வெள்ளி, 9 மார்ச், 2018

செவ்வரளி மலர்

செவ்வரளி மலர்Related image
  ராகுகால பூஜைக்கு மட்டுமே செவ்வரளி மலர்  பயன்படுத்தினால் அற்புத பலன்களை அடையவைக்கும்.

*அடுத்து செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும், வீரபத்திரருக்கும் இம்மலரை அணிவித்து அனுகிரகம் பெறலாம். செவ்வாய் கிழமை ராகு கால நேரத்தில் செவ்வரளி மாலை பைரவருக்கு மாலை அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து,செம்மாதுளை பழம் நிவேதனம் செய்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில்  உடன் பிறந்தவர்களுடைய   உறவு வலுப்படும். 

*பஞ்சமி அஷ்டமி திதியில் வாராகி அம்மனுக்கு இம்மலரை பயன்படுத்தலாம் மிக நல்ல பலன் கிடைக்கும். 
*பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது. உக்ரமலர் என்பதால் தெய்வம் பார்த்து சூட்ட வேண்டும்.

*ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம் என்றாலும் மிகச்சிறந்த உடனடி பலனை பெற அமாவாசை, பௌர்ணமி, திங்கள் கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். 

*ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம். எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும். கனியை காலால் மிதித்து திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி சொருகிய பின்னரோ அல்லது எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.
*கூடுமானவரை வீட்டில் இம்மலரை பயன்படுத்த வேண்டாம். காமாட்சி அம்மன் விளக்கிற்கும் இம்மலரை ராகுகால நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் அணிவிக்க வேண்டாம். 

*இந்த செவ்வரளி மலரை வீட்டில் பிரயோகித்தால் சூழ்ச்சியால் விரோதம் உண்டாகும், ஜனவசியம் குறையும், சோம்பல் அதிகமாகும், சுபநிகழ்வு தள்ளிபோகும், செல்வம் குறைய ஆரம்பிக்கும்,
*நன்கு கவனத்தில் வையுங்கள் இம்மலர் பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும். இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி பயன்படுத்தக்கூடாது. தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இதுபோன்று ஏதாவது பரிகாரமாக இருக்க வேண்டும். வழக்கு வம்புகள் தீரவும் இம்மலரை பயன்படுத்தலாம். அதுவும் முதலில் கூறிய தெய்வங்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். 

*திருமணம், குழந்தை பிறப்பு, செல்வ சேர்ப்பு போன்ற சுபநிகழ்வுகளில் மற்றும் இது சம்மந்தமான பிராத்தனைக்கு இம்மலரை தனியாக பயன்படுத்தக்கூடாது. மல்லிகை மலருடன் இணைத்தே செவ்வரளியை பயன்படுத்த வேண்டும். சுபநிகழ்வு யாவற்றிற்கும் மல்லிகை மலரையே பயன்படுத்த வேண்டும். 

*செவ்வரளி செடியை வீட்டினில் வளர்க்கக்கூடாது. வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும். ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும். இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க ஆரம்பிப்போம் கவனம். 

*பந்தங்களில் பிரிவை உண்டாக்கும் தன்மை செவ்வரளிக்கு உண்டு. உறவுகள் என்றாலோ அக்கம் பக்கத்துக்காரரோ நம்மோடு சிறுசிறு மனஸ்தாபத்தோடு இருப்பது இயல்பு. அவ்வாறு உள்ளவர்கள் நாளடைவில் நட்பாக மாறுவது இயல்பு.

*ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வகையான மலர் என ரகம் பிரித்து பயன்படுத்தினர்.  துஷ்ட நிவாரணத்திற்கு ஒரு மலர், சுபத்திற்கு ஒரு மலர், பொதுவான காரியத்திற்கு ஒரு மலர், தெய்வ தேவதைகளுக்கு பிடித்தமான மலர், ஒவ்வொரு வகையான செயல்களுக்கேற்ற மலர் என அறிந்து பயன்படுத்த வேண்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக