திங்கள், 4 ஜூலை, 2016

சுமங்கலிகள் நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக ?

அன்பார்ந்த என் இணையத்தள ஆன்மீக தோழிகளுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.



இன்னிக்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் பதிவு திருமணமான பெண்களுக்கு குங்குமம் அணிவதன் முக்கியத்துவம் என்பதுதான்.

குங்குமம் வைப்பதை ஒரு சில பெண்கள் தவிர்கிறார்கள்.ஆனால் அதன்  பயனை அறிந்தால்,அவ்வாறு செய்யமாட்டார்கள்.பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது மிகவும் அழகு.

அதுவும் சுமங்கலி பெண்கள் மங்களகரமாக மஞ்சள் பூசி,குங்குமத்தை இட்டுக்கொள்வது பார்க்கவே மகாலட்சுமி போல் இருக்கும்.அழகு என்றால் நாம் அன்னை மகாலக்ஷ்மியை தான் சொல்வோம்.ஒரு குடும்பத்தில் பெண் பிறந்தாலோ,பெண் பார்த்துவிட்டு வந்தாலோ அந்த பிறந்த குழந்தையை,பருவ பெண்ணை  மகா லக்ஷ்மி  போல் இருக்கிறாள் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம்.
அனைத்து அழகையின் வடிவமே லக்ஷ்மி 

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த பகுதி குளிர்ச்சியடைவதுடன்,உடலிலுள்ள சக்தி விரயமாவதை தடுக்கிறது.தீய சக்திகள் நம்மை அண்டாமல் காக்கிறது.

சுமங்கலிகள் நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக ?

சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் இருப்பிடம் ஆகும்.சுமங்கலியின் சக்தி குங்குமத்தில் தான் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் அல்லது நீர் மோர் ,பானகம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.பிறகு நாம்  முதலில் குங்குமம் வைத்து கொண்டு வந்திருக்கும் சுமங்கலி பெண்ணுக்கு  குங்குமம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு கொடுப்பதால் குங்குமம் கொடுப்பவருக்கும் ,அதை பெறுபவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தை பெருக்கும்.s

குங்குமத்தை சுமங்கலி பெண்கள் நெற்றியில்,தலை வகிட்டில்,மாங்கல்யத்தில் என மூன்று இடங்களில் இடவேண்டும்.மகாலக்ஷ்மி இந்த இடங்களில் குடி இருப்பதாக ஐதீகம்.

குங்குமத்தை கோவிலிலும்,வீட்டிலும் வலதுகை மோதிர விரலால் இடவேண்டும்.அர்ச்சகர் வலது கையில் குங்குமத்தை நமக்கு அளித்தால்  அதை இடது கைக்கு  மாற்றாமல் ,வலது கை மோதிரவிரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இடவேண்டும். 
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேர குறிப்பதாகும்.திருமண புடவை அரக்கு  நிறத்தில் இருப்பது நல்லது.


தெய்வீகத்தன்மை,சுப தன்மை,மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம்,உடல்,மற்றும் மனம் ஆகியவைகளுக்கு  அதிக நன்மை உண்டாகும்.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைந்தாற்போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.இரட்டை விரலால் குங்குமம் இட்டு கொள்வது மிகுந்த துணிவை தரும்.

ஆள்காட்டி விரலால் குங்குமம் இடுவது முன்னணி தன்மை,நிர்வாகம்,ஆளுமை போன்றவைகளை ஊக்குவிக்கும்.

நடு விரலால் குங்குமம் இடுவது தீர்க்க ஆயுளை கொடுக்கும்.
குங்குமம் நெற்றியில் இடுவது தெய்வீக தன்மை,உடல் குளிர்ச்சி,சுய கட்டுப்பாட்டிற்கு  நல்லது.

எல்லா நன்மைகளும் தரக்கூடிய  குங்குமத்தை சுமங்கலி பெண்கள் அணிவது மிகவும் சிறப்பானது.மங்களகரமானது.ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அருளை விரைவில் பெறலாம்.நம் வீடு லக்ஷ்மி கடாட்சமாக திகழ நாமும் ,நம் குடும்பத்தில் உள்ளவர்களும் குங்குமத்தை நெற்றியில் இட்டு பயன்பெறுவோம்.


நான் என் எண்ணத்தில் தோன்றியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.
மேலும் மேலும் பல பயனுள்ள தகவல்களை உங்களுக்கு அளிக்க என் பிரியமான ,கருணையுள்ள அன்புத்தாய் லக்ஷ்மியை வேண்டுகிறேன்.

நீங்களும் சந்தோசமாக இருங்க.உங்களை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .

ங்கள் கருத்துகளை   சொன்னால் எனக்கு மேலும்  எழுத ஊக்குவிக்கும் விதமாக இருக்கும்.



உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக