திங்கள், 4 ஜூலை, 2016

பெரியவாவின் பத்து கட்டளைகள்

அன்புள்ள ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.


சாய் பாபா எந்த அளவுக்கு எனக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு மகா பெரியவாவை  பிடிக்கும்.அவர்களின் துணையுடன் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியைத் தரும்.

நான் அவர்களின் ஆசியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

பெரியவாவின் கட்டளைகளை நாம் பின்பற்றி நடப்பது நாம் செய்யும் பாக்கியம்.

பெரியவாவின் பத்து கட்டளைகள்

காலையில் எழுந்தவுடன்  இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.

அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து புண்ணிய நதிகள்,கோமாதா,சிரஞ்சீவிகள்,சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபட வேண்டும்.

உன் பக்கத்தில் வாழ்பவர்களையும்,மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ,பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்து விட்டு பிறகு சாப்பிட வேண்டும்.

அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்ய வேண்டும்.

நெற்றியில் தவறாது திலகம் வைத்து  கொள்ள வேண்டும்.

உறங்கச் செல்லும்முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது, கெட்டதுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்து விட்டு ,பின்பு உறங்க செல்ல வேண்டும்.   

பெரியவாவுடைய கட்டளைகளை அனைவரும் பின்பற்றி மேலும் நம் வாழ்க்கையில் முன்னேற நான் பெரியவாவை பிராத்திக்கிறேன்.

நன்றி வணக்கம் 
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக