய உணவல்ல.சாயியினுடையது.

ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதி போட்டு ஒரு துணி போட்டு மூடி அதை திறக்காமலே அவர்களுக்கு  பரிமாறப்பட்டது.சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார் என்று கூறித் தேற்றினாள்.அவரை கூறியபடியே செய்தாள்.சிறிது நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது.பரிமாறுவதற்கு உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததுடன் ,மீதமும் இருந்ததை கண்டார்கள்.


பாபாவின் அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.பாபா நம்மை என்றும் காப்பார்.பாபாவின் மேல் நம்பிக்கையும் பொறுமையும் வையுங்கள்.அவர் நம்மை நல்வழிக்கு கூட்டி செல்வர்.

மீண்டும் அடுத்த பதிவில் இன்னுமொரு தலைப்பில் உங்களை சந்திக்கிறேன்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 




















செவ்வாய், 28 ஜூன், 2016

கலசம்

கலசம்


நாம்  செய்யும் அனைத்து நல்ல காரியங்கள்,விசேஷங்கள் சிறப்புற நடைபெற கலசம் வைத்து அதில் நாம் வணங்கும் தெய்வத்தை ஆவாகரணம் செய்து வழிபடுவது இந்துக்கள் செய்யக்கூடிய ஒன்றாகும்.

கலசம் என்பது என்ன?

மண் அல்லது செம்பு,பித்தளை,தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம்-செம்பு-சிறு பானைதான்  கலசம் எனப்படுகிறது.

இந்த கலசத்தில்  மாவிலைகள் செருகப்பட்டு நடுவில்  ஒரு தேங்காய் வைக்கப்படும்.வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படுகிறது .பானையின் மேல் அழகான லக்ஷ்மி தேவியின் உருவத்தை வரைவது உண்டு.இந்த பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.

பூரண கும்பம் 


கலத்தில் நீரோ அல்லது அரிசியோ நிரப்பப்படும்.இதற்கு பூரண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

கிரக பிரவேசம்,திருமணம்,விரத நாட்களில் கலசம் வைத்து வழிபடுவார்கள்.மேலும் விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில் ,வருவோரை வரவேற்க்கும் வகையில் இக்கலசம்  வைக்கப்படுகிறது.
பெரியோர்களை முக்கிய பிரமுகர்களை பூரண கும்பம் கொடுத்து வரவேற்பர்.

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?


உலகை படைக்கும் முன் விஷ்ணு,பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தார்.அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.அந்த மலரிலிருந்து படைக்கும் கடவுளான பிரம்மதேவன் தோன்றினார்.பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

கலசத்தில் உள்ள நீரானது ,எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ,அந்த நீரைக் குறிக்கும்.அந்த புனித நீர்தான் அனைத்திற்கும்  உயிர் அளிக்கும் சக்தி படைத்தது.இந்த நீர் எண்ணிலடங்கா உருவில்,வடிவில்,உயிர்த்துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும் உலகிலுள்ள மங்களமான அனைத்தையும் படைக்கும் சக்தி பெற்றது.கலசத்தில் வைக்கப்படும் மாவிலைகளும்,தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கும்.கலசத்தில் சுற்றிய நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாக பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது.ஆகவேதான் கலசம் புனிதமாக கருதி பூஜிக்கப்படுகிறது.

புனிதமான நதிகளின் நீர் அனைத்தும் வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.பின்னர் பூஜைகள் முடிந்தவுடன்,நம் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும்  புனித  நீராக தெளிக்கப்படுகிறது.
ஆலய கும்பாபிஷேகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை ஆலய கோபுர கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது .









செவ்வாய், 21 ஜூன், 2016

16வகை லிங்கங்கள்

16வகை லிங்கங்கள் 



என்  அன்பு ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.


நம் எல்லோருக்கும் பரம்பொருளாக விளங்கும் ஈசனைப் பற்றி சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பிரபஞ்சமே அவர் அருளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.நம்முடைய ஆன்மா இறுதியில் அவர் காலடியில் தான் சென்றடையும்.இதில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

இருக்கும் நாளில் தினமும் அவருடைய நாமங்களை சொல்லுவதும்,அவர் அருள் சின்னமான திருநீறைப்  பூசுவதும் நம் இந்துக்கள்  ஒவ்வொருவரின் கடமையாகும்.நாமும் இதைப்பின்பற்றி ,நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுப்போம்.

லிங்கங்கள் பல உள்ளன.அதைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றையும்,அறிந்தவற்றையும் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவுகளை எழுதுவதால்  எனக்கு பல ஆன்மீக விஷயங்கள் தெரிய வழிவகுக்கிறது.அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.


இப்பொழுது  16வகையான லிங்கங்களைப் பற்றி பார்ப்போம்.

இஷ்ட லிங்கம்

மரகதம்,படிகம்,கருங்கல் இவற்றால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக வாங்கி,தன் ஆயுள் உள்ள வரை தன்னிடமே வைத்து கொண்டு தினமும் தான் செல்லுமிடம் எல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபாடும் லிங்கம் இஷ்ட லிங்கம் ஆகும்.

ஷணிக லிங்கம் 

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பிறகு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம்.இதை செய்வது எளிதானது.இது 16 வகைப்படும்.இதனை நாமே செய்யலாம்.குருவிடமிருந்து லிங்கம் பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

 சிவ ஆகமப்படி, 16 வகையான பொருட்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுவது பெரும் சிறப்பு என்று ரிஷிகள் கூறுகிறார்கள்.

எந்த வகை லிங்கத்தை வழிபட்டால் என்ன பயன் ? 

புற்று மண் லிங்கம் -----முக்தி தரும்.

ஆற்றுமண் லிங்கம் ----பூமி லாபம் உண்டாகும்.

பச்சரிசி  லிங்கம் -------பொருள் பெருகும்.

சந்தன  லிங்கம் -------சுகபோகம் உண்டாகும்.

மலர் லிங்கம்  ---------நீண்ட ஆயுள் கிடைக்கும்.

அரிசிமாவு லிங்கம்----உடல் வலிமை ஏற்படும்.

பழ  லிங்கம் -----------நல்லின்ப வாழ்வு  கிடைக்கும்.

தயிர் லிங்கம் -------- நற்குணம் பெறலாம்.

தண்ணீர் லிங்கம் ---மேன்மை அடையலாம்.

அன்ன லிங்கம் ------உணவு பஞ்சம் ஏற்படாது.

தர்ப்பைப்புல் லிங்கம் ---பிறவியில்லா நிலை தரும்.

சர்க்கரை ,வெல்லம்  லிங்கம் ----இன்பம் கிடைக்கும்.

பசு சாண லிங்கம் -----நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

வெண்ணெய் லிங்கம் ---மனமகிழ் அதிகரிக்கும்.

ருத்ராட்ச லிங்கம்-------நல்லறிவு வாய்க்கும்.

விபூதி லிங்கம்   ---------செல்வவளம் உயரும் .

ஒரு பயனுள்ள பதிவை என் அன்பு நண்பர்களுக்கு  கொடுத்த மனநிறைவுடன்,இந்த பதிவை முடிக்கிறேன்.

உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி 







சனி, 18 ஜூன், 2016

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி


ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி


பிரத்தியங்கிரா தேவி பத்ரகாளியின் அவதாரம் ஆவாள்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய்  திகழ்கின்ற மஹா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து ,1000 சிங்க முகங்கள்,2000 கைகளுடன் தோன்றியவள்.

கம்பீரமான விஸ்வரூபம்.சிரசின் மேல் நிழற் குடையாக ஆதிசேஷன் இருக்கின்றது.அடியவருக்கு வாரி வழங்கும் 4 திருக்கரங்கள் உள்ளன.கரங்களில் சூலம்,கபாலம்,பாசம்,டமருகம் திகழ்கின்றன.

"என் பக்தன் இவன் ,இவனிடம் வராதே"என்று எதிரி எச்சரிக்கும்விதமாக டமருகம்.


இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தை விழுங்கி ஜெயித்தவள்.இவளுக்கு அபராஜிதா என்ற பெயர் பெற்றவள்.அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால் ,நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி ,நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.

செய்வாய்,வெள்ளி,ஞாயிறு  வரும் ராகு காலம்,அமாவாசை,பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை,தேய்பிறை அஷ்டமி யாகம்,நடுநிசி வேளை  பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.

இந்த யாகம் நாம் நினைத்த காரியம் நிறைவேற வழிவகுக்கும்.

ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக சில மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடை பெறுகின்றன.

தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும்  காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை.எவருடைய கண்களுக்கும்  எரிச்சல் ஏற்படாத  அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது.கைமேல் பலன் தருவாள்.



மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி,லக்ஷ்மி,சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா  என்று புராணங்கள் கூறுகின்றது.


 மானாமதுரையில் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது.இக்கோவில் அம்பாளைத் தவிர தனி மனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படுவது இல்லை.


கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரர் ,பிரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பாக அமைத்துள்ளது.மிகவும் உக்கிரகமான முகத்துடன்,காட்சி தரும் இவள் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் ,கருணை உள்ளம் கொண்டவள்.

ஜெய் பிரத்தியங்கிரே ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே இந்த மந்திரம் அனைவரும் எளிதாக சொல்லக்கூடியது.

காயத்ரீ மந்திரம்

ஓம் அபரஜீதாய வித்மஹே 

பிரத்யங்கிராய தீமஹி 

தந்நோ உக்ர ப்ரசோதயாத் 

இம்மகா சக்தியை வணங்கினால் சத்ருபயம்,வியாதி,தடைகள் விலகும்.சுபிட்சமான வாழ்வு கிடைக்கும்.  







 









வியாழன், 16 ஜூன், 2016

சிவபெருமானின் 5 முகங்கள்

சிவபெருமானின் 5 முகங்கள்


சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழி படக்கூடிய மூம்மூர்த்திகளில்  ஒருவர்.சிவனை சிவன் என்றும்,சிவபெருமானை பரம்பொருள் என்றும் அழைக்கிறார்கள்.

சிவன் முப்பத்தாறு தத்துவங்களை கடந்து நின்று ஐந்தொழிலை செய்து,ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.


மூவகைத் திருவடிவங்கள் யாவை?

அருவம்,அருவுருவம்,உருவம் என்பவையாகும்.

அருவம் = கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவமாக இருந்தே, காரியங்களை செய்வது. இலயசிவன்(நிஷ்கள சிவன்,சத்தர்) என்று அழைக்கபடுவர். சிவபெருமான் ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் அருவ வடிவம் தாங்குகின்றார்.

அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம்,கை,கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.

உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து; அதன்மூலம் கண்களுக்கு புலனாகும்வகையில் முகம்,கை,கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். தென்முகக்கடவுள்,சோமஸ்கந்தர்,அர்த்தநாதீசுவரர்,நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும்.

சிவம் என்றால் செம்மை [பூரணத்துவம்]மங்களமானது என்று பொருள்.சிவதரிசனம் செய்யும் வேலைகளை கொண்டே பலன் கிடைக்கும்.

காலையில் சிவனை வழிபட்டால் நோய்கள் தீரும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்.
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல்,காத்தல் ,அழித்தல் ,அருளல் ,மறைத்தல் போன்றவை சிவனின் தொழில்களாகும்.

சிவனின் 5 முகங்களைப் பார்ப்போம்.

1.சத்யோஜாதம் 

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானைக் குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன்  வெண்மை நிறத்தில்,பிரம்மன் முன் தோன்றினார்.இந்த முகமே சத்யோஜாதம் ஆகும்.

2.வாமதேவம் 

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும் ,மானும்  மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தா.இந்த முகமே பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தார்.இந்த முகமே வாமதேவம் ஆகும்.

3.தத்புருஷம் 

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசை நோக்கி சிவனை குறித்து  தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.இறைவனின் இந்த முகமே தத்புருஷம் ஆகும்.பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார் .காயத்ரீயை வணங்கி வருபவருக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

 4.அகோரம் 

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராக நெருப்பினையும்,வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகம் அகோரம் என்று பெயர் பெற்றது.

5.ஈசானனம்  

கடைசியாக பிரம்ம தேவன் ஆகயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.இறைவன் சாம்பல் வண்ணத்தில் முக்கண் கொண்ட ,இளமதியை சென்னியில் சூ டியவாரும்,கோரைப்பற்கள் கொண்ட உருவமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.இறைவனின் இந்த முகமே ஈசானனம் எனப்படும்.

அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை.

மற்றொரு பெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

5முகங்களை நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தி கிட்டும் என்பது  பிரம்ம தேவன் வாக்கு ஆகும்.














செவ்வாய், 14 ஜூன், 2016

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

 சக்தி பீடங்கள்


சக்தி பீடங்கள் அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த இடமே சக்தி பீடமானது.அவ்வாறு 51 இடங்களில் சக்தியின் உடல்கள் விழுந்தன.

51 சக்தி பீடங்கள்,பாரத நாட்டில் 43 பீடங்களும் ,பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும்,நேபாளத்தில் 3 பீடங்களும்,தீபெத்தில் 2 பீடங்களும்,பாகிஸ்தானில் 1 பீடமும் அமைந்துள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற் கொள்வது ,அம்பிகையின் பரிபூரண திருவருளைப் பெற வழி வகுக்கும்.



சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு 

பிரம்ம புத்திரனான தட்சன்  ஆயிரம் ஆண்டுகள் கடும்தவம் புரிந்து,சர்வேஸ்வரான சிவபெருமானிடம் ,"பிரஜாபதி பட்டத்துடன்,ஈரேழு உலகங்களையும் ஆளும் வல்லமையை வரமாக பெற்றான்.அத்துடன் ஜெகன் மாதாவான அம்பிகையை புதல்வியாக அடையும் வரத்தை வேண்டி பெற்றான்.

எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து  உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையில் அகங்காரம் மேலிட ,தானே ஈஸ்வரன் என எண்ண  துவங்கினான்.தர்ம நெறியில் இருந்து முற்றிலும் விலகி செயல் பட்டான்.வரமளித்த இறைவனிடத்தில் பகைமை  கொண்டு ,பரம்பொருளான சிவபெருமானையே அவமதிக்கும்படி யாகமும் தொடங்கினான்.

ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்ற தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது.அன்னை பார்வதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி ,யாகசாலையில் தோன்றினார் .தட்சனோ தேவியை அவமதித்து பேசியதுடன் ஈசனையும் நிந்தித்து பேசினான்.சிவனை நிந்திப்பதை பொறுக்காத தேவி ஹோமகுண்டத்தில் விழுந்து உடலை மாய்த்து கொண்டார்.ஆனால் தீயால் மாளாத தேவி உயிர் இன்றி விழுந்து கிடந்தார்.

இந்நிகழ்ச்சியால் சிவபெருமான் கோபம் கொண்டு தட்சணையும்,யாக சாலையையும்,அதற்கு உடன் இருந்தவர்களையும் அளித்ததாக சிவபுராணங்கள் கூறுகின்றன.

இறைவனின் அருளால் ஆட்டின் தலையுடன் மீண்டும் தட்சன் உயிர்த்து எழுந்தான்.

சிவபெருமான் சதிதேவியின் திருவுடலை சுமந்தபடி உக்கிரதாண்டவம் ஆடத்துவங்க,மகாபிரளயம்  உருவாகும் அபாயம் தோன்றியது.ஸ்ரீ மகாவிஷ்ணு சர்வேஸ்வரரை அமைதியுற செய்யும் பொருட்டு,தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்பூமியில் சிதறும்படி செய்தார்.அவை 51 சக்தி பீடங்களாக உருவாகின.

51 சக்தி பீடங்கள் 

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் எலும்புகள் இங்கு விழுந்ததாகக் கூறுவர்.
2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.
3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.
4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.
5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.
 6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.
 7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.
 8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.
 9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.
 10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.
 11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.
 12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.
 13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
 14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.
 15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.
 16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.
 17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.
 18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.
 19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.
 20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.
 21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.
 22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.
 23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.
 24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.
 25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.
 26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.
 27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.
 28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.
 29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.
 30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.
 31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.
 32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.
 33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.
 34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.
 35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.
 36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.
 37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.
 38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.
 39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.
 40 - வராக சைலம் - ஜயா பீடம்.
 41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.
 42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.
 43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.
 44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.
 45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.
 46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.
 47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.
 48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.
 49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.
 50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.
 51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்.

இறைவனின் இருப்பை உணரவும்,தர்மத்தை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே.

ஆன்மாக்கள்,முதலில் இறைவனை மறுப்பது,அறியாமையால் எதிர்ப்பதும்,பின்னர் ஞானம் பெறுவது அறிந்ததே.தட்சனின் ஆட்டுதலை அஞ்ஞானம் குறிப்பது.ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது  இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.











  

ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆன்மீகத் தகவல்கள்

அன்புள்ள என்  இணையத்தள ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

நாம் அன்றாடம் பணிகளை, காலையில் ,இறைவனின் அருளுடன் ஆரம்பித்து,இரவில் நன்றிகள் சொல்லி முடிக்கிறோம்.எந்த காரியத்தை தொடங்கும்போதும் கடவுளின் துணையுடன் ,அருளுடன் ஆரம்பிக்க ,அது நமக்கு வெற்றியை தேடி தரும்.நமக்கு கிடைத்த நேரங்கள் பல.அதில் ஒரு சில நிமிடங்களாவது கடவுளை நினைக்க வேண்டும்.நம் வீட்டு குழந்தைகளுக்கும் கடவுளை தினசரி வணங்க சொல்லி கொடுக்க வேண்டும்.


ஆன்மீகத் தகவல்கள் 




சந்தியா வதனம் என்றால் என்ன ?


சந்தி என்றால் சந்திப்பு எனப் பொருள்.

இரவும்,காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது
காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சி பொழுது 
மாலையும்,இரவும் சந்திக்கும் சாயங்காலை பொழுது 
 ஆகிய மூன்று வேளைகளும் "சந்தி" அல்லது "சந்தியா" என்று பெயர்.

இந்த மூன்று வேளைகளிலும் கடவுளை வணங்குதல் "சந்தியா வதனம்" என்று பெயர்.

சந்தியா வதனம் சூரிய வழிபாடு முறைகளில் ஒன்றாகும்.

இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்தி கூர்மை உண்டாகும்.கண்கள் சுகமடையும்.ரத்த ஓட்டம் சீராகும்.மனத்தூய்மை அடையும்.


கையில் காப்பு கயிறு காட்டுவதால் பயன் 


கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு  காப்பு கயிறு கட்டுகிறார்கள்.மஞ்சள்,சிவப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கலசமாக செயல்படுகிறது.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிய வேண்டும்.பட்டு,தர்ப்பை,அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

காப்பு கயிறும் மந்திரத்தை ஈர்க்கும்.நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.


காசி கயிற்றில் முருகன்,பிள்ளையார்,சிவன் போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.

ஆண்கள் வலது கைகளிலும்,பெண்கள் இடது கைகளிலும் காப்பு கயிறைக் கட்டி கொள்ள வேண்டும்.

மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டுவதாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.
இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.

ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ் ,அதிகாரம் சேரும்.



என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .















வியாழன், 9 ஜூன், 2016

தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் 


படைத்தல்,காத்தல் ,அழித்தல் போன்ற மூத்தொழிலை செய்யும் மும்மூர்த்திகளின் அவதாரமே தத்தாத்ரேயர் அவதாரமாகும்.கலியகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும் ஒன்று சேர்ந்த ஆச்சரிய வடிவமாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய வடிவமாகும்.

தத்தாத்ரேயர் ஜெயந்தி ஒவ்வொரு வருடமும்  மே மாதத்தில் வரும்.எல்லா அவதாரத்திற்கும் ஆரம்பம்,முடிவு உண்டு.அனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது.ஏனெனில் ,அனுமனை பொல ,மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரன்ஜீவியாக போற்றப்படுகிறார்.

தத்தாத்ரேயர் பிறப்பு 

அனுசூயா என்பவர் கற்பின் சிகரம்.அவர் அத்ரி மகரிஷியின் மனைவியாவார்.அத்ரி மகரிஷி ஒரு பெரும் முனிவர்.அனுசூயா வருடக் கணக்கில் பல விரதங்களை அனுஸ்டித்தவர். பிரம்மா,விஷ்ணு,சிவனுக்கு இணையாக ஒரு ஆண்மகனை பெற்றெடுத்துக் கொள்ள விரும்பினார்.


ஒரு முறை லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி மூவரும் தங்கள் கணவன்மார்களை அனுப்பி அனுசூயாவின் பதிவிரதைத்தனம் எப்படி ?என்று சோதிக்கச் சொன்னார்கள்.

மும்மூர்த்திகளும் சன்னியாசிகளைப் போன்று உருமாற்றிக் கொண்டு,அனுசூயாவுக்கு முன் தோன்றி நிர்வாண கோலத்தில் தங்களுக்கு அன்னம் இடச் சொன்னார்கள். 


அனுசூயா கலங்கவில்லை.அவளுக்கு தன கற்பின் மீதும்,பதிவிரதை தன்மையின்மீதும் அதீத நம்பிக்கை.கையில் நீரை எடுத்து 'என் கணவருக்கு நான் செய்யும் பணிவிடை உண்மையானால் இந்த சன்னியாசிகள் மூன்று குழந்தைகள் ஆகட்டும்'என கூறி தெளித்தார். நீரைத் தெளித்தவுடனேயே மூவரும் குழந்தைகள் ஆகின.இதுவே அனுசூயாவின் கற்புக்கு அடையாளம்.



அந்த குழந்தை எல்லாம் தன்னுடையவை என்று நினைத்து அவைகளுக்கு தானே நிர்வாண  நிலையிலேயே பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்தாள்.அத்ரி மகரிஷி வீடு திரும்பி குளித்த பிறகு,அனுசூயா நடந்ததை எல்லாம் விவரித்தார்.அந்த மூன்று குழந்தைகளையும் அவர் காலடியில் சமர்ப்பித்தார்.அத்ரி மகரிஷி அந்த மூன்று குழந்தைகளையும் எடுத்துக் கொஞ்சினார்.அவைகள் ஒன்றாக ஆகின.இரு கால்கள்,ஒரு உடல்,மூன்று தலைகள் மற்றும் ஆறு கைகள் கொண்ட உருவமாக ஆகின.


சரஸ்வதி,லக்ஷ்மி,பார்வதி மூவரிடமும் நாரதர் அவர்களுடைய கணவன்மார்களுக்கு  ஏற்பட்ட கதியை எடுத்துச் சொன்னார்.அவர்கள் சாதாரண பெண்களின் உருவில்,அத்ரி முனிவர் முன் தோன்றினர்.தங்களுடைய கணவன்மார்களை மீட்டுத் தருமாறு வேண்டினர்.

வந்திருப்பது முப்பெரும் தேவியர் என்பதை அறிந்து உரிய மரியாதை செலுத்தினார்.அத்ரி மகரிஷி மூம்மூர்த்திகளையும்  தங்கள் உண்மையான உருவத்தை அடைய செய்தார்.மூவரும் "உங்களுக்கு அரிய குழந்தை பிறக்கும் அது பிற்காலத்தில் பெரிய பேர்பெற்ற மகரிஷியாக ஆகி விடும்.எங்களுக்கு இணையாக அந்தக் குழந்தை வளரும்.அதுவே அனுசூயாவின் விருப்பமும் ஆகும்.அந்த குழந்தைக்கு தத்தாத்ரேயர் என்ற பெரிய சூடப்படும்" என மகரிஷிக்கும்,அனுசூயாவிற்கும் வரத்தை கொடுத்தனர்.

அதன்படியே,மும்மூர்த்திகளின் ஒன்று சேர்ந்த வடிவமாக தத்தாத்ரேயர் பிறந்தார்.


தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.








திங்கள், 6 ஜூன், 2016

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் 

பித்ருக்களை சிரத்தையோடு வழிபாடு செய்தால் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு,வேலை,திருமணம்,மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது.பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பலன் உண்டாகாது.பித்ரு  தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.அதனை முதலில் போக்கிட வேண்டும்.பின்னரே,வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

பித்ருக்களுக்கு செய்யும் பூஜை இறைவனைச்  சேருகிறது.

.
ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம்  செய்யாமல் எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்று கொள்வதில்லை என விஷ்ணு பகவான் கூறியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .

ஆடி அமாவாசை ,தை அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

கோவில்களில் தர்ப்பணம் முடிந்தவுடன்,அன்னதானம் செய்தல் சிறந்தது.


திலா ஹோமம்  


மிகக் கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று திலா ஹோமம் செய்வது அவசியமானது.இதை வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும்.


திலா ஹோமம் எனப்படுவது நெல்லும்,எள்ளும் கலந்து செய்யும் ஹோமம் ஆகும்.


திலம் என்றால் எள்.திலா ஹோமம் செய்யும் அன்று இரவு ,இராமேஸ்வரத்தில்  தங்க வேண்டும்.சிரத்தையுடன் செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது  கருட பகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகா விஷ்ணு ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலா ஹோமம் செய்ய வேண்டும்.


வைணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் இராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக் கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்கள் ஆசிர்வாதம் பெறலாம்.

அமாவாசை தினத்தில் செய்யக் கூடாதவை 

அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாடு செய்பவர்கள்  வீட்டு  வாசலில் கோலம் போடக்கூடாது.

மாமிசம் சாப்பிடக் கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.


செய்யக் கூடியவை 


தர்ப்பணத்தை கிழக்கு முகமாக பார்த்தப்படி கொடுக்க வேண்டும்.

பித்ருக்களின் பூஜையை முதலில் முடித்தபிறகு ,சிறிது நேரம் கழித்து நாம் செய்யும் நித்திய பூஜையை செய்யலாம்.

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வம் மகா விஷ்ணு.



பித்ருக்கள் வழிபாடு 


அமாவாசை அன்று ,பித்ருக்கள் வழிபாட்டின் போது ,வீட்டில் முன்னே இறந்தவர்களின் படத்திற்கு துளசி மாலையோ,துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும்.இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்க்கள்.அதன்மூலம்,நமது துயர் நீங்கி,வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

நன்றி வணக்கம் 

ஈஸ்வரி 






















அமாவாசையில் தர்ப்பணம்

 அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

அமாவாசையில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வார்கள் என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.

நம்முடன்  வாழ்ந்து ,நம் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்ட,  இறந்து போன முன்னோர்களை நாம் நினைப்பது மிகவும் முக்கியம். நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடும்,தர்ப்பணமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து ,நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவர்.

பித்ருக்கள் பற்றி நான் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமாவாசையில் தர்ப்பணம்  

அமாவாசையை தமிழக தெற்கு பகுதியில் நல்ல நாளாக கருதுவது இல்லை .காரணம் அமாவாசை நாளன்று ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாக கருதப்படுவதால் .ஆனால் வடக்கு பகுதியில் அன்றுதான் ஒரு புதிய பொருள் வாங்குதல்,நிலம் வாங்குதல் போன்றவற்றை செய்கிறார்கள்.

அமாவாசை தினத்தில் சூரியனும்,சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது .அதாவது ஒன்றையொன்று சந்தித்து கொள்கிறது.இந்நாளில் பித்ருக்களுக்கு பசியும்,தாகமும் அதிகமாக ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பித்ருக்கள்

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களை குறிக்கும்.தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள்.

நம்முடைய இந்த உடல்,உயிர்,பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.இதை அனுபவிக்கும்  போது நமது பித்ருக்கள் செய்த பாவம்,பபுண்ணிய பலனை  சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.

பித்ருக்கள் நமக்கு எப்போதும் நன்மையே செய்பவர்கள்.

பிதுர் கடன்

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது  அவர்களை பேணி காத்து பசியினை போக்க வேண்டும்.அதேபோல் மறைந்த பின்பும் அவர்களின் பசியை போக்க வேண்டும்.இதுவே பிதுர் கடன்  எனப்படும்.

பித்ரு லோகம் 

சூரியனுக்கு அப்பால்,பல லட்சம் மைல்  தொலைவில் பித்ரு லோகம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.அங்கிருந்து இறந்து போன நம் முன்னோர்கள் தங்கள் குடும்பங்கள் நலமாகவும்,வளமாகவும்  வாழ அருளாசி வழங்க அமாவாசை அன்று  பூமிக்கு வருகிறார்கள். தங்கள் தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.அவர்களது வாரிசுகளான நாம்,துவங்கும் காரியங்களை கரிசனத்துடன் பார்க்கிறார்கள்.ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.


நமது பித்ருதான் கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள்.நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே,பித்ருக்களை  சிரத்தையோடு வழிபாடு செய்து அவர்களின் பசியினை போக்க வேண்டும்.அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியால் வாடுவர்.வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வர்.

வருத்தத்துடன் போகும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபம் அளிப்பர் .இந்த சாபம் தெய்வ அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.மேலும் அவர்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிபடுத்த வேண்டும்.

நமது வீடு தேடி வரும் பித்ருக்களுக்கு எள்ளு கலந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். பித்ருக்கள் காக்கை வடிவத்தில் வந்து நாம் கொடுக்கும் உணவை சாப்பிடுவதாகச்  சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 


உங்கள் அன்பு தோழி
 ஈஸ்வரி 
























சனி, 4 ஜூன், 2016

நன்மை தரும் இராகு கால பூஜை

நன்மை தரும் இராகு கால பூஜை


சர்ப்ப கிரகங்களான ராகு ,கேது துர்க்கா தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.


ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 1.30மணி நேரம் ராகுவும்,1.30மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர்.ராகுவுக்கு அதி தேவதை துர்க்கை .


ராகுவை வழிபட ஏற்ற காலம் ராகு காலம் எனவும் ,கேதுவை வழிபடுவதற்கு ஏற்ற நேரம் எம கண்டம் என்றும்  அழைக்கப்படுகிறது.இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலே ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது தவிர்க்க வேண்டும்.அதே சமயத்தில் ராகு காலத்தில்  அம்மனை ஆராதித்தல்  குறிப்பிடத்தக்கது.சண்டிகையாக துர்க்கா தேவியை வணங்குவது சிறந்த பலன் தரும் என்று தேவி பாகவதம் உள்ளது.

இராகு  கால அட்டவணை

ஞாயிறு ----மாலை 4.30 ---6 மணி 


திங்கள் ----காலை 7.30----9மணி 

செவ்வாய் ---மதியம் 3---4.30மணி 

புதன்   ----நண்பகல் 12--1.30மணி 

வியாழன் ---மதியம் 1.30 --3மணி 

வெள்ளி----காலை 10.30---12மணி  

சனி ----காலை 9---10.30மணி 

 எல்லா நாட்களும் இராகு  காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது என்றாலும் செவ்வாய் ,வெள்ளி ,ஞாயிறு போன்ற கிழமைகளில் இராகு  கால நேரத்தில் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

ராகு கால நேரத்தில் முதல் அரை மணிநேரம் மிகவும் மோசமானது.அடுத்துள்ள அரை மணிநேரம் பரவாயில்லை. கடைசி வரும் அரை மணிநேரமானது பூஜை செய்ய முக்கியமான நேரமாகும்.


செவ்வாய் கிழமை இராகு கால பூஜை செய்வது விசேஷமானது.இந்த பூஜையால் திருமணத் தடை ,முன்னேற்றத் தடை,கடன் பிரச்சனைகள்,சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை ,வீடு,மனை தொடர்பான பிரச்சனைகள்,விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.செவ்வாய் கிழமை மதியம் 3மணி  முதல் 4.30 வரை.மங்கள வார பூஜை செய்வாய் கிழமையில் செய்தல் வேண்டும்.அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி  வழிபட வேண்டும்.


வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் செய்யும் பூஜை குடும்ப பலன் சீராகும்.தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும்.பொன் ,பொருள் சேரும்.மக்கட் பேறு கிட்டும்.வெள்ளி கிழமை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12மணி வரை.

வெள்ளிகிழமை சுமங்கலி பூஜை செய்வது சிறப்பு.இந்நாளில் துர்க்கை அம்மனுக்கு பூ,மஞ்சள்,குங்குமம் ,வெற்றிலை பாக்கு ,மாங்கல்ய கயிறு இவைகளை வைத்து பூஜித்து சுமங்கலிக்கு வழங்க வேண்டும்.மாதம் 1முறையாவது இதை செய்வது நலம்.


ஞாயிற்றுக் கிழமை இராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால் தீராத நோய்களின் தாக்கம் குறையும்.எதிரிகள் பயம் நீங்கும்.பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.வெளி நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.ஞாயிற்று கிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6மணி வரை.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை 

இராகு கால துர்க்கை பூஜையை தொடர்ந்து 9 வாரங்கள் செய்வது அவசியம்.இராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி , அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.விளக்கினை ஜோடியாகதான் வைக்க வேண்டும்.விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள் ,வலம் வந்து  நமஸ்கரிக்க வேண்டும்.

எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது "ஐம்"என்ற சரஸ்வதி மந்திரத்தையும் ,திறக்கும் போது  
"க்ரீம்" என்ற லட்சுமி மந்திரத்தையும்,எண்ணெய் ஊற்றும் போது "க்லீம் " என்ற காளி மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும் .முப்பெரும் தேவியரை வணங்குவதை குறிக்கும்.

கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிச்சை இடுதல் கூடாது.ஆலயத்திற்குள் நுழையும் போதே பிச்சையிடுதல் நல்லது.


















புதன், 1 ஜூன், 2016

18 படிகளுக்குரிய தெய்வங்கள்

என்  அன்பு ஆன்மீக நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள் .

கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு ,விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் வருஷம் தோறும் செல்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த விசயமே!

போனபதிவில் 18 படிகளில் ஏறும் போது  எதைவிட வேண்டும் என்பதைப் பார்த்தோம் .இந்த பதிவில் அந்த 18 படிகளுக்குரிய தெய்வங்கள் என்ன? என்பதை அறிய இருக்கிறோம் .


ஒவ்வொரு படியிலும் வாசம் செய்யும் தேவதாக்கள் 

முதல் படி ---சூரிய பகவான் 

2ம் படி       ---சிவன் 

3ம் படி      ----சந்திர பகவான் 

4ம் படி       ----பராசக்தி 

5ம் படி      ----அங்காரக பகவான் 

6ம் படி      -----முருகன் 

7ம் படி      ----புத பகவான் 

8ம் படி      ----விஷ்ணு 

9ம் படி      ----குரு பகவான் 

10ம் படி    ----பிரம்மா 

11ம் படி    ----சுக்கிர பகவான் 

12ம் படி    ----லக்ஷ்மி 

13ம் படி    ----சனி பகவான் 

14ம் படி    ----எம தர்ம ராஜன் 

15ம் படி    ---இராகு பகவான் 

16ம் படி    ---சரஸ்வதி 

17ம் படி    ---கேது பகவான் 

18ம் படி     ---விநாயக பெருமான் 



ஒற்றை படை வரிசையில் நவகிரக தெய்வங்களும்,இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் வாசம் செய்வதாக ஐதீகம் .

18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து ,வைக்கும் பொழுது ,பிறப்பு ,இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து ,முக்தி அடையாமல் தடுத்து ,வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்ம வினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது.

பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்களும் 18 படிகளைக் குறிக்கும்.


பூஜை செய்யும் தினத்தில் ஐயப்ப  பக்தர்கள் 18 படிகளையும் பூவாலும்,விளக்காலும் அலங்காரம் செய்து அந்தந்த தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள் .ஐயப்ப  பக்தர்கள் சபரிமலை படி பூஜையில் அய்யன் திருப்புகழை பாடியும்  ,கரவோசை எழுப்பியும் வணங்குகிறார்கள் . 



மீண்டும் சந்திப்போம்                                    அன்பு தோழி 
                                                                          ஈஸ்வரி