திங்கள், 21 மே, 2018

7நாட்களில் பிராத்தனை நிறைவேறும் ---சாய் பாபா விரதம்

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel


அன்பார்ந்த தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்.சாய் பாபாவிற்கு எத்தனையோ விரதம் இருந்தாலும் இன்று இங்கு நான் சொல்லவிருக்கும் இந்த விரதமானது மிக எளிய சுலமாக செய்யக்கூடிய விரதமாகும்.நீங்களும் செய்து பயன் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
தொடர்புடைய படம்7நாட்களில்  பிராத்தனை நிறைவேறும் ---சாய் பாபா விரதம் 

நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற 7நாட்கள் விரதம் சாய்பாபாவிற்கு விரதம் இருக்க வேண்டும்.குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை விரதத்தை தொடங்க வேண்டும்.நம் வீட்டில் இருக்கும் பாபா சிலை அல்லது படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூ வாங்கி போட்டு அவர்முன் சிறு அகல் தீபம் ஏற்றி உங்கள் பிரார்த்தனையை ஆரம்பிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் பாபாவிற்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.பாபாவுக்கு தீபம் என்றால் மிகவும் பிடிக்கும்.ஆதலால் உங்களால் முடிந்த தீபங்கள் ஏற்றுங்கள்.மஞ்சள் மலரை சமர்ப்பியுங்கள்.அது கிடைக்கவில்லை என்றால் வாசனை மலரை போடுங்கள்.
தொடர்புடைய படம்








காலை 6மணிக்கு பாபாவின் சிலை அல்லது படத்தின் முன் ஒரு வெள்ளைத்தாள் மீது 1கைப்பிடி அளவு சர்க்கரை வைத்து,ஒரு குவளையில்  குடிப்பதற்கு தண்ணீர் சிறிது வைத்து நம்முடைய கோரிக்கைகளை 5நிமிடம் நினைத்து "ஓம்சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்"என்று பிராத்தனை செய்ய வேண்டும்.  8மணியளவில் அந்த சர்க்கரையை எடுத்து எறும்புகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இரண்டாம் நாள் ஒரு வெள்ளைத்தாளில் நவதானியம் வைத்து பாபாவின் முன் 5நிமிடம்  பிராத்தனை செய்து,பிறகு பறவைகளுக்கு அதை கொடுக்க வேண்டும்.பிராத்தனையின் போது "ஓம்சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்"என்று 5நிமிடம் சொல்ல வேண்டும்.



Image result for navathaniyam for pooja







இரண்டாம் நாள் ஒரு வெள்ளைத்தாளில் நவதானியம் (குருவுக்கு உகந்த கொண்டக்கடலை சுண்டல் செய்து )வைத்து பாபாவின் முன் 5நிமிடம்  பிராத்தனை செய்து,பிறகு பறவைகளுக்கு அதை கொடுக்க வேண்டும்.பிராத்தனையின் போது "ஓம்சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்"என்று 5நிமிடம் சொல்ல வேண்டும்.

தொடர்புடைய படம்










மூன்றாம் நாள் வெள்ளைத்தாளில் வெள்ளை பொரி வைத்து நம்முடைய கோரிக்கைகளை கூறி,5நிமிடம்  தொடர்ந்து சாயியின் மந்திரத்தை சொல்ல வேண்டும்.நிவேதித்த பொரியை எறும்புகளுக்கு,குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.









தொடர்புடைய படம்







நான்காம் நாள் பால்  நிவேதனமாக  வைத்து, கோரிக்கைகள் நிறைவேற அருள்புரியுமாறு  5நிமிடம் பிராத்தனை செய்ய  வேண்டும்.  தொடர்ந்து  பாபாவை நினைத்து "ஓம்சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்"என சொல்ல வேண்டும்.அந்த பாலை   நாய்களுக்கு ஊற்ற வேண்டும்.






keerai க்கான பட முடிவு








ஐந்தாம் நாள்,எந்த கீரையாக இருந்தாலும் வாங்கி வைத்து,பிராத்தனை செய்து கீரையை நம் வீடு அருகில் இருக்கும் பசுமாட்டிற்கு அன்னதானம் செய்ய வேண்டும்.











தொடர்புடைய படம்








ஆறாம் நாள் எந்த  இனிப்பு (லட்டு,சாக்லெட் )பாபா முன் வைத்து விட்டு 5நிமிடம் பிராத்தனை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.





தொடர்புடைய படம்ஏழாம் நாள் வெண்பொங்கல் செய்து பாபாமுன் வைத்து நிவேதனம் பண்ணி அதை காகத்திற்கு வைக்க வேண்டும்.1அல்லது 3பேர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கவும்.

7நாள் விரதம் முடிந்தவுடன் பாபாவிடம் சென்று என்னுடைய பிராத்தனைகள் உங்களுக்கு தெரியும் பிராத்தனை நிறைவேற விட்டது என திடமாக நம்புகிறேன் என்று கூறி   நன்றி சொல்ல வேண்டும்.

பாபாவிற்கு  பிடித்தது அன்னதானம் .ஆகையால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்.உங்கள் பிராத்தனையாயும் நிறைவேறும். 

அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள்.

பாபாவின் மீது நம்பிக்கை வைத்து இந்த பூஜையை  செய்யுங்கள்.நிச்சயம் நிறைவேறும்.


இந்த பதிவை பற்றிய தகவல்களை நீங்கள் எனக்கு தாராளமாக தெரிவிக்கலாம்.மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்.நன்றி வணக்கம்.


உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி சரவணன்  

7 கருத்துகள்: