சனி, 28 ஏப்ரல், 2018

பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?

பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?தொடர்புடைய படம்


பெண்கள் மட்டுமல்ல, யாருமே வாசல்படியில் அமரக்கூடாது. வீட்டு வாசல்படி என்பது மகாலட்சுமியின் அம்சம். நம் வீட்டுப் பெண்கள் வாசல்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து வணங்குவதை இன்றும் காண்கிறோம். பெருநகர அடுக்கு மாடி குடியிருப்புகளைத் தவிர்த்து இன்றும் தனியாக வீடு கட்டுவோர் தலைவாயிலை சிறப்பான முறையில் வடிவமைத்துக்கொள்வதைக் காண்கிறோம். குறிப்பாக வாசற்காலின் கீழ்ப்பலகை சற்று பருமனாக அமைந்திருக்கும். 

அதன் கீழ்ப்புறத்தில் உள்நோக்கி ஒரு துவாரம் அமைத்து அதற்குள் பொன், முத்து, பவழம், பஞ்சலோகம் என்று பதித்து அதனைத் தூக்கி நிறுத்துவார்கள். இவ்வாறாக வாசல்படியை அமைக்கும்போது வீட்டிற்குள் இறைசக்தி நிறைந்திருக்கும். தீயசக்தி ஏதும் உள்ளே நுழையாமல் துவாரபாலகர்கள் ஆக நம்மைக் காக்கும் வல்லமை வாசல்படிக்கு உண்டு என்று நம்புகிறோம். சாதாரணமாக வீட்டிற்குள் நுழைவோர் கூட வாசல்படியை மிதிக்காமல் அதனைத் தாண்டியே வருவர். 

வாசல்படியை மிதிப்பதாலும், அதன் மீது அமர்வதாலும் உள்ளிருக்கும் இறைசக்தி காணாமல் போகும். தீயசக்திகள் வீட்டிற்குள் புகுந்துவிடும். இந்த விதி தலைவாசலுக்கு மட்டும்தானே, பின்புற தோட்டத்து வாசல்படி அல்லது மற்ற அறைகளுக்கான வாசல்படியில் அமரலாம் அல்லவா என்ற கேள்வியும் எழும். அவ்வாறு வாசல்படியில் அமருவதால் உள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், அதாவது, இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் என்கின்ற இரண்டுங்கெட்டான் எண்ணங்களே மனதில் தோன்றும், ஸ்திரபுத்தி கிடைக்காது  என்பதாலேயே பொதுவாக எந்த வாசல்படியிலும் அமரக்கூடாது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக