சனி, 4 ஜூன், 2016

நன்மை தரும் இராகு கால பூஜை

நன்மை தரும் இராகு கால பூஜை


சர்ப்ப கிரகங்களான ராகு ,கேது துர்க்கா தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.


ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 1.30மணி நேரம் ராகுவும்,1.30மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர்.ராகுவுக்கு அதி தேவதை துர்க்கை .


ராகுவை வழிபட ஏற்ற காலம் ராகு காலம் எனவும் ,கேதுவை வழிபடுவதற்கு ஏற்ற நேரம் எம கண்டம் என்றும்  அழைக்கப்படுகிறது.இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலே ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது தவிர்க்க வேண்டும்.அதே சமயத்தில் ராகு காலத்தில்  அம்மனை ஆராதித்தல்  குறிப்பிடத்தக்கது.சண்டிகையாக துர்க்கா தேவியை வணங்குவது சிறந்த பலன் தரும் என்று தேவி பாகவதம் உள்ளது.

இராகு  கால அட்டவணை

ஞாயிறு ----மாலை 4.30 ---6 மணி 


திங்கள் ----காலை 7.30----9மணி 

செவ்வாய் ---மதியம் 3---4.30மணி 

புதன்   ----நண்பகல் 12--1.30மணி 

வியாழன் ---மதியம் 1.30 --3மணி 

வெள்ளி----காலை 10.30---12மணி  

சனி ----காலை 9---10.30மணி 

 எல்லா நாட்களும் இராகு  காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது என்றாலும் செவ்வாய் ,வெள்ளி ,ஞாயிறு போன்ற கிழமைகளில் இராகு  கால நேரத்தில் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

ராகு கால நேரத்தில் முதல் அரை மணிநேரம் மிகவும் மோசமானது.அடுத்துள்ள அரை மணிநேரம் பரவாயில்லை. கடைசி வரும் அரை மணிநேரமானது பூஜை செய்ய முக்கியமான நேரமாகும்.


செவ்வாய் கிழமை இராகு கால பூஜை செய்வது விசேஷமானது.இந்த பூஜையால் திருமணத் தடை ,முன்னேற்றத் தடை,கடன் பிரச்சனைகள்,சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை ,வீடு,மனை தொடர்பான பிரச்சனைகள்,விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.செவ்வாய் கிழமை மதியம் 3மணி  முதல் 4.30 வரை.மங்கள வார பூஜை செய்வாய் கிழமையில் செய்தல் வேண்டும்.அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி  வழிபட வேண்டும்.


வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் செய்யும் பூஜை குடும்ப பலன் சீராகும்.தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும்.பொன் ,பொருள் சேரும்.மக்கட் பேறு கிட்டும்.வெள்ளி கிழமை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12மணி வரை.

வெள்ளிகிழமை சுமங்கலி பூஜை செய்வது சிறப்பு.இந்நாளில் துர்க்கை அம்மனுக்கு பூ,மஞ்சள்,குங்குமம் ,வெற்றிலை பாக்கு ,மாங்கல்ய கயிறு இவைகளை வைத்து பூஜித்து சுமங்கலிக்கு வழங்க வேண்டும்.மாதம் 1முறையாவது இதை செய்வது நலம்.


ஞாயிற்றுக் கிழமை இராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால் தீராத நோய்களின் தாக்கம் குறையும்.எதிரிகள் பயம் நீங்கும்.பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.வெளி நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.ஞாயிற்று கிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6மணி வரை.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை 

இராகு கால துர்க்கை பூஜையை தொடர்ந்து 9 வாரங்கள் செய்வது அவசியம்.இராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி , அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.விளக்கினை ஜோடியாகதான் வைக்க வேண்டும்.விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள் ,வலம் வந்து  நமஸ்கரிக்க வேண்டும்.

எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது "ஐம்"என்ற சரஸ்வதி மந்திரத்தையும் ,திறக்கும் போது  
"க்ரீம்" என்ற லட்சுமி மந்திரத்தையும்,எண்ணெய் ஊற்றும் போது "க்லீம் " என்ற காளி மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும் .முப்பெரும் தேவியரை வணங்குவதை குறிக்கும்.

கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிச்சை இடுதல் கூடாது.ஆலயத்திற்குள் நுழையும் போதே பிச்சையிடுதல் நல்லது.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக