வியாழன், 28 ஏப்ரல், 2016

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 


என்  ஆன்மீக தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.

அம்பிகையானவள்  பார்வதி,காமாட்ஷி ,மூகாம்பிகை ,காளிகாம்பாள் போன்ற பல உருவங்களில் இருந்து நமக்கு அருள்பாவிக்கிறாள்.அவள் எடுத்த வடிவங்களில் ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா  அவதாரமும் ஒன்று.அந்த வடிவத்திற்குரிய சுலோகம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.1000 மந்திரங்கள் கொண்ட தொகுப்பே லலிதா சஹஸ்ரநாமம் .இந்த 1000 மந்திரங்களும் லலிதாம்பிகைக்கு பிரியமானவை.



அம்பிகையின் புகழை சொல்லிக்கிட்டே போகலாம்.அம்பாளின் துதிகள் நிறைய உள்ளது.அந்த துதிகளில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர் .உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.


நிறைய பேர்களுக்கு ஹயக்ரீவர் யார்? என்பது தெரியாமல் இருக்கும்.இவரைப் பற்றி நான் முன்பே  என் பதிவில் எழுதியிருக்கேன்.இருந்தாலும் அவரைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன்


ஹயக்ரீவர் 

ஒரு சமயம் பிரம்ம தேவரிடம் ,அசுரன் ஒருவன் வேதங்களை கவர்ந்து  கொண்டு போன போது ,மகா விஷ்ணு ஹயக்ரீவராக குதிரை முகம் கொண்டவராக வந்து, அசுரனை கொன்று ,வேதங்களை பிரம்ம தேவர்க்கு மீட்டு கொடுத்தார்.






ஞானத்தின் வடிவான ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசிக்க ,உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையை சொல்லி அளவிட முடியாது .



அகஸ்தியர் 

சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது  இந்திரன்,பிரம்மன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடியதால் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது .

அப்போது சிவன் அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்ப ,பூமி சமநிலை அடைந்தது.அந்த பக்கம் இருந்த அத்தனை பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் எனபது தானே அர்த்தம்!



பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்கு அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள்.அவளுடைய வெற்றிவிழாயின்  போது தன்னுடைய கணவர் காமேஸ்வருடன் வீற்றிருக்கிறாள்.அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது 'வசினி "என்னும் தேவதையின் தலைமையில் வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாக பாடுகின்றனர்.அவ்வாறு பாடப்பட்டது லலிதா சஹஸ்ரநாமம்.


அம்பிகையின் பேரருளுக்கு  பாத்திரமாக யாரெல்லாம்  விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை படிப்பது மூலம் மிக எளிதாக பெறலாம்.சக்தியின் ஆலயங்களில் இதை சொல்வது சிறந்த பலன் தரும்.


எந்த அம்பிகை கோவில்களிலும் இதை சொல்லலாம்.ஸ்ரீ சக்ரம் அல்லது அம்பிகை உருவப் படம்,ஸ்ரீ சக்ர மஹா மேரு ஆகியவற்றின் முன்னிலையில்  லலிதா சஹஸ்ரநாமம் சொல்லலாம்.


செவ்வாய்,வெள்ளி ,நவமி ,சதுர்த்தசி,பெளர்ணமி போன்ற நாட்களில் கூறுவது சிறப்பானது.

இந்த சஹஸ்ரநாமத்தை  ஸ்ரீ விநாயகரை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.





சங்கல்பம் என்பது நமது வேண்டுதலை நிறைவேற்றி தருமாறு அம்மனை வேண்டுதல் .

அர்ச்சனை செய்வதாக இருந்தால் ,அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் சிறு கிண்ணம் வைத்து


அதில் கட்டை விரல்,மோதிர விரலால் குங்குமம் எடுத்து நம:என்று முடியும் போது  அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இறுதியாக,பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன்,நாம் செய்த பூஜையில் பிழை  இருந்தால் மன்னித்தருளும்படி ,வேண்டி முடிக்க வேண்டும்.

அம்மனுக்கு இனிப்பு என்றால் பிரியம்.ஆதலால் சர்க்கரை பொங்கல்,பாயாசம்,சர்க்கரை கலந்த பால் நிவேதனம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  இதை பாராயணம்  செய்து வந்தால்  நம்முடைய  முன்னேற்றம் நமக்கே தெரியும். 


அம்பிகையை பக்தியுடன் மனதார வழிபட்டால், நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் நிலைத்து நிற்கும். 


  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்ட  பேரளம்  அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறை  சென்று தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.

அங்கே எல்லாம் உங்களால் செல்ல இயலாது என நீங்கள் எண்ணினால் ,இந்த  லலிதாம்பிகை அம்பாள் படத்தை பார்த்து பிராத்தனை செய்யுங்கள்.நம் அன்பு குரலுக்கு ஓடோடி வருபவள் நம் அன்னை.

என்னை எழுத வைக்கும் என் அன்பு தாயான ஸ்ரீ லலிதாம்பிகையை வேண்டிக் கொண்டு ,இந்த பதிவை முடிக்கிறேன் .

அடுத்த பதிவில் சந்திப்போம்.


உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி





செவ்வாய், 26 ஏப்ரல், 2016

துளசி பூஜை

ஹாய் பிரண்ட்ஸ் ,எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் .

போன பதிவில் துளசியின் மகிமை என்ற தலைப்பில் நான் உங்களுடன் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன் .இன்னிக்கு துளசியை எப்படி பூஜை செய்வது ?என்பதைப்  பற்றி சொன்னால், துளசி செடி வைத்து இருப்பவர்களுக்கு பூஜை  செய்ய வசதியாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இதை எழுதுகிறேன்.என்  அன்பு தோழி  உமா விருப்பத்திற்கு இணங்க ,இங்கு சில மந்திரங்களை உங்கள் முன் வைக்கிறேன் .நானும் இந்த பூஜையை செய்வதால்தான் , அதன் பலனறிந்து சொல்கிறேன் .

துளசி தன்னிகர் இல்லாத பெண்.ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன் ,பாம்பை மெத்தையாக  கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள்.

எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு.ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது .ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான் .லக்ஷ்மியை சொல்லவே வேண்டாம் .கருணையின் பிறப்பிடமே நம் தாய்.

மற்றொன்று நம் வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மனம் பரப்பும் துளசி மீது .

துளசி,சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும்  பாக்கியம் கிடைக்கும்.

முதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும் ,பூஜை தடங்கல் இன்றி நடக்க ,முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும் .வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து "ஓம் விக்னேஸ்வரா நமஹ  "என்று 3முறை சொல்லி ,மலர் போட்டு வணங்கவும்.அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து ,அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.அடுத்து பீடத்தின் நடுவில் துளசி செடி வைத்து ,சுற்றிலும் 12 என்ற  எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் பொட்டு  வைக்க வேண்டும்.


துளசி செடியில் துளசி தேவியையும், ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்குச்சியையும் வைத்து அதில் ,மகா விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து  பூஜை செய்வது விசேஷம் .நெல்லிக்குச்சி இல்லை என்றால் கிருஷ்ணன் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து பூஜை செய்யலாம்.
 பொட்டு  ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து 

1]கேசவா 

2]நாராயணா 

3]மாதவா 

4]கோவிந்தா 

5]விஷ்ணு 

6]மதுசூதனா 

7]த்ரிவிக்ரமா 

8]வாமனா 

9]ஸ்ரீதரா 

10]ஸ்ருஷிகேசா 

11]பத்மநாபா 

12]தாமோதரா  என்று சொல்லி மனதார வணங்கி ,அத்துடன் ஸ்வாகதம் என்று 3 முறை கூறவும்.

நமக்கு என்ன வரம்  வேண்டும் என்பதை  சங்கல்பமாக கடவுளிடம்  முறையிட வேண்டும்.கணவன் ,மனைவி இருவரும் சேர்ந்து துளசி பீடத்தின் முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 16 நாமாவளிகளை கூறி ,குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.


1]ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம 
2]ஓம் விஸ்வ  பூஜிதாயை நம 

3]ஓம் விஷ்ணுப்ரியாயை நம 
4]ஓம் தேவ மூலிகாயை நம 
5]ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம 
6]ஓம் செளபாக்ய நிலாயை நம 
7]ஓம் புஷ்பசாராயை நம 
8]ஓம் நந்தவன நாயகாயை நம 
9]ஓம் விஸ்வ பாவணாயை 
10]ஓம் யாக பூஜிதாயை நம 
11]ஓம் விஷ்ணு கேசின்யை நம 
12]ஓம் தான ப்ரதாயின்யை  நம 
13]ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம 
14]ஓம் சகல மாட கலாலங்கார்யை நம 
15]ஓம் ஸ்ரீராம ப்ரியாயை நம
16]ஓம் ஸ்ரீ துளசீ  தேவ்யை நம  


துளசி பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி ,ஒற்றுமை,குடும்ப அமைதி ,லக்ஷ்மி கடாட்ஷம் ,வம்சம் தலைக்கும்.உடல் வலிமை ,மனோ தைரியம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும். துளசி இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளோ ,துர்மரணங்கள் கிட்ட நெருங்காது.


துளசிக்கு வைக்கும் நெய்வேதியத்தை தாம்பூலத்துடம் கொடுக்கும் போது  துளசியுடன் கொடுத்தால் பூஜையின் பலன் அதிகமாகும் .

பிருந்தையான துளசி மகா விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி .


கார்த்திகை மாதம் துளசி பூஜையுடன் பகவானை துளசியால் அர்ச்சனை  செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும்.அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது .விஷ்ணுவே துளசி பூஜை செய்வதாக ஹரி வம்சம் சொல்கிறது .

துளசி பூஜை செய்து அனைவரும் பயன் பெறுங்கள்.எல்லா நலமும் பெற்று, என்றென்றும் அனைவரும் சந்தோசமாக வாழ நானும் துளசி தேவியையும்,பகவானையும் வேண்டுகிறேன் .


  .இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

அடுத்த அன்மீக தேடலில்  உங்களை சந்திக்கிறேன் 

நன்றி வணக்கம்.







ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

துளசியின் மகிமை

துளசியின் மகிமை 

துளசி செடியை பெரும்பாலான வீடுகளில் வளர்த்து ,தினம்தோறும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள் .வெள்ளிக்  கிழமைகளில் துளசிக்கு பூஜையும் செய்வார்கள்.துளசி செடியை வைத்து ,பூஜை செய்தால் நல்ல பலனை  தரும்.துளசியின் பெருமை தெரிந்தவர்கள் அதை வணங்காமல்  இருக்க மாட்டார்கள்.



எந்த வீட்டில் துளசி இருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன் அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள். துளசி இருக்கும் வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.துளசி மாடம் வைத்து துளசியை  பூசிப்பவர்கள் வீட்டில் திருமாலும்,லக்ஷ்மியும் நிரந்தரமாக வாசம் செய்வார்கள்.அங்கு செல்வ செழிக்கும்,மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.மனம்,வாக்கு,உடல்  ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.



கோவிலில் பெருமாளை மன நலத்திற்காக வேண்டுவர்.உடல் நலத்திற்காக  துளசி தீர்த்தமும், துளசியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.



சூரியனை கண்டதும் இருள் மறைவது போல் துளசி காற்றுப்பட்டாலே பாவங்களும்  விலகி விடும்.துளசி இலையை   தெய்வ பிரசாதமாக உட்கொண்டால் சகல பாவங்களும் தொலையும்.



சிவபெருமான் அபிஷேகப்பிரியர்.பெருமாள் அலங்காரப்பிரியர்.திருமாலுக்கு உகந்தது துளசி.திருமாலின் மார்பில் மாலையாக மகிழ்ந்து காட்சி தருபவள் துளசி தேவி."துளசி தீர்த்ததால் எனக்கு அபிஷேகம் செய்தால்,பல ஆயிரம் அமிர்த குடங்களால் அபிஷேகம் செய்ததாக  ஆனந்தமடைவேன்"என்று மகா விஷ்ணுவே கூறியுள்ளார்.



துளசி செடி  நுனியில் பிரம்மா ,அடியில் சிவபெருமான் ,மத்தியில் திருமால் வாசம் செய்வதாக ஐதீகம்.துளசி இலை பட்ட தண்ணீர் கங்கை நீருக்கு சமம் ஆகும்.திருமணமாகாத பெண்கள்  வழிப்பட்டால் திருமணம்  நடைபெறும்.



துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ ,அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து ,முடிவில் மோட்சத்தை அடைக்கிறார்கள்.



துளசி பூஜை செய்து அருந்ததி தேவி வசிஷ்டரை மணந்தார் .ருக்மணி கிருஷ்ணனை மணவாளானாக அடையும் பேறு பெற்றாள்.கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும்,அவர் செய்த துளசி பூஜை மகிமை தான். சாவித்திரி  துளசி  பூஜை செய்து தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.


விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஸ்வரன் என்ற பட்டம் பெற்றதும் துளசி பூஜை செய்ததால்  தான்.


தாவர இனங்களில் துளசி மருத்துவ குணம் நிறைந்தது.தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும்.ஆனால் துளசி செடி மற்ற தாவரத்தை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.அதனால் தான் துளசியை ஒவ்வொரு வீடுகளிலும் வளர்த்து ,அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு துளசியை  வணங்க வேண்டும்.பிரம்ம மூர்த்தமான காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.இந்த நேரத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம்.அதை சுவாசிப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக வாழலாம்.


துளசி செடியுடன் , திருமாலையும்  சேர்த்து பூஜை செய்வது 
சிறந்த பலனை கொடுக்கும்.





நன்றி வணக்கம் 


















செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சித்ரா பெளர்ணமி

சித்ரா பெளர்ணமி  

அன்பார்ந்த தோழிகளுக்கு ,என் இனிய  வணக்கங்கள் .நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தும் ,தெரியாமலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம்.நம்மில் நிறைய பேர் பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.நம் வாழ்வின் முடிவில் ,பாவ புண்ணியங்கள் கணக்கிடப்படும்.சித்ரா  பெளர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்கி ,நம் பாவத்தை போக்கி நல்ல ஆத்மாவாக வாழ்வோம் .

ஒவ்வொரு மாதங்களில் வரும்  பெளர்ணமி விசேஷமானது .அதுவும் சொல்லவா வேண்டும்?சித்திரை மாதத்தில்  வரும் பெளர்ணமியைப்  பற்றி .மிகவும் சிறப்புமிக்க நாள் இந்த நாள்.



சித்திரை மாதம் ,சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் "சித்ரா பெளர்ணமி "கொண்டாடப்படுகிறது .இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள் .அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான் ,பார்வதியிடம் "நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் "என்று கூறிக் கொண்டே தன்  கைகளால் எடுத்து,தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார்.இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி,மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு 'சித்திர குப்தன்' என்று பெயர் வைத்தாள் .





சித்ர குப்தனை திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ர குப்தரை வழிபடுகின்றனர்.




சித்திர குப்தனுக்கு பதவி

ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை  அதிகமாகிக் கொண்டே போனது .தன்  மனக்கவலையை சிவனிடம் சொன்னார்.இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும்,தண்டனைகளையும் தர வேண்டும் என்று நீங்களும்,விஷ்ணு பகவானும் எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?.ஆனால் யார் எவ்வளவு பாவ ,புண்ணியங்கள் செய்தார்கள்  என்று தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா .


உன் கேள்விகளை, "அனைத்து உயிர்களை படைக்கும் பிரம்மாவிடம் போய்  கேள் ,இதற்கு தீர்வு சொல்வார் "என்று சிவபெருமான் கூறினார் .பிரம்மாவிடம் சென்று தன்  கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா .


பிரம்மா யமதர்மரிடம்,சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர  குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன்.அவன் உனக்கு உறுதுணையாக இருந்து ,யார் எந்த அளவுக்கு பாவ -புண்ணியம் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான் .அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மதேவர்.


பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும் ,மறு கையில் எழுதுகோலும் தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.



அன்றியிலிருந்து இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார்.ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும்.சித்திர குப்தன் நம்மை இந்த ஆத்மா" புண்ணிய ஆத்மா " என்று அவனது ஏட்டில் எழுதி விட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவி எடுத்தாலும் துன்பம் நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.



சித்ரா பெளர்ணமியுடன் சம்பந்தப்பட்ட ஒரு கதை இருக்கிறது .பிருஹஸ்பதி முனிவர் இந்திரனின் குருவாவார்.இந்திரனோ தேவர்களுக்கெல்லாம் தலைவர் .ஒருமுறை இந்திரன் பிருஹஸ்பதியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை .ஆகவே அவனுக்கு சில படிப்பினையை சொல்லித்தருவதை பிறுஹஸ்பதி நிறுத்தினார்.குரு இல்லாத போது இந்திரன் பல தீய செயல்களில் ஈடுபட்டான்.குரு மீண்டும் தன கடமையை செய்ய ஆரம்பித்தவுடன்,தான் என்ன செய்ய வேண்டும் என்றும் ,தன் தவறுகளைக் கண்டு வருந்துவதாகவும் கூறினான்.முனிவர் அவனை ஒரு புண்ணிய பிரயாணம் மேற்கொள்ள சொன்னார்.மதுரைக்கு அருகில் வந்ததும் தன் தோளில் அதுவரை சுமந்து வந்த பாவ மூட்டைகள் கீழே இறங்குவதைக்  கண்டான்.இறங்கிய நிலையில் அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான்.இந்த ஆச்சரியத்தைப் பார்த்து அதே இடத்தில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு கோவில் எழுப்பத் தீர்மானித்தான் .



அந்த கோவில் உடனடியாக எழுப்பப்பட்டது .அந்த சிவலிங்கத்தை பூஜிக்க நினைத்தபொழுது சிவபெருமான் அருகில் இருந்த குளத்தில் தாமரை மலர்களைப் பூக்க செய்து இந்திரனுக்கு அருள் புரிந்தார்.இப்படி அவர் பூஜித்த நாள் தான் சித்ரா பெளர்ணமி  ஆகும்.எனவே இந்நாளில் சிவலிங்கத்திற்கு வில்வ இலை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும் .


சித்ரா பெளர்ணமி  அன்று காலை பூஜை அறையில்  விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியுமான நோட்டு ,பேனாவை வைத்து ஒரு தாளில் "சித்திர குப்தன் படியளப்பு "என்று எழுதி ,சித்திர் குப்தனை நினைத்து வணங்க வேண்டும் .சர்க்கரை பொங்கல்,ஏலம் ,கிராம்பு,பச்சை கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் ,பானகம் போன்றவற்றை  நைவேத்தியம் செய்யலாம் .பசுவின் பால் ,
மோர் சாப்பிடக்கூடாது.அன்ன தானம் ,விசிறி ,குடை,செருப்பு போன்ற தான தருமங்களை செய்தால் நம் கணக்கில் புண்ணியங்களை அதிகப்படுத்தும் .




இந்நாளில் கிரிவலம வருதல் பன்மடங்கு பலனைத் தரும்.கடலில் நீராடுதல் மிகவும் சிறந்தது .அம்பிகையின்  வழிபாடு சிறந்தது .



சித்திர குப்தனை நினைத்து இந்த சிறு வரிகளை சொல்வது நன்று.


சுவாமி! "அடியேன் செய்த பிழைகள் மலையளவாக இருந்தாலும் கடுகளவாக  மாற்றிவிடு.நான் செய்த புண்ணியம் கடுகளவாக இருந்தாலும்  மலையளவாக மாற்றி விடு .உன் மனைவியுடன் பிறந்தவள் நான் .ஆதலால் பாவங்களை நீக்கி, புண்ணியத்தை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்  "என்று மனதார வேண்ட வேண்டும்.

நம்மால் முடிந்த பூஜைகளை செய்து , சிறு ஸ்லோகத்தை சொல்லி ,சித்திர குப்தரை வழிபடுவோம்.


நன்றி வணக்கம் .







ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெரியாச்சி அம்மன்

பெரியாச்சி அம்மன்
 அன்பு தோழிகளுக்கு என் வணக்கங்கள்.என்  பதிவை உலக மக்கள் பார்க்கிறார்கள் என்பதை அறியும் போது  மிகவும் சந்தோசமாக இருக்கிறது .நான் அறிந்த ,தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .



நாம் எல்லோரும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றீருப்போம்.அங்கு பேச்சியம்மன் அல்லது பெரியாச்சி அம்மன் வீற்றிருப்பாள் .மாரியம்மனுக்கு துணையாக இருப்பவள் பேச்சியம்மன் .பெரியாச்சியும் ,பேச்சியம்மனும் ஒருவரே .பார்ப்பதற்கு பயங்கரமானவளாக காட்சி தந்தாலும் உண்மையில் கருணையே கொண்டவள் .தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு உதவி செய்வாள் .


மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேறிய பலருக்கு பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக விளங்குகிறாள்.நம் குலத்தை  காக்கும் தெய்வம் குலதெய்வம் .



முன்னொரு காலத்தில் வல்லப ராஜா என்ற கொடுங்கோல் அரசன் வாழ்ந்து வந்தான்.அவன் மக்களை எல்லாம் கொடுமைப்படுத்தி வந்தான்.அவன் மனைவி கர்ப்பவதி ஆனாள்.அரசனை போல் அவன் குழந்தையும் நம்மை கொடுமைப்படுத்தும் என மக்கள் பயந்தனர்.


ராணிக்கு பிரசவவலி எடுக்க ,தக்க மருத்துவம் செய்ய வேண்டி ,அரசன் மருத்துவச்சியை அழைத்து வர வேண்டினான்.ஆனால் எல்லோரும் பயத்தின் காரணமாக வர மறுத்தனர்.கோபம் கொண்ட அரசன் தானே மருத்துவச்சியை அழைத்து வர சென்றான் .

ஒரு முறை முனிவர் மூலம் அரசன் ஒரு சாபம் பெற்றான்.அவனுக்கு பிறக்க இருக்கும் குழந்தை உடனே பூமியை தொட்டு விட்டால் அரசன் அழிந்து விடுவான் என்பதே.அரசன் தானும் அழியக்கூடாது ,தன் குழந்தையும் நல்ல படியாக இந்த உலகத்திற்கு வரவேண்டும் என்று விரும்பினான்.


அவன் மருத்துவச்சியை தேடி போகையில் எதிரே கடுமையான முகத்தோற்றத்துடன்  ஒரு வயதான பெண்மணி வந்தாள் .தன்  பெயர் பெரியாச்சி என்றும் ,தானே அரசன் தேடும் மருத்துவச்சி என்றும் கூறினாள் .ராணிக்கு பிரசவம் பார்க்க  ஆகும் செலவை தருவதாக அரசன் கூறினான் .



ராணிக்கு பிரசவலியே  தெரியாத அளவுக்கு குழந்தை பெற  செய்தாள்.அந்த குழந்தை முதலில் பூமியில் விழக்கூடாது என்ற அரசனின் உத்தரவின்படி ,குழந்தை இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் கரங்களில்  ஏந்தி தடுத்து விடுக்கிறாள் .


பிரசவம் பார்த்த கூலியாக மன்னனிடம் பரிசு தருமாறு வேண்டினாள் .ஆனால் அரசனோ பெரியாச்சியை இகழ்ந்து ,தரக்குறைவாக பேசினான் .கோபம் கொண்ட மூதாட்டி தன்  சுய உருவம் எடுத்து ,எண்ணற்ற கரங்களுடன் ,நீண்ட நாக்கு ,பயங்கர தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள் .


மன்னனை கீழே தள்ளி ,அவனை தன்  கால்களில் மிதித்து கொண்டு ,அவன் அட்டகாசத்திற்கு துணைபோன ராணியை தன்  மடியில் போட்டு கொண்டு அவள் குடலை வெளியே தன்  கரங்களால் எடுக்கிறாள் .குடலை எடுத்து மாலையாக போட்டு கொள்கிறாள்.மன்னனையும் கொன்று விடுகிறாள்.


மகாகாளியின்  அவதாரமே பெரியாச்சி .குழந்தை வேண்டுபவர்கள் ,குழந்தை பேறு  அடைந்தவர்கள் குழந்தையை காக்கவும் ,சுகப்பிரசவம் நடக்கவும் இவளை மக்கள் பிராத்தித்து வருகிறார்கள் .


குழந்தை பிறந்தவுடன் முதல் முதலில் பெரியாச்சி அம்மன் முன் உள்ள தொட்டிலில் போட்டப்பிறகு தான் தங்கள் வீட்டிலுள்ள தொட்டிலில் போடுவர் .மற்ற சடங்குகள் எல்லாம் பிறகு செய்வர்.பெண் குழந்தைகளுக்கு காது  குத்துதல்.மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளை அவளை வேண்டிக் கொண்டு செய்கிறார்கள் .


என்றென்றும் நல்ல மனத்துடன் நாம் அன்னையை வேண்டினால் ,நம் குடும்பத்தை காப்பாள் பெரியாச்சி அம்மன் .


பெரியாச்சி அம்மனைப் பற்றி சொல்லிய திருப்தியுடன் என்  பதிவை முடிக்கிறேன்.


நன்றி வணக்கம் .

















செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம நவமி


என்  அன்பு ஆன்மீக நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள்.ஆன்மிகம் என்பது  ஒரு பெரும் கடல்.அதைப் பற்றி அறிய நான் ஒரு துடுப்பாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.நம் வாழ்க்கை எங்கு சுற்றி திரிந்தாலும் கடைசியில் ஆன்மிகம் என்னும் கடலில் போய்  சேருகிறது .


நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே கடவுளின் நாமங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.இனி ராமர் புகழ் பாட உங்களை அழைக்கின்றேன்.
சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவது ஸ்ரீ ராம நவமி .பொதுவாக நவமி அன்று எந்த விழாக்களும் கொண்டாடப்படுவது இல்லை .அஷ்டமியும் ,நவமியும்   தங்கள் நாட்களில் எந்த நல்ல காரியமும் நடைபெறுவது இல்லையே !என கவலை அடைந்தனர் . தங்கள் நாட்களிலும் மக்கள் விழாவாக  கொண்டாட வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் சென்று முறையிட்டனர்.அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க,நவமி அன்று விஷ்ணு பகவான் ராமர் அவதாரத்தையும்.அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரத்தையும் எடுத்தார். 


ராம நவமி அன்று அதிகாலை எழுந்து , குளித்து விட்டு ,வீட்டை சுத்தம் செய்து  பூஜையறையில் கோலம் போட்டு ,ராமர் படத்தை  வைத்து  சந்தனம் ,குங்குமம் பொட்டிட்டு ,துளசி மாலை அணிவிக்க வேண்டும்.பின் பழம் ,வெற்றிலை ,பாக்கு,பூ இவைகளை வைத்து ஸ்ரீ ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


நீர் மோர்,பானகம்,பாசிபருப்பு பச்சடி போன்றவற்றை நெய்வேத்தியமாக  வைத்து  பூஜை செய்ய வேண்டும்.


ஸ்ரீ ராமர் 14 வருஷம் காட்டில் இருந்து கஷ்டப்பட்டார். அவர் காட்டில் இருந்த போது நீர் மோரும் ,பானகமும் அருந்தி ,வாழ்ந்தார்.
அதன் காரணமாகவே ஸ்ரீ ராமர் பிறந்த நவமி அன்று இவற்றையெல்லாம் நெய்வேதியமாக வைத்து வணங்குகிறோம் .


ராமரை பற்றிய நூல்களை  படித்தும் ,பாராயணம் செய்வது நன்று.ஸ்ரீ ராமர்  கோவிலுக்கு சென்று ராமர் பட்டாபிஷேகத்தை  கண்டு களிக்க வேண்டும்.

அர்ச்சனை முடிந்த பிறகு ,நெய்வேதியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.



காலை உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து ஸ்ரீ ராமரை வணங்கினால் ,ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிடைக்கும் .அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.ஸ்ரீ ராமர்  நாமத்திற்கு மகிமை அதிகம் .எனவே ராமரது நாமத்தை சொல்லி செய்யப்படும் வேலைகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

நம் ஆஞ்சநேயர் எல்லா நேரமும் ராம  நாமத்தையே ஜெபித்து வருபவர்.அது மட்டுமில்லாமல் எங்கெல்லாம் ராம நாமம்  உச்சரிக்கப் படுகிறதோ அங்கு ஆஞ்சநேயர் நம் அருகில் இருந்து கேட்கிறார் என்பது திண்ணம் .




ஸ்ரீ ராம ஜெயத்தை 108 முறை ,1008 முறை எழுத தொடங்கலாம்.ராம மந்திரத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழியும்.மனதில் அமைதியும்,மகிழ்ச்சி உண்டாகும்.ராம நாமம் எல்லையற்ற ஆன்மசக்தியை  கொண்டது .

"ரா " என வாய் திறந்து உச்சரிக்கும் போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறி விடுகிறது.'ம 'என உதடுகள் மூடும் போது அந்த பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாக ஐதீகம்.


'ஸ்ரீ ராம்  ஜெய ராம்  ஜெய  ஜெய ராம் 'இந்த ராம  நாமத்தை 108 முறை சென்னாலே நம்மை தேடி ராமர் வருவார்.அருள் மழை  பொழிவார் .

ராமாயணத்தை முழுவதுமாக வாசிக்க முடியாதவர்கள் இதைப் படித்து பலன் பெறலாம் .

ஸ்ரீராம ராம ராமமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம ராமநாம வராணனே 

இந்த இரண்டு வரிகளை சொல்லுங்க போதும்.எந்த வேலைகளிலும் ஆத்மாத்தமாக செய்யும் போது அது சிறப்பாக அமையும்.அதுபோல நாம் பகவனை நினைக்கும் போது ,அவர் பெயரை உச்சரிக்கும் போது  நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற பகவான் அனுக்கிரகம் செய்வார்.

எல்லோரும் சந்தோஷமாக ,உங்களுக்கு தெரிந்த வழிகளில் இறைவனின்  திருவடிகளைப் இறுக பற்றி கொண்டு அவர் அருளை பெறுங்கள் .



நீங்களும் சந்தோஷமாக இருங்கள் ,உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .

அடுத்த பதிவில் சந்திப்போம் .

நன்றி வணக்கம் .


  











சனி, 9 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டும் ,விஷுக் கனி கானலும்

தமிழ் புத்தாண்டும் ,விஷுக் கனி கானலும்தொடர்புடைய படம்














என் அன்பு தோழிகளுக்கு   இனிய  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


உலகத்திலுள்ள தமிழர்கள் இந்த நாளை வெகு  விமரிசையாகக் கொண்டாடுவார்கள் .தமிழ் புத்தாண்டு  என்பது தமிழர்கள் ,புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவாகும்.இந்தியாவில் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது . தமிழ் வருஷப் பிறப்பு அன்று கோவில்களில்  புது வருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு .

வீடுகளில் அன்று எல்லா விதமான சுவைகளும் கொண்ட  உணவு  சேர்க்கப்படும்.நம் வாழ்க்கையும் இனிப்பு ,புளிப்பு ,கசப்பு ,காரம் ,துவர்ப்பு கலந்த கலவை என நமக்கு உணர்த்துவதுடன் ,அதை ஏற்று கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள் ஆகும்.

pachadi for tamil new year க்கான பட முடிவு

வெல்லம்,மாங்காய் ,வேப்பம்பூ ,மிளகாய் ,உப்பு எல்லாம் சேர்த்து பச்சடி செய்வர்.




சில வீடுகளில் வடை ,பாயசம் ,பல காய்கறிகள் கொண்ட சாம்பார்,பொரியல்கள்   இடம் பெறும் .




தொடர்புடைய படம்சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்தை கேரளாவில் விஷுக் கனி காணல் என்று கொண்டாடுகிறார்கள் .கேரளாவுக்கு ஒட்டியுள்ள பகுதிகளான  குமரி ,கோவை ,திருப்பூர் ,நாகர் கோவில் போன்ற இடங்களில் விஷுக்கனி காணல் கொண்டாடப்படுகிறது .























சித்திரை வருஷப்  பிறப்பிற்கு முதல் நாள் பங்குனி மாதக் கடைசி நாள் இரவு சுவாமி படங்களுக்கு பூக்கள் போட்டு அலங்கரிக்க வேண்டும்.ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து இருபுறமும் குத்து விளக்கு வைக்க வேண்டும்.ஒரு தட்டில் வெற்றிலை ,பாக்கு ,பூ, பழங்கள்  ,தேங்காய் ,அரிசி ,பருப்பு ,காய்கறிகள் ,புது துணி ,நகைகள் போன்றவற்றை வைக்க வேண்டும்.




மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து சுவாமிக்கு அருகில் உள்ள பொருட்களை பார்த்த பிறகு ,குளித்துவிட்டு குத்து விளக்கு ஏற்றுவர். பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூங்கி எழுந்தவுடன் பூஜை அறையில் வைத்துள்ள பொருட்களை கண்ணாடியில் பார்த்து அறிவர்.இதையே விஷுக்கனி காணல் என்று அழைக்கிறார்கள் .




இவ்வாறு முதல் முதலில் வருஷப் பிறப்பு அன்று பார்க்கப்படுவதற்கு காரணம் ,எல்லா நாளும் எந்த குறைகளின்றி எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே .



எல்லோரும் பார்த்த பிறகு, குளித்து விட்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் வைத்து  வணங்குவர்.அவரவர்களுக்கு தெரிந்த சுலோகங்களையும் ,பாடல்களையும் பாடுவர் .வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பர்.இதற்கு கை நீட்டம் என்று பெயர் .இன்றும் கேரள மக்கள் இதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் .இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை .


சரி நண்பர்களே !நீங்களும் சந்தோசமாக வரவிருக்கும் புத்தாண்டை கொண்டாடுங்கள் .என்றென்றும் உங்கள் வீட்டில் அளவில்லாத சந்தோஷம் பொங்கட்டும் .நானும் புத்தாண்டை கொண்டாட மிகவும் ஆவலாக இருக்கிறேன் .


எல்லோரும் எல்லா வளமும் பெற இறைவனை பிராத்திக்கிறேன் .

என் பதிவை பார்க்கும் ஆன்மீக அன்பர்கள் உங்கள் கருத்தை தெரிவித்தால் அது நான் மேலும் எழுதுவதற்கு ஒரு தூண்டு கோளாக இருக்கும் .

இன்னும் பல அன்மீகத் தகவல்களுடன் உங்கள் தோழி ,

ஈஸ்வரி .


















செவ்வாய், 5 ஏப்ரல், 2016

ஒன்பது வகையான பக்தி

உலக ஆன்மீக நண்பர்களுக்கு என் அன்பு வணக்கங்கள் .


எனக்கு தெரிந்த விஷயங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்  பதிவை படிக்கும் ஆன்மீக தோழிகளுக்கு ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ,ஒரு பாலமாக இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என்றே நான் சொல்வேன் .


இன்னிக்கு நாம் எல்லோரும் ஒவ்வொரு விதமாக கடவுளை நமக்கு தெரிந்த  வழிகளில் வணங்குகிறோம் .பகவான் நம்முடைய ஆத்மாத்தமான பக்தியை மட்டுமே விரும்புகிறார் .உள் அன்புடன் பகவானுக்கு ஒரு பூவையோ அல்லது தண்ணீரையோ சமர்பித்தால் மட்டும் போதும் .நம் கோரிக்கைகளை பகவான் ஏற்றுக் கொள்வார் .


இப்போது 9 வகையான பக்திகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.


1) சிராவணம் ----பகவானுடைய நாமங்களையும் ,அவருடைய கல்யாணக் குணங்களை கேட்பது .



ராமாயணத்தில் ,அனுமார் ராமருடைய நாமங்களை உச்சரித்து கொண்டே இருக்கிறார் .

பகவானுடைய நாமங்களுக்கு சக்தி அதிகம் .













2) கீர்த்தனம் -----  பகவானுடைய பெருமைகளை பேசுவது .



ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி .இவர் பகவானின் பெருமைகளை பேசுவதுடன் மட்டுமில்லாமல் எழுதி இருக்கிறார் . 

















3)  ஸ்மரணம் ----எப்போதும் பகவானை நினைத்துக் கொண்டே இருப்பது .


இந்த பக்தியானது சீதா  தேவிக்கு உரியது .எப்போதும் ராமனை நினைத்து கொண்டிருப்பவர் சீதை .

4)பாத சேவனம்----கால்களில் விழுந்து வணங்குவது . .




பரதன் பாதுகையை ராமனாக நினைத்து வணங்குவது .













5)வந்தனம் ----பகவானை வணங்குவது ,அவனை  போற்றுவது 

இராவணன் தம்பி விபிஷணன் ராமனையே வணங்கி வந்தான் .


6)அர்ச்சனம் -----  பகவானுக்கு மலர்களையும் ,கனிகளையும் கொடுத்து மகிழ்வது .




ராமனுக்கு சாப்பிட  பழங்களை  கொடுத்து மகிழும் சபரி என்ற மூதாட்டி .

















7)தாஸ்யம் -------பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்ளுதல் .



இராமனுடன் இருந்து அவர் சொல்படி கேட்டு நடந்த லக்ஷ்மனின் பக்தி இது.











8)ஸக்யம் ----- பகவானிடம் நட்பு கொள்வது .


சுக்ரீவன் ராமனிடம் நட்பு கொண்டது.
















9)ஆத்ம நிவேதனம் -----  பகவானுக்காக தன உயிரையே தியாகம் செய்வது.



இராவணனிடம் இருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று, தன் உயிரை கொடுத்த ஜடாயு என்ற கழுகு .















துளசி தாசர் அவருடைய ராமாயணத்தில் ராமர்  சபரிக்கு சொன்ன  9 வகையான  பக்தி .


1.சத்சங்கம்
2.என்  கதை கேட்க ஆசை
3.குரு சேவை
4.என் குணங்களை கீர்த்தனம் செய்தல்
5.என் நாமத்தை சொல்லுதல்
6.புலனடக்கம்
7.எல்லா உயிரினங்களையும் நானாக பார்த்தல் .
8.கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல்,கனவில் கூட பிறருடைய குற்றங்களை காணாதிருத்தல் .
9.சுகம்,துக்கம் இரண்டையும் சமமாக பாவித்தல்

இந்த பக்தியில் ஏதாவது ஒன்றை எவர் பின்பற்றுகிறார்களோ அவர்கள் எனக்கு விருப்பமானவர்கள் என்று ராம பகவான் சொல்லுகிறார் . 

சரி தோழிகளே ,பக்தியைப் பற்றி சொல்லிவிட்டேன் .நீங்களும் உங்களுக்கு எது முடியுமோ அதை பின்பற்றி ,இறைவனின் அருளை பெறுங்கள்.
உங்கள் ஈஸ்வரி