வியாழன், 9 ஜூன், 2016

தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் 


படைத்தல்,காத்தல் ,அழித்தல் போன்ற மூத்தொழிலை செய்யும் மும்மூர்த்திகளின் அவதாரமே தத்தாத்ரேயர் அவதாரமாகும்.கலியகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும் ஒன்று சேர்ந்த ஆச்சரிய வடிவமாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய வடிவமாகும்.

தத்தாத்ரேயர் ஜெயந்தி ஒவ்வொரு வருடமும்  மே மாதத்தில் வரும்.எல்லா அவதாரத்திற்கும் ஆரம்பம்,முடிவு உண்டு.அனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது.ஏனெனில் ,அனுமனை பொல ,மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரன்ஜீவியாக போற்றப்படுகிறார்.

தத்தாத்ரேயர் பிறப்பு 

அனுசூயா என்பவர் கற்பின் சிகரம்.அவர் அத்ரி மகரிஷியின் மனைவியாவார்.அத்ரி மகரிஷி ஒரு பெரும் முனிவர்.அனுசூயா வருடக் கணக்கில் பல விரதங்களை அனுஸ்டித்தவர். பிரம்மா,விஷ்ணு,சிவனுக்கு இணையாக ஒரு ஆண்மகனை பெற்றெடுத்துக் கொள்ள விரும்பினார்.


ஒரு முறை லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி மூவரும் தங்கள் கணவன்மார்களை அனுப்பி அனுசூயாவின் பதிவிரதைத்தனம் எப்படி ?என்று சோதிக்கச் சொன்னார்கள்.

மும்மூர்த்திகளும் சன்னியாசிகளைப் போன்று உருமாற்றிக் கொண்டு,அனுசூயாவுக்கு முன் தோன்றி நிர்வாண கோலத்தில் தங்களுக்கு அன்னம் இடச் சொன்னார்கள். 


அனுசூயா கலங்கவில்லை.அவளுக்கு தன கற்பின் மீதும்,பதிவிரதை தன்மையின்மீதும் அதீத நம்பிக்கை.கையில் நீரை எடுத்து 'என் கணவருக்கு நான் செய்யும் பணிவிடை உண்மையானால் இந்த சன்னியாசிகள் மூன்று குழந்தைகள் ஆகட்டும்'என கூறி தெளித்தார். நீரைத் தெளித்தவுடனேயே மூவரும் குழந்தைகள் ஆகின.இதுவே அனுசூயாவின் கற்புக்கு அடையாளம்.



அந்த குழந்தை எல்லாம் தன்னுடையவை என்று நினைத்து அவைகளுக்கு தானே நிர்வாண  நிலையிலேயே பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்தாள்.அத்ரி மகரிஷி வீடு திரும்பி குளித்த பிறகு,அனுசூயா நடந்ததை எல்லாம் விவரித்தார்.அந்த மூன்று குழந்தைகளையும் அவர் காலடியில் சமர்ப்பித்தார்.அத்ரி மகரிஷி அந்த மூன்று குழந்தைகளையும் எடுத்துக் கொஞ்சினார்.அவைகள் ஒன்றாக ஆகின.இரு கால்கள்,ஒரு உடல்,மூன்று தலைகள் மற்றும் ஆறு கைகள் கொண்ட உருவமாக ஆகின.


சரஸ்வதி,லக்ஷ்மி,பார்வதி மூவரிடமும் நாரதர் அவர்களுடைய கணவன்மார்களுக்கு  ஏற்பட்ட கதியை எடுத்துச் சொன்னார்.அவர்கள் சாதாரண பெண்களின் உருவில்,அத்ரி முனிவர் முன் தோன்றினர்.தங்களுடைய கணவன்மார்களை மீட்டுத் தருமாறு வேண்டினர்.

வந்திருப்பது முப்பெரும் தேவியர் என்பதை அறிந்து உரிய மரியாதை செலுத்தினார்.அத்ரி மகரிஷி மூம்மூர்த்திகளையும்  தங்கள் உண்மையான உருவத்தை அடைய செய்தார்.மூவரும் "உங்களுக்கு அரிய குழந்தை பிறக்கும் அது பிற்காலத்தில் பெரிய பேர்பெற்ற மகரிஷியாக ஆகி விடும்.எங்களுக்கு இணையாக அந்தக் குழந்தை வளரும்.அதுவே அனுசூயாவின் விருப்பமும் ஆகும்.அந்த குழந்தைக்கு தத்தாத்ரேயர் என்ற பெரிய சூடப்படும்" என மகரிஷிக்கும்,அனுசூயாவிற்கும் வரத்தை கொடுத்தனர்.

அதன்படியே,மும்மூர்த்திகளின் ஒன்று சேர்ந்த வடிவமாக தத்தாத்ரேயர் பிறந்தார்.


தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக