செவ்வாய், 6 மார்ச், 2018

நமக்கு நன்மை செய்யக்கூடியவை



நமக்கு நன்மை செய்யக்கூடியவை Image result for spatika lingamImage result for enthira vallipaadu

1) வீட்டில் ஸ்படிக லிங்கவழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வநிலையை அடைய உதவும்.தினமும் ஸ்ரீசூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிகபலன் தரும். மேலும் வெள்ளை உடைகள் நல்லவற்றை, பணத்தை ஈர்க்க உதவும். அதை அதிகம் உபயோகித்தால் நலம் தரும்.





(2) செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும்.
 இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு   மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடதுகை ஆட்காட்டி விரலில் வெள்ளி மோதிரம் (கற்கள்எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று)அணிவது தான அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலதுகை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.


Related image

(3) சுத்தமான மலைதேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமிஅறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.வியாபாரிகள் சுத்ததேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.

Related image
4) வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம்.மேலும் வியாழன் அன்றுமட்டும் அதற்கு சுத்தமானபாலை வார்த்து வரவும்.  



(5) மேற்கு பார்த்த வீடு,கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டிவைக்கலாம். மற்ற திசைஉள்ளோர்கள் சிகப்புதுணி அல்லது ரிப்பன்கட்டலாம்.

Related imageRelated image(6) குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வஇலையை கொதிக்கவைத்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க  நலம்மிகும்.Image result for banana

.(7) ஏழை எளியோர், தானம்கேட்போர் (பிச்சை)ஆகியோருக்கு மஞ்சள்லட்டு மற்றும் மஞ்சள்வாழை  பழம் வாங்கிகொடுக்கவும். தினசரிமுடிந்தாலும் செய்யலாம். மாட்டிற்கு வெல்லம் கொடுத்துவரலாம்.


(8) குங்குமபூவை உணவில் முடிந்தபோதெல்லாம் சேர்த்துவரவும். தினசரி பசுவிற்கு   மஞ்சள் லட்டு ஒன்று கொடுத்து வரலாம்.மேலும் பசு வதையை தடுப்பது மிக சிறந்த நன்மையும், செய்தபாவங்களை, பூர்வஜென்மகர்மாக்களின் தாக்கங்களையும்  களையச்செய்யும்.மேற்கண்ட  முறைகளில் முடிந்தவர்கள்முடிந்தவற்றைசெய்யலாம்.ஏதாவதுஒன்றுசெய்தாலும்பயன் உண்டு.அனைத்தையும்செய்தாலும் பயன் உண்டு.    





    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக