திங்கள், 1 ஆகஸ்ட், 2016

நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயருக்கு எளிய வழிபாடு

நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயருக்கு எளிய வழிபாடு 

support and subscribe my  you tube channel tamilnattu  samayal 

அன்பு,அறம்,அருள்  போன்ற முழு வடிவமாக திகழும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு சர்வமங்கள அளிக்கக்ககூடியது.இந்த பூஜையானது நவகிரக பூஜைக்கு சமமாக கருதப்படுகிறது.


ஸ்ரீ ராம காரியத்தில் சிவபெருமான் ஆஞ்சநேயர் வடிவம் எடுத்ததாகவும்,சிவபொருமானை விட்டு பிரியாத பார்வதி தேவி அனுமானின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆகவே,அனுமனை வணங்குவதால் சிவனையும்,பார்வதியையும் சேர்த்து  வணங்குவதாக கருதப்படுகிறது.

ஸ்ரீஆஞ்சநேய பெருமான் வலிமை முழுவதும் வாலில்தான் உள்ளது. இதற்கு ஒரு வரலாறு உள்ளது.

அனுமானின் வாலின் பெருமையை கூறும்  கதை  

பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது.அதை நகர்த்த குரங்கை கேட்டார்.


படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுக்கோளை வேகமாகச் சொல்லி கோபப்பட்டார்.உடனே,அனுமார்,"வயதாகி விட்டதால் என்னால் என்  வாலை நகர்த்த முடியவில்லை,நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு"என்று சொன்னார்.பீமர்  வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார்.பலமுறை முயன்றும் முடியவில்லை.அப்போது ஆஞ்சநேயர் தான் வாயுபுத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத் தானே நகர்த்தி பீமன் போவதற்கு  வழி கொடுத்து வாழ்த்தினார்.


தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் ஆஞ்சநேயரை பார்த்து ,"உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து,எனக்கு சர்வ சக்திகளையும்,மங்கலத்தையும் அளித்தீர்களே!அதே போல் உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்கலத்தையும் கொடுத்து அருள வேண்டும்" என்று  கேட்டுக்  கொண்டார்.


அப்படியே அனுமாரும் வரம் அளித்தார்.இந்த கதையினால்தான் ஆஞ்சநேயருக்கு வாலில் பொட்டு  வைத்து வழிபடும் முறை வந்தது.


வழிபாடு செய்யும் முறை 

அனுமனுடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப்பொட்டு வைத்து அந்த சந்தனப்பொட்டின் மேல் குங்குமத்திலகம் இட்டு வரவேண்டும்.


ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனிவரை முடிக்க வேண்டும்.அப்படி முடிக்கிற நாளன்று, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்திப் பூஜை செய்ய வேண்டும்.


அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும்,ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.அப்படி செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.அனுமான் சாலீஸாவை தொடர்ந்து சொல்லலாம் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யலாம்.


திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயர்க்கு  வால்  வழிபாடு செய்வதன் மூலம், பார்வதிதேவியின் அருள் பெற்று, விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.














  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக