புதன், 1 மார்ச், 2017

குரு பாடல்

என் இனிய ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

தினமும் கோவிலுக்கு செல்வது நல்லது.அப்படி செல்ல முடியாத பட்சத்தில் ,நாம் எல்லோரும் வாரம் ஒருமுறையாவது கோவிலுக்கு சென்று வழிபட  வேண்டும்.கோவிலில் குருவாக வீற்றிருக்கும் சிவனின் அம்சமான தெட்சணா மூர்த்தியை வழிபடுவது சிறப்பு.வியாழக் கிழமை கொண்டக்கடலை மாலை சாற்றி,இவரை வழிபடுவதால் ஞான அறிவை பெறலாம். இந்த குரு பாடல்களை பாடி வழிபடுவதன் மூலம் அவர் அருளை எளிதில் பெறலாம்.

குரு பாடல்





சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்

குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

"வானவர்க் கரசே! வளம் தரும் குருவேகாணா இன்பம் காண வைப்பவனேபொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்நிலையாய் தந்திட நேரினில் வருக!'' "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம்.

நாமும்  குருவை வேண்டி அவர் அருளை பெறுவோமாக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக