ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சித்திரையின் சிறப்புகள்


சித்திரையின் சிறப்புகள் 
தொடர்புடைய படம்

சித்திரை, தமிழ் புத்தாண்டின் ஆரம்ப மாதம். "சித்திரா" என்னும் சொல் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் குறிக்கும் சொல்லாகும். புத்தாண்டின் ஆரம்பத்தையும் ஒளிர வைக்கும் பிரகாசமான மாதமே சித்திரை.

பனி குறைந்து வெயில் வரத் தொடங்கும் பொழுது வசந்தத்தின் ஆரம்பமாக மல்லிகை மணக்கும். மாமரம் பலன்களைக் கொடுக்கும். வெள்ளரிக்காய் தாகம் தீர்க்கும். கிரினி, தர்பூசணி போன்ற பல கனிகள் நமைக் குளிர வைக்கும். நோய் தீர்க்கும் வேப்பம் பூக்கள் இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும்.

வடநாட்டில் சித்திரை வருடப்பிறப்பை வைசாகி என்றும் ,மேஷ சங்கராந்தி என்றும் குறிப்பிடுவர். 

சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்றும் சொல்வார்கள். சித்திரை மாதப்பிறப்பை பித்ரு தினம் என்றும் சொல்வர். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். இந்த பித்ரு தினத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் விஷேசம் மற்றும் சிறப்பு ஆகும்.siththira povrnami க்கான பட முடிவு

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி எனப்படும், இது ரொம்ப விஷேசமான நாள் ஆகும். இந்த சமயத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த சித்திரை திருவிழா காண்பதற்கு அறிய கண்கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரை சுக்கிலபட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறைவழிபாடுகள் நடக்கின்றன.

சித்திரை மாதத்தை 'வசந்த ராகம்' என்றும் கூறுவார். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சயதிருதி என்று அழைக்கப்படுகிறது. அந்நாள் பொன், வெள்ளி போன்றவைகள் வாங்க ஏற்ற தினமாகக் கருதப்படுகிறது. அந்நாளில் தொட்டது அனைத்தும் துலங்கும் மேலும் மேலும் செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கை. 
lakshmi pooja at home க்கான பட முடிவு

சித்திரை மாதத்தில் வரும் திருதியை தினம் விஷ்ணுபகவான் மீனாக அவதாரம் எடுத்த தினமாகும். சித்திரை மாத சுக்கில பஞ்சமி தினம் லட்சுமி தேவி பூமிக்கு வந்த தினமாகும். எனவே அன்று லட்சுமி பூஜை செய்தால் வளமான வாழ்வு கிடைக்கும்.
சித்திரை மாதத்தில் சுக்கிலபட்ச வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்திரா பௌர்ணமியன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்திரா தேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.சித்திரா பௌர்ணமியன்று பெண்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மாங்கல்ய பலம் நீடிக்கும். சித்திரா பௌர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலம் கூடும்.

சித்திரை வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்கும் பெண்கள் அம்பிகைக்கு சர்க்கரை நிவேதனம் செய்தால் இனிய வாழ்வு உண்டாகும்.

சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும் .அன்று பைரவருக்கு தயிர் சாதம்  நிவேதனம் செய்வது கூடுதல் சிறப்பு.

விண்ணுலக கணக்கரான சித்திரகுப்தன் பிறந்தது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாள். அன்றைய தினம் 'சித்திர குப்தம் மகா ப்ரக்கியம் லேகினி பத்ர தரிசனம்! சித்திரா ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சௌர்வ தேஹினாம்!!' என்ற சுலோகத்தை கூறி வழிபட்டால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


சித்திரை திங்கள் அமாவாசையன்று தான் திருசெங்காட்டங்குடியில் சிவனார் கபாலிருத்திர பசுபதியாக வந்து சிறு தொண்டரிடம் பிள்ளைக்கறியைக் கேட்டு திருவிளையாடல் புரிந்தார். 

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், மகாவீரர் ஆகியோர் பிறந்ததும் இந்த சித்திரை மாதத்தில் தான். எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்புகள் சித்திரை மாதத்துக்கு மட்டுமே இருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக