வியாழன், 19 ஜூலை, 2018

ஆடி மாதம் என பெயர் வரக்காரணம்

ஆடி மாதம் என பெயர் வரக்காரணம்


ஆடி மாதத்திற்கு இப்பெயர் வர கூறப்பட்ட பல கதைகளுள் சிவா மகா புராணத்தில் இடம் பெற்றுள்ள இந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
கிரகங்கள் மனிதர்களையும் தேவர்களையும்  மட்டுமல்லாமல் சில நேரங்களில் தெய்வங்களையும் ஆட்டுவித்த சம்பவங்கள் உண்டு .
அப்படி ஒரு சமயம் கிரகங்களின் திருவிளையாட்டால் சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒருவரை விட்டு   ஒருவர் விலகி  இருக்க நேரிட்டது.
அந்தச் சமயத்தில்  ஆடி என்று பெயர் கொண்ட ஒரு அரக்கன், இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு சிவபெருமானை நெருங்க நினைத்தான். ஆனால் பார்வதி தேவியின் நெருங்கிய தோழியான “உத்தாலகுசுமை”யின் கண்களிலிருந்து தப்ப முடியாது என்று பாம்பு ரூபம் கொண்டு உள்ளே புகுந்து சிவபெருமானின் அருகில் சென்றவுடன் பார்வதியாக உருமாறினான். வந்திருப்பது பார்வதி அல்ல  அரக்கன் ஆடி தான் என்று அறிந்துகொண்ட பெருமான் அவனை திரிசூலத்தல் கொன்று சூரசம்ஹாரம் செய்தார்.
இதை அறிந்த பார்வதி தேவி தன்னுடைய வடிவம் கொண்டு வந்ததால் அந்த அரக்கனின்பால் இரக்கம் கொண்டு அவனுக்கு நற்கதி வழங்கினாள். அந்த அரக்கனின் பெயராலேயே அந்த மாதம் அழைக்கபடுவதாகவும்  இந்த மாதத்தில் அம்பிகையை வழிபட்டால் அன்னை தன் அருட் கடாக்ஷத்தை முழுமையாக நமக்களிப்பாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக