திங்கள், 6 ஜூன், 2016

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் 

பித்ருக்களை சிரத்தையோடு வழிபாடு செய்தால் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு,வேலை,திருமணம்,மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது.பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பலன் உண்டாகாது.பித்ரு  தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.அதனை முதலில் போக்கிட வேண்டும்.பின்னரே,வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

பித்ருக்களுக்கு செய்யும் பூஜை இறைவனைச்  சேருகிறது.

.
ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம்  செய்யாமல் எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்று கொள்வதில்லை என விஷ்ணு பகவான் கூறியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .

ஆடி அமாவாசை ,தை அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

கோவில்களில் தர்ப்பணம் முடிந்தவுடன்,அன்னதானம் செய்தல் சிறந்தது.


திலா ஹோமம்  


மிகக் கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று திலா ஹோமம் செய்வது அவசியமானது.இதை வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும்.


திலா ஹோமம் எனப்படுவது நெல்லும்,எள்ளும் கலந்து செய்யும் ஹோமம் ஆகும்.


திலம் என்றால் எள்.திலா ஹோமம் செய்யும் அன்று இரவு ,இராமேஸ்வரத்தில்  தங்க வேண்டும்.சிரத்தையுடன் செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது  கருட பகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகா விஷ்ணு ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலா ஹோமம் செய்ய வேண்டும்.


வைணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் இராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக் கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்கள் ஆசிர்வாதம் பெறலாம்.

அமாவாசை தினத்தில் செய்யக் கூடாதவை 

அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாடு செய்பவர்கள்  வீட்டு  வாசலில் கோலம் போடக்கூடாது.

மாமிசம் சாப்பிடக் கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.


செய்யக் கூடியவை 


தர்ப்பணத்தை கிழக்கு முகமாக பார்த்தப்படி கொடுக்க வேண்டும்.

பித்ருக்களின் பூஜையை முதலில் முடித்தபிறகு ,சிறிது நேரம் கழித்து நாம் செய்யும் நித்திய பூஜையை செய்யலாம்.

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வம் மகா விஷ்ணு.



பித்ருக்கள் வழிபாடு 


அமாவாசை அன்று ,பித்ருக்கள் வழிபாட்டின் போது ,வீட்டில் முன்னே இறந்தவர்களின் படத்திற்கு துளசி மாலையோ,துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும்.இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்க்கள்.அதன்மூலம்,நமது துயர் நீங்கி,வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

நன்றி வணக்கம் 

ஈஸ்வரி 






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக