செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

வலம்புரி சங்கு பூஜை

வலம்புரி சங்கு பூஜை 



என் அன்பு தோழிகளுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.மேலும் மேலும் நான் இறைவனைப்பற்றி எழுத ஊக்குவித்த, அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலம்புரிசங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மியுடன்  தோன்றியதால்  புனிதமான பொருளாக கருதப்படுகிறது.மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரிசங்கு.இதை வீட்டில் வைத்து வழிபட்டால் நம்மை தேடி மகாலக்ஷ்மி வருவாள் என்பது வேதவாக்கியம் சொல்கிறது.
வலம்புரிசங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷம் அகன்று விடுகிறது.வாஸ்து குறை இருக்கும் வீட்டில் மஞ்சள் நீரும்,துளசியும் சங்கில் இட்டு காலையில் தெளித்து வந்தால் குறைகள் நீங்குவதாக ஐதீகம்.


முக்காலத்தில் மக்கள் செல்வச்செழிப்புடன் இருந்து வந்ததற்கு காரணம் வீடு கட்டும்போது 5வெள்ளிக்கிழமை லக்ஷ்மி வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை வீட்டு நிலைவாசலில் வைத்து , நடுஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள்.  அதனால்தான் எந்த  குறையும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யும் முறை 

48நாட்கள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலையில் குளித்து வலம்புரிச்சங்கை சுத்தமான  நீரில் அலம்பி ,சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி கலந்த நீரை  ஊற்றி  முதலில் விநாயக பெருமானையும்,குருவையும் வணங்க வேண்டும்.

ஓம் கம் கணேசாய நம  

ஸ்ரீ குருதேவாய நம  என்றும் 


ஓம் பாஞ்சஜன்யாய  வித்மஹே பாவ மானாய த்மஹி தந்நோ சங்க ப்ரசோதயாத் 

சங்கு காயத்ரி மந்திரத்தை 3முறை சொன்ன பிறகு ஸ்வாகதம் ஸ்வாகதம் என்று சொல்ல வேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேராய நம  என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்.

பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம 

சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரை போட வேண்டும்.
வலம்புரி சங்கை தாமிரத் தட்டில் பச்சரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும்.பிறகு நெய்தீபம் ஏற்றி துளசி,அரளி,சிவப்பு மலர்,மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து சங்கைச் சுற்றி மலர்தூவ வேண்டும்.

ஓம் பத்ம நிதியே நம ஓம் சங்க நிதியே நம ஓம் மகர நிதியே நம ஓம் சுகச்சப நிதியே நம ஓம் முகுந்த நிதியே நம ஓம் குந்தாக்ய நிதியே நம ஓம் நீல நிதியே நம ஓம் மக நிதியே நம ஓம் வர நிதியே நம என்று நிதிகளை பூஜிக்க வேண்டும்.


மூம்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும் .

ஓம் யக்ஷசாய வித்மஹே
ஓம் வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத் 

பிறகு 16நாமாவளி அர்ச்சனை (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது )

ஓம் க்லீம் குபேராய நம ஓம் க்லீம் ஸ்ரீமதே நமஓம் க்லீம் பூர்ணாய நமஓம் க்லீம் அஸ்வாரூடாய நமஓம் க்லீம் நரவாகனாய நமஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நமஓம் க்லீம் யக்ஷõய நமஓம் க்லீம் நித்யேஸ்வராய நமஓம் க்லீம் நித்யானந்தாய நமஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நமஓம் க்லீம் அகாஸ்ரயாய நமஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நமஓம் க்லீம் சர்வக்ஞாய நமஓம் க்லீம் சிவபூஜகாய நமஓம் க்லீம் ராஜயோக வராய நம


அர்ச்சனை முடிந்தபிறகு குபேர காயத்ரி சொல்லி தூபதீபம் காட்டி 

ஓம் லக்ஷ்மி சகித குபேரய நம:மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு 


என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும்.

நிவேதியமாக கற்கண்டு,பால்,அவல்  பாயாசம் வைத்து,நெய் தீபத்தை ஏற்றி ஆரத்தி காட்ட வேண்டும்.  

ஓம் வடதிசை வல்லவா போற்றி ஓம் நவநிதி தேவா போற்றி ஓம் செல்வத்தின் உருவமே போற்றி ஓம் செல்வவளம் சேர்ப்பாய் போற்றி ஓம் திருமகளின் நட்பே போற்றி ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி ஓம் குபேர நாயகா போற்றி 


என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தர வேண்டும். 

எளிமையான இந்த குபேர பூஜையை 48நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் கொழிக்கும்.6வெள்ளிக்கிழமை இந்த பூஜை செய்தால் கடன் தீர வழி வகுக்கும்.

வியாழன் மாலை 5முதல் 7.30மணி வரை குபேர காலத்தில் 9வியாழக்கிழமைகள் செய்து முடிக்க பொருள் சேர வழி உண்டாகும்.8பவுர்ணமிக்கு குபேர அர்ச்சனையுடன் சங்கு பூஜை செய்து வர செல்வம் சேரும்.

இத்தகைய பலன்களை தரக்கூடிய இந்த பூஜையை செய்து பலன் பெறுங்கள் .



உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி இந்த பதிவை முடிக்கிறேன்.உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் எனக்கு  மேலும் எழுத வழிவகுக்கும்.

  அன்பு தோழி ஈஸ்வரி 


























3 கருத்துகள்: