ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

சந்திர பகவான்

ஹலோ நண்பர்களே ,


வணக்கம். என் கணினியில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து பதிவை அனுப்ப முடியவில்லை.
மீண்டும் இறைவனின் அருளோடு நான் எழுதுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏன் பதிவை
பார்த்து ஆன்மீக சிந்தனையில் திளைத்திருக்க கடவுளை வேண்டுகிறேன்.

முழுமுதற் கடவுளுக்கு வணக்கம்.எனக்கு குருவாக விளங்கும் சாய்பாபா .பெரியவா ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கிறேன் .


 சந்திர பகவான்

திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு உடையது .




திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்),  பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது,  செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது,  முத்து பதித்த மோதிரம் அணிவது, 

வெங்கடாசலபதியை தரிசிப்பது, திருப்பதி சென்று வருவது, சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது, ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது, 

நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது, வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது, வெள்ளை நிற ஆடை அணிவது, எப்போதும் வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது. அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது. 

சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும் பௌர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது.


எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் 
திங்களே போற்றி,திருவருள் தருவாய் 
சந்திரா போற்றி ,சத்குரு போற்றி 
சங்கடம் தீர்ப்பாய் சந்திரா போற்றி 

இந்த சிறிய ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.நலம் யாவும் பெறுங்கள்.


நன்றி வணக்கம் .
அன்பு தோழி ஈஸ்வரி 























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக