ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கண்ணாடி வளையல்கள்

கண்ணாடி வளையல்கள் 


இப்போதெல்லாம் கதைகளிலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெண்மணிகளின் ‘அந்த கால’ ஏக்கப் பேச்சிலும் மட்டுமே வளையல்கள் நினைவுபடுத் தப்படுகின்றன. சில வீடுகளில் மட்டும் இன்றளவும் பாரம்பரிய வழக்கமாக வளைகாப்பு, சீமந்தம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் பிரதான மான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும்  வளையல் அடுக்குவதுதான். ஆரம்ப காலங்களில் வெறும் கண்ணாடி வளையல் மட்டுமே அணிவித்து வந்த இந்த சம்பிரதாயம் நாளடைவில் பிளாஸ்டிக் வளையல்களை அணிவிப்பதாக கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. 

கங்கன் எனப்படும் வளையல், கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும். பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்களால் செய்யப்பட்டு வந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் தந்தத்திலும் வங்காள மாநிலத்தில் சங்கிலும் வளையல் செய்யப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் திருமணத்தின்போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையளும் அணிவது மிகவும் மங்களகரமாகக் கருதப்படுகிறது. கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில்  அவற்றையே பச்சை வண்ணத்தில் அணிகிறார்கள். கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை, சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலை களை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது; அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும் (திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது. 

வளையல்களும்,அதன் பலன்களும்

பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம்.உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும்.
சிப்பி,கிளிஞ்சல் வளையல்கள் அணிந்தால்,வாயுத் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையலால் எந்த பயனும் இல்லை.தங்கம் வளையல்களை கர்ப்பிணிகள் அணிவதால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல மூளை செயல்பாட்டுடன்  வளரும்.தங்கம் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக்காக செயல்படும்.

பின் வளைகாப்பு அடுக்கும் நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்து கொள்ளலாம்.கர்ப்பிணி பெண்  மெல்ல நடந்துவரும் உடல்வாகைக் கொண்டிருப்பாள். அதனால் அவள் வரும்போது முன்னே, பின்னே, அக்கம்பக்கத் தில் செல்பவர்கள் அவள் வருவதைப் புரிந்துகொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும். இது தவிர பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இ ருந்து வந்திருக்கிறது.

வண்ணக் கண்ணாடி வளையல்களை அணிவதால் என்னென்ன பலன்கள்? 

பச்சை நிறம், தேவியின் தத்துவம்; பச்சை நிறக் கண்ணாடியில் அதிகம் உள்ளது. வளையலில் உள்ள சாத்வீகத் தன்மையும் தேவி தத்துவமும்  சைதன்யமும் சேர்ந்து மணிக்கட்டிலும் விரல்களிலும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, தீய சக்திகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுகின்றன. வளையலின் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத் திறத்தைக் குறிக்கிறது.


சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக் கூடிய சக்தியும் கொண்டது. சிவப்பு கண்ணாடி வளையலும் அவ்வாறே தீயனவற்றை அழித்து, நல்ல சக்திகளை கிரகிக்கக் கூடியது. சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்பு நிற வளையல்களில் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளது.

ஊதா நிற வளையல்கள் வளையல்கள் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.பர்பிள் நிற வளையல்கள் சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும்.மஞ்சள் நிற வளையல்கள் பாசிட்டிவ் எண்ணத்தை கொடுக்கும்.கறுப்பு வளையல்கள் மனதைரியத்தை அதிகரிக்கும். 

கண்ணாடி மகாலக்ஷ்மியின் அம்சம் ஆகும்.ஆதலால் பெண்கள் கண்ணாடி வளையல் அவசியம் அணிய வேண்டும்.மங்கள பொருளாகும்.ஆடிப்பூரத்தில் கோவில்களில் அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவிக்கிறார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள் அணிவதால் எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்டாது.

 கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது.  ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்பு உள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக