திங்கள், 10 அக்டோபர், 2016

இந்துக்களின் 5முக்கிய கடமைகள்

இந்துக்களின் 5முக்கிய கடமைகள்

அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.


அன்றாடம் இறைவனை வணங்குவதால் மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது.மனிதப்பிறவி சிறந்த பிறவி ஆகும். விலங்குகள்,பூச்சுகள்,கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகளுக்கு இல்லாத பேசும் சக்தி மனிதனுக்கு இருக்கிறது.நாம் அன்றாடம் இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பதன்மூலம் நம் கர்ம வினைகளை போக்கிக் கொள்ளலாம்.சிறுவயது குழந்தைகளுக்கும் இறைவனின் திருநாமங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.  

  
இந்துக்களின் 5முக்கிய கடமைகளைப் பற்றி இந்து தர்மநூல்கள் முன்மொழிகின்றன .இவை "பஞ்சநித்திய கர்மங்கள்" என்றழைக்கப்படுகின்றன .நித்திய கர்மம் என்பது "கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள்"என்று பொருள்படும்.இந்த 5முறை செயல்களும் ஒரு உறுதியுள்ள,பொறுப்புள்ள,பண்பாடு மிக்க தர்மநெறியில் ஒரு மனிதன் செல்ல வழிவகுக்கின்றது. 



1.வழிபாடு [உபாசனை]

வீட்டிலும்,கோவிலிலும் வழிபாடு செய்ய வேண்டும்.வழிபாட்டில் ஈடுபடும்போது கலாச்சார உடைகள் அணியவேண்டும்.வழிபாடு என்பது தூய்மையானதாகவும்,எந்தவொரு சுயநல எண்ணமும் அற்றதாகவும் இருக்க வேண்டும்.தானும் வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.மற்றவர்களையும் வழிபாட்டில் ஈடுபட வழிகாட்ட வேண்டும்.ஒருவனை வழிபாட்டில் ஈடுபடவிடாமல் தடுப்பதை விட கொடிய கர்மவினை கிடையாது.உபாசனை என்பது வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி தியானத்தை குறிக்கும்.உபாசனை என்றால் "அருகில் அமர்ந்து மனத்தை ஒருநிலைப்படுத்தல்"எனப் பொருள்படும்.ஆராதனைகளும்,வழிபாடுகளும் முடிந்த பின்னர்,பூஜை அறையிலும்,கோவிலிலும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு முழுமையான வழிபாட்டில் ஈடுபடுவது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.

2.திருவிழா(உத்சவம்)

உத்சவம் என்றால் "துன்பங்கள்  நீங்கும் நாள்"எனப் பொருள்படும்.பெரும்பாலும் திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாகவும்,மகிழ்ச்சி பொங்கும் மங்கல திருநாட்களாகவும் திகழ்கின்றன.இந்நாட்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.ஒருவனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள்தான் துன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன.அதேபோல் மனத்தில் விதைக்க வேண்டிய நற்குணங்கள் இன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன.தீபாவளி,பொங்கல்,புத்தாண்டு ,தைப்பூசம்,சித்திரை திருவிழா போன்றவை எல்லாம் பின்னணியில் தீமைகளை அழித்து நன்மைகளை விதைத்தல் என்ற நோக்கத்தை கொண்டிருக்கும்.நம் முன்னோர் பல புராண கதைகள் மூலமாக இதை  நமக்கு உணர்த்த முற்பட்டனர்.ஆகவே,திருநாட்கள் துன்பங்களை நீக்கி, இன்பத்தை தருவதற்கே உருவாக்கப்பட்டவை.

3.அறநெறி[தர்மம்]

வயதில் முதியவரை மதித்தல்,பெற்றோர்களை தெய்வத்திற்கு நிகராக போற்றுதல்,சுயநலமான செயல்களையும்,எண்ணங்களையும் துறத்தல்,மற்றவர்களின் நலனுக்காக செயல்கள் ஆற்றுதல், தீமையானவற்றை செயலாலும்,மனதாலும் மேற்கொள்ளாமல் இருத்தல்,இனிமையான பயன்தரும் சொற்களையே பெறுதல்,சான்றோர்களின் சொற்களை பின்பற்றுதல்,எல்லோரையும் சமமாக பார்த்தல்,உயர்வு தாழ்வு மனப்பான்மையின்றி எல்லா உயிர்களிலும் ஈஸ்வரன் குடியிருக்கிறான் என்பதை அறிந்து தெளிவான நோக்கத்தோடு செயல்பட வேண்டும்.இவ்வாறு தர்மநெறியில் செயல்பட வேண்டும்.

 4.யாத்திரை[தீர்த்த யாத்திரை]

 தீர்த்தம் என்றால் புனிதத்தலம் என பொருள்படும்.புனித தலத்திற்கு நீண்ட பயணம் மேற்கொள்வது தீர்த்த யாத்திரை என்றழைக்கப்படுகிறது.யாத்திரை மேற்கொள்வதால்  ஆன்மீக வலிமை,மனோ வலிமை உண்டாக்குகிறது.தீர்த்த யாத்திரை தலங்கள் பெரும்பாலும் தெய்வத்துடனும்,தெய்வீக மனிதர்களுடனும் தொடர்புடையதாக அமைந்திருக்கும்.இத்தகைய இடங்களில் பல மகான்கள் தெய்வீகத்தை உணர்ந்து முக்திநிலை அடைந்திருக்கிறார்கள்.ஆதலால் இந்த இடங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும்  என்று புராணங்கள் சொல்கிறது.தீர்த்த யாத்திரையின் போது ஒருவன் பல தடைகளை கடந்து தன்னுடைய இலக்கை அடைகின்றான்.அதுபோலவே வாழ்க்கை எனும் பாதையில் மெய்யுணர்வு எனும் குறிக்கோளை அடைய ஒருவன் பல தடைகளையும்,சவால்களையும் கடந்து வர வேண்டும்.தீர்த்த யாத்திரை தலங்களுடன் அதீத தெய்வசக்திகள் ஒருவனின் மனத்திலிருந்து தீமைகளை  நீக்கி,அவனை நேர்வழியில் தர்மநெறியோடு செயல்பட உதவுகின்றன.ஆகவே,யாத்திரை மேற்கொள்வது இந்துக்களின் கடமையாகும்.

 5.அர்த்தமுள்ள சடங்குகள் [சமஸ்காரம்]  

ஒருவனின் பிறப்பு முதல்  இறப்பு வரை மேற்கொள்ள வேண்டிய சில அர்த்தமுடைய சடங்குகளை  இந்து தர்ம வரையறு காட்டுகிறது .
வளைகாப்பு,பெயர் சூட்டுதல்,முடி நீக்குதல்,காது குத்துதல்,பள்ளியில் சேர்த்தல் போன்ற புறசடங்குகள் உள்ளன.சமஸ்காரம் என்றால் "முழுமையான நிறைவு அடைதல்"அல்லது "தயார்ப்படுத்துதல்" எனப் பொருள்படும்.இச்சடங்குகள் ஒருவனின் கர்மாவோடு தொடர்புடையது என யோக சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறது.சடங்குகள் பெரும்பாலும் புறம் மற்றும் அகம் எனும் இருநிலையிலும் ஒருவன் மேற்கொள்ள வேண்டும்.ஆகம கெளதமர் தர்ம சூத்திரம்,8அக சடங்குகளை குறிப்பிடுகின்றது.

அவை 
1.எல்லா உயிர்களிடமும் கருணை,பொறுமை,பொறாமை இல்லாமை,தூய்மை,தெளிவு,நேர்மறையான எண்ணங்கள் கொண்டிருத்தல்,தாராள குணம்,பேராசை இல்லாமை,எவனொருவன் புறச்சடங்குகள் மட்டுமே மேற்கொண்டு இந்த 8அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல்  இருக்கின்றானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை.அவன் மேற்கொள்ளும் புற சடங்குகள் அர்த்தமற்றதாக போகின்றன.ஒருசில புற சடங்குகள் மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் 8அக சடங்குகள் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்க்கிறான். 

அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .












 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக