திங்கள், 25 மே, 2020

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்


பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..! Pradosham Mantras in Tamil..!


தோஷம் என்பது குற்றம் என்ற வார்த்தையை குறிக்கின்றது. பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாத வாழ்க்கை என்பதை குறிக்கும். குற்றமற்ற இந்த பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் இதன் பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலத்தை தான் ‘உஷத் காலம்’ என்று கூறுவார்கள்.
இந்த சமயத்தில் அதிதேவதையான உஷாதேவி சூரியனின் மனைவியாக இருப்பாள். இதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் பிரதியுஷா மனைவியாக இருப்பாள். இந்த நேரம் பிரத்யுஷத் காலம் என்று கூறப்படுகிறது. பிரத்யுஷத் காலம் என்று கூறப்பட்ட இந்த காலம் பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் என்று மாறிவிட்டது.

இந்தப் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் இன்னல்களானது தீரும் என்பது நம்பிக்கை. நம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரதோஷ சமயத்தில் ஒருமுறை நமது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபடுவதும் நல்லது.

பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 1
ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: 2
ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 3
ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: 4
ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி.

பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 5
ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ வழிபாடு மந்திரம்: 6ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம் (Pradosham Mantras in Tamil): 7ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம் (Pradosham Mantras in Tamil): 8
ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ வழிபாடு மந்திரம்: 9
ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம்: 10
ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 11
ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி 
அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ மந்திரம்: 12
ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 13
ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம்: 14
ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 15
ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ மந்திரங்கள்: 16
ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரங்கள் (Pradosham Mantras in Tamil): 17
ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ.
பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த பிரதோஷ கால மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.

சனி, 9 மே, 2020

அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!



அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற,  தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அரிசி மாவினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை போட்டு, அதைச்சுற்றி, மஞ்சள் பொடியால் அதேபோல் வரைந்து, நடுவில் மஞ்சள் குங்குமமிட்டு, இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.



வழிபாட்டு முறை:


லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை.  பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.

வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலையை (3 இலை), கரைத்து வைத்த சந்தனத்தில் தோய்த்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம்.

அபிஷேகம் செய்ய விரும்பினால், பால், தேன், பன்னீர் பிறகு இவை எடுத்து வைத்துவிட்டு, பின் சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்து, மல்லிகை, தவனம், மரு, தாமரை இப்படி வாசனை பூக்களால்  அர்ச்சிக்கலாம்.

பூஜை முடிந்ததும்   தாம்பூலம் கொடுத்து,. பிரசாதம் விநியோகம் செய்ய வேண்டும். எதுவுமில்லை எனில், துளசி தீர்த்தமாவது நைவேத்தியம் செய்து கொடுக்கலாம். மிகச்சிறந்த பலன் உண்டு.


அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்!


மஹாலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.



தனலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


சகல உயிர்களிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன்.



தான்யலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.



வித்யா லக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு புத்திரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் உள்ள வித்யாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


வீரலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு த்ருதி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன்.


சௌபாக்ய லக்ஷ்மி:
யாதேவி ஸர்வ பூதேஷு துஷ்டிரூபேண
ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸந்தான லக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன்.


காருண்யலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.