ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆன்மீகத் தகவல்கள்

அன்புள்ள என்  இணையத்தள ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

நாம் அன்றாடம் பணிகளை, காலையில் ,இறைவனின் அருளுடன் ஆரம்பித்து,இரவில் நன்றிகள் சொல்லி முடிக்கிறோம்.எந்த காரியத்தை தொடங்கும்போதும் கடவுளின் துணையுடன் ,அருளுடன் ஆரம்பிக்க ,அது நமக்கு வெற்றியை தேடி தரும்.நமக்கு கிடைத்த நேரங்கள் பல.அதில் ஒரு சில நிமிடங்களாவது கடவுளை நினைக்க வேண்டும்.நம் வீட்டு குழந்தைகளுக்கும் கடவுளை தினசரி வணங்க சொல்லி கொடுக்க வேண்டும்.


ஆன்மீகத் தகவல்கள் 




சந்தியா வதனம் என்றால் என்ன ?


சந்தி என்றால் சந்திப்பு எனப் பொருள்.

இரவும்,காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது
காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சி பொழுது 
மாலையும்,இரவும் சந்திக்கும் சாயங்காலை பொழுது 
 ஆகிய மூன்று வேளைகளும் "சந்தி" அல்லது "சந்தியா" என்று பெயர்.

இந்த மூன்று வேளைகளிலும் கடவுளை வணங்குதல் "சந்தியா வதனம்" என்று பெயர்.

சந்தியா வதனம் சூரிய வழிபாடு முறைகளில் ஒன்றாகும்.

இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்தி கூர்மை உண்டாகும்.கண்கள் சுகமடையும்.ரத்த ஓட்டம் சீராகும்.மனத்தூய்மை அடையும்.


கையில் காப்பு கயிறு காட்டுவதால் பயன் 


கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு  காப்பு கயிறு கட்டுகிறார்கள்.மஞ்சள்,சிவப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கலசமாக செயல்படுகிறது.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிய வேண்டும்.பட்டு,தர்ப்பை,அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

காப்பு கயிறும் மந்திரத்தை ஈர்க்கும்.நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.


காசி கயிற்றில் முருகன்,பிள்ளையார்,சிவன் போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.

ஆண்கள் வலது கைகளிலும்,பெண்கள் இடது கைகளிலும் காப்பு கயிறைக் கட்டி கொள்ள வேண்டும்.

மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டுவதாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.
இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.

ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ் ,அதிகாரம் சேரும்.



என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக