செவ்வாய், 26 ஜூலை, 2016

ஓம் என்ற மந்திரம்

ஓம் என்ற மந்திரத்தை நாம் அன்றாட வாழ்வில் சொல்லி கொண்டு வருகிறோம்.அது எதற்காக?என்பது நம்மில் சில பேர்களுக்கு  தெரியாது.புத்தகத்தில் போட்டு இருக்கிறது சொல்கிறோம் என்று சொல்பவர்களும் உண்டு.


எந்த காரியத்தை செய்யும் போதும் ஏன் செய்கிறோம்? என்று அர்த்தம் தெரிந்து சொன்னால் நல்லது.

 ஓம் என்றால் பிரணவம்.பிரணவம் என்பது பஞ்ச பூதங்களை குறிக்கிறது.உலகம் விரித்தலை குறிக்கிறது.ஓம் என்ற சொல் அகமும்,புறமும் சொல்லப்படுகிறது.அகம் என்றால் உள் உறுப்புகள், புறம் என்றால் பஞ்ச பூதங்கள் ஆகும்.




ஓம் என்ற மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன.


"ஆதி பகவானாகிய இறைவனே!ஜீவனாகிய என்னை உன்னோடு சேர்த்துக் கொள்" என்பது இதன் பொருள் ஆகும்.அதனால்தான் ,அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கும் போது ,[ஓம் முருகா,ஓம் நமச்சிவாயா,ஓம் நமோ நாராயணா என்று  சொல்லும் போது] அந்தந்த தெய்வத்திடம் என்னை உன்னோடு சேர்த்து கொள்  என்று தெரிந்தோ,தெரியாமலோ கெஞ்சிகிறோம்.காலம் வரும்போது,இந்த மந்திரம் சொல்வதால் பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஓம் என்பதில் அ --உ --ம  என்பது உள் அடங்கியுள்ளது.
அ ----பிரம்மா உ ---விஷ்ணு ம ----ஈஸ்வரன் 
ஓம் என்ற மந்திரத்திற்குள் பிரம்மா,விஷ்ணு,ருத்திரன் அடக்கம். 


ஓம் மந்திரத்தை ஜெபிக்கும் முறை 


ஓம் என்ற மந்திரத்தை கிழக்கு பார்த்து அமர்ந்து,கண்களை மூடி ஜெபிக்க வேண்டும்.வாய் விட்டு ஜெபிக்காமல் மனத்திற்குள் ஓம் ஓம்  என ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஓ ..............ம்  என நீட்டிய படி மனதால் ஜெபிக்கலாம்.

எந்த மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தாலும் ,குறைந்தது ஒரு லட்சம் முறை உருயேற்றிய பின்தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.


மாடி வீட்டிலிருந்து ஜெபித்தால் பலன் கூடும்.மலை மேல் உட்கார்ந்து ஜெபிப்பதால்  பலமடங்கு சக்தி கிடைக்கும். 


ஓம் என்று சதா காலமாகும் ஜெபிப்பவர்களுக்கு நெருக்கடியான காலத்தையும் சமாளித்து,இறுதியில் வெற்றி கிட்டுகிறது.சமாளிக்கும் பக்குவம் உண்டாக்குகிறது.
ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்காதவர்கள் வாழ்வானது நெருக்கடி நேரத்தில் சமாளிக்க முடியாத மனநிலையும் அதிலிருந்து மீளவும் முடியாமல் போகிறது.
இறைவனின் நாமங்களை நாம் அன்றாடம் உச்சரிக்கும்போது நம் தீவினை அகலுகிறது.

வாகனம் ஓட்டும்போது,தெருவில் நடக்கும் போது எந்த மந்திரத்தையும் ஜெபிக்கக்  கூடாது.ஒரே சிந்தனையுடன் இறைவனை நம் மனதினில் இருத்தி,  மந்திரங்களை சொல்வதால் மட்டுமே பலன் கிடைக்கும்.

ஓம் என்ற மந்திரத்தால் பயன் 

யார் ஓம் ஓம் என்று சதா காலமும் ஜெபிக்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக கதிர்விச்சுகளால் அதிகம் பாதிப்பு ஏற்படுவதில்லை.


எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.மன சாந்தி ஏற்படும்.


குழந்தைகள் நாவில் வேப்பங்குச்சியால் ஓம் என எழுத கல்வி மேன்படும்.

கர்ப்பமான பெண்கள்,எந்நேரமும் ஓம் ஓம் ஓம் என்று ஜெபித்து கொண்டிருந்தால்,தெய்வ குழந்தை பிறக்கும்.


கந்த சஷ்டியில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் "ஓம் முருகா" என சொல்லி, வழிபடுவதை நாம் காணலாம்.

சிறு குழந்தைகளுக்கும் நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை  சொல்லி கொடுத்தால், அவர்கள் வாழ்வும் செம்மையாக அமையும்.அவர்களுக்கும் "ஓம் " என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி கொடுத்து,அவர்கள் வாழ்வை சிறப்பிற செய்வோம். 


உங்கள் தோழி ஈஸ்வரி 



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக