புதன், 30 மார்ச், 2016

12 ஜோதிர் லிங்கங்கள்

12 ஜோதிர் லிங்கங்கள்

அன்பார்ந்த நண்பர்களுக்கு என்  அன்பு வணக்கங்கள் .


சிவ பெருமான் லிங்க வடிவில் நமக்கு காட்சியளித்து ,நம் தேவைகளை ,விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.சிவராத்திரி காலத்தில் நான்கு ஜாம பூஜைகளில் பிரம்மா,விஷ்ணு,அம்பாள் ,தேவர்களும் ,முனிவர்களும் ,மனிதர்களும் லிங்க வடிவாமான சிவனை வழிபட்டு அவர் அருளை பெற்றனர்.



அதே போன்று பன்னிரு ஜோதி லிங்கங்கள் மிகவும் சிறப்பும்,மகிமையும் உடையவை .





தலத்தின் பெயர்---    அமைந்துள்ள இடம்   ----------      லிங்கத்தின் பெயர்


1)வைத்யநாதம்  ---        மகாராஷ்டிரம்             -----        வைத்யநாதேஸ்வரர் -ராவணன் கொண்டு வந்த லிங்கம் இது .


2)மகாகாளேசம்           உஜ்ஜயினி                        மகாகாளேஸ்வரர் ----கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம் .இங்கு விபூதி அர்ச்சனை நடைபெறும்.தோல் வியாதியை நீக்கும்  கோடி தீர்த்தம் .


3)சோமநாதம்               குஜராத்                              சோமநாதேஸ்வரர் ---இது கடற்கரை தலம்.சந்திரன் சாபம் தீர்த்த தலம் .சிறிய சுயம்பு மூர்த்தி .அமாவாசை திங்கள் கிழமை மிகவும் சிறப்பு.


4)நாகேஸ்வரம்              மகாராஷ்டிரம்                  நாகநாதேஸ்வரர்


5)பீமநாதம்                    மகாராஷ்டிரம்                   பீமநாதேஸ்வரர்  
 

6)மல்லிகார்ச்சுனம்     ஸ்ரீ சைலம்                          மல்லிகார்ச்சுனர்


7)த்ரயம்பகம்               மகாராஷ்டிரம்                     த்ரயம்பகேஸ்வரர்


8)விஸ்வநாதம்             காசி                                விஸ்வநாதேஸ்வரர் -----இங்கு இறந்தவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார் .


9)கேதாரம்                   இமயமலை                       கேதாரேஸ்வரர் ----இது சுயம்பு பனி லிங்கம் .அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம் .


10)ஓங்காரேஸ்வரம்        மத்திய பிரதேசம்             ஓங்காரேஸ்வரர் ----மலை முகட்டில் சுயம்பு லிங்கம்.


11)இராமநாதம்               இராமேஸ்வரம்                  இராமநாதேஸ்வரர்


12)குஸ்மேஸம்                 மகாராஷ்டிரம்                   குஸ்ருநேஸ்வரர்  ---அம்பிகை குங்குமத்தால் வழிபட்ட தலம் .கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது .


நன்றி வணக்கம்


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக