செவ்வாய், 18 அக்டோபர், 2016

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு பலன் கிடைக்கும்?


நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு பலன் கிடைக்கும்?


பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறைக்கு.

புனித‌நதிகளில் நீராடுதல் - 3 தலைமுறைக்கு

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் - 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் - 3 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் - 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது - 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் - 7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் - 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது - 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் - 21 தலைமுறைக்கு. 

மஹாபரதத்தில் ஒரு அற்புதமான காட்சி:

அர்ஜுனனின் அம்பு மார்பினைத் துளைத்த நிலையில் தேர்ச்சக்கரத்தின் அருகில் கர்ணன் இறப்பை எதிர்நோக்கி வீழ்ந்து கிடந்தான். அவன் புண்ணியம் அவனின் உடலில் இருக்கும் வரை அவனின் உயிர் பிரியாது. என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உணர்கிறார். ஓர் அந்தணர் வேடத்தில் சென்று தானமாக கர்ணனின் அனைத்து புண்ணியத்தையும் கேட்கிறார்.
பரமாத்மா கர்ணன் அனைத்து புண்ணியங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்யும் பொழுது "தானத்தால் ஏற்பட்ட அனைத்து புண்ணியங்களையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன். இதனால் ஏற்படும் புண்ணியத்தையும் உனக்கே அர்ப்பணிக்கிறேன்" எனக் கூறுகிறார்.புண்ணியத்தின் முக்கியத்துவம் இதன்மூலம் தெரிகிறது.
நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் .
நாம் வாழும் காலத்தில் நம்மால் முடிந்த புண்ணியங்களை செய்து,மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவோம்.நாமும் அவர்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து சந்தோசப்படுவோம்.என்றென்றும் யாவரும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம் உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக