புதன், 19 ஆகஸ்ட், 2015

தானம் செய்வதால் பலன்

ஹாய் ப்ரண்ட்ஸ் ,  வணக்கம்


ஆன்மீக தேடல் ஒரு நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் படியாகவும்,என்றும் நாம்
இறைவனை நினைக்க வேண்டும் என்ற விதமாகவும் அமையும்.

இறைவனைப்  பற்றி பேசுவது ,அவர் புகழ் பாடுவது ,அவர் புகழைக் கேட்பது ,இறைவனுக்காக
பூஜை செய்வது எல்லாமே ஆன்மீகம் தான். அந்த வகையில் நான் உங்களிடம் அவரைப் பற்றி
செல்வது கூட ஓர் வகை ஆன்மிகம் தான் .

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கடவுளை நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். நம்பிக்கையுடன் வேண்ட வேண்டும்.

இன்னிக்கு நான் தானத்தைப் பற்றி சொல்லலாம் என்று  இருக்கேன். தானம் நம் கர்ம வினையை
நீக்கும் .இல்லாதவருக்கு செய்யும் தானமானது நம் கர்ம வினையை நீக்குவதுடன், நம்மை
கடவுள் அருகில் கூட்டி செல்கிறது.

 என்ன தானம் கொடுத்தால் என்ன பலன்? 

தானத்தில் சிறந்தது அன்னதானம்.எந்த தானம் செய்தாலும் போதும் என்ற மனம் ,பெறுபவருக்கு ஏற்படாது. இன்னும் கொடுக்க மாட்டார்களா? என்ற எண்ணம் வாங்குபவருக்கு தோன்றும்.ஆனால் அன்னதானம் ஒன்றே வயிறு நிரம்பியவுடன் திருப்தி அடையும்.

அன்னம் ---வறுமை ,கடன் நீக்கும்


துணி தானம் செய்தால் ஆயுள் அதிகமாகும் .


தேன் தானம்  ----புத்திர பாக்கியம்  கிட்டும் .



தீப தானம் ---கண் பார்வை தெளிவாகும்.





அரிசி ----பாவங்களை போக்கும்

நெய் -----நோய்களை போக்கும் 





நெல்லிக்காய் -----ஞானம் கிடைக்கும் .



பால் ----துக்கம் நீக்கும் 



பழங்கள் -----புத்தியும் ,சித்தியும் கிட்டும்

தங்கம்-----குடும்ப தோஷங்களை நீக்கும்.


வெள்ளி தானம் செய்தால் மனக்கவலை நீங்கும்.


பசு -----ரிஷி,தேவர் ,பிதுர் கடன்கள் அகலும் .

தேங்காய் ----நினைத்த காரியம் வெற்றி அடையும்.


தயிர் ------இந்திரிய விருத்தி உண்டாகும்.



 நாங்கள்  வேலைக்கு போறதுனால இந்த தானம் எல்லாம் செய்ய நேரமில்லை என்று   நீங்கள்  சொல்லலாம். 


உங்கள்  வீட்டு பக்கத்திலே பசு இருந்தால் அதற்கு அருகம் புல் கொடுங்கள் .வாழைப்பழம் கொடுத்தால் நம் கர்ம வினைகள் எல்லாம் போய் விடும் .பசுவிற்கு செய்யும் தானம் நம் முன்னோர்களுக்கு செய்வது ஆகும் .

கோவிலுக்கு போனால், அங்கே  இருக்கிற ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள் .

உங்களுக்கு அந்த பரம்பொருள் குறைவில்லாத வாழ்வை அளிப்பார் .

ஓம் நம சிவாய 



இந்த பதிவைப் பார்க்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என்  நன்றிகள் .

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக