புதன், 5 ஆகஸ்ட், 2015

சத்குரு சாய் பாபா


இன்னிக்கு வியாழக் கிழமை.நாம்   எல்லோரும்  தினமும் சாமி கும்பிடுகிறோம் .ஆனால்
ஒவ்வொரு நாளுக்குரிய தெய்வத்தை வணங்கினால்,அந்த தெய்வம் நமக்கு கேட்டதெல்லாம் 
கொடுக்கும் .இதில் ஒன்றும் சந்தேகமே இல்லை .

அதன்படி ,நாம் கடவுளுக்கு அடுத்ததாக மகான்களை வழிபடுவது நல்லது .என்னுடைய குரு ,
மகான் எல்லாம் ஷீரடி சாய் பாபாவும்,பெரியவா தான் .ஏற்கனவே, நான் பெரியவாப்  பற்றி 
என்னுடைய பதிவில் எழுதி இருக்கேன்.

நான்  சாய் பாபா உடைய தீவிர டிவோடீஸ்  என்பதால் அவரைப்  பற்றி கேட்டாலும் இன்பம் படித்தாலும் இன்பம் .நான் அவரைப் பற்றி எழுதுவதே !எனக்குள் ஒரு பேரின்பத்தை கொடுக்கிறது .
பாபா என்  வாழ்க்கையை வழி  நடத்தி செல்கிறார் .என் அனுபவத்தில் நிறைய உதவிகளை
செய்திருக்கிறார் .பாபாவின் புகழை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .


சாதாரணமாக ,நம் பாபா யார் மனத்திலும் வர மாட்டார் .அப்பிடி வந்தார்  என்றால் அது நாம் செய்த பாக்கியம் எனலாம் .அந்த பாக்கியம் இந்த பதிவை நீங்கள் படிப்பதன் முலம் உங்களுக்கும்
சாய்  பாபாவின் அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது .சரி பாபாவைப் பற்றி பார்ப்போம் .


சாய் பாபா எளிமையானவர்.அவருடைய  பேச்சு சூத்திரங்களை போன்றது ,அர்த்தமோ  கம்பீரமானது.அவர் பேச்சு சுருக்கமானது .ஏழை ,பணக்காரர் ,தாழ்ந்தவர்,உயர்ந்தவர் என்ற பேதமின்றி நம்மை நல்வழி காட்டுபவர் சற்குரு சாய்நாதர்.பாபா கருணைக்கடல்.

அவர் நடத்தி காட்டிய அற்புதங்கள் கணக்கிட முடியாது.எண்ணெய்  இல்லாமல் விளக்கெரிய வைத்த அதிசயம் .

பாபா குழந்தைகளுடன் அன்பாக இருப்பார் .அவரை மக்கள் பாட்டு பாடியும், ஆடியும்
சந்தோசப்படுத்தினர்.பாபாவும் அவர்களுடன் சந்தோசமாக ஆடுவார் .








பாபா ஒரு வார்த்தை சொன்னால் ,அவருக்கு சாப்பாடு கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பாபா அவருக்காக ஒவ்வொரு வீடாக பிச்சை எடுத்து மற்ற உயிரினங்களான  நாய்,பூனை ,
ஆடு,மாடு போன்றவைக்கு உணவு அளித்தார்.




செடிகளும் ஒரு உ யிர் தான் என அவர் நிறைய செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்தார் .





உயிரினங்கள் அனைத்தும் என்னுள் அடக்கம் . எல்லாப்  படைப்புகளிலும் பாபா இருக்கிறார் என்று உணர்ந்து அன்பு காட்ட வேண்டும்.என்னுடைய பக்தர் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி .சிட்டுக்குருவியின் காலில் நூல் கட்டி இழுப்பது போல் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்
என்று பாபா கூறுகிறார்.

இறைவனின் தூதுவன் நம் பாபா .இறைவனின் தூதுவர்களுக்கே மகிமை .இறைவன் அடியவர்களை
சித்தர்கள்,ஞானிகள் ,மகான்கள்  என்று நாம் போற்றி வருகிறோம்.இறைவனின் அன்பை அவர்களே
நேரடியாக முதலில்  பெற்றவர்கள்.அவர்களை மதித்து நடப்பது அவசியம் .நம் மகான்
பாபாவும் அப்படித்தான் .

நம்முடைய பாவங்களை பாபாவின் காலடியில் தானம் ,பொருள் மூலமாக கொடுக்கிறோம்.அவர்
அதை ஏற்று ,நமக்கு நன்மை செய்கிறார்.

பாபாவிடம் நம்பிக்கையுடனும் ,பொறுமையுடனும் வேண்டினால் நினைத்த காரியம் நடக்கும்.நாம்
எல்லாம் அவருடைய செல்ல பிள்ளைகள்.பாபாவை வணங்கி பலன் பெற உங்கள் எல்லோரையும்
அன்புடன் அழைக்கிறேன்.


ஓம் சாயீ நமோ நம !சற்குரு சாயீ  நமோ நம !


இந்த எளிய மந்திரத்தை சொல்லி ,அனைவருக்கும்  பாபாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். 


உங்கள் தோழி ஈஸ்வரி 









செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

புதன் பகவான்

புதன் பகவான்









ஹாய் பிரண்ட்ஸ்,

வணக்கம்.கர்ம வினையினால் நமக்கு நல்லது ,கேட்டது நடக்கிறது.அதன்படி ,நவகிரகங்கள்
நமக்கு நல்லதையும் ,கஷ்டத்தையும் கொடுத்து அருள்கின்றன .9 கிரகங்களும் அவரவர்
வேலைகளை செய்து வருகின்றன .நமக்கு வரும் நல்லவைகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம் .கஷ்டங்களில் இருந்து விடுபட ,அந்தந்த நவகிரகங்களுக்கு விரதம் இருப்போம் .

ஒவ்வொரு நாளுக்குரிய நவக்கிரகங்களை வேண்டி ,நமக்கு நன்மை பெறுவோம் .

இன்னிக்கு புதன் கிழமை .ஆதலால்  , புதன் பகவானை நாம் சேர்ந்து வழிபடலாம் .வாருங்கள் !


கல்வி தரும் புதன் பகவான்



புதன் பகவான்  விரதம் இருந்தால் கல்வி ,ஞானம் ,தனம் போன்றவை பெருகும் என்பதால்
சிறுவர் ,பெண்கள் ,ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம்.

புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.
அமைதி கிடைக்கும் .


புதனின் அம்சம்



நிறம் ----பச்சை

தானியம் ---பச்சை பயறு

நவரத்தினம் ----மரகதம்

உலோகம் ----பித்தளை

பருவம்---இலையுதிர் காலம்

பஞ்ச பூதம் ----நிலம்



புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி ,பின் புதன் பகவான்
முன் நின்று வழிபட வேண்டும் .இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம் .


பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க ,பெருமாளை வழிபடவும் .



புதன் கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம் .

புதன் பகவான் ஸ்லோகம்

இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றிபதந் தத்தாள்வாய் பன்னொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி

புதன் காயத்ரி மந்திரம்

ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்

இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன்.





நாளை இன்னுமொரு பதிவில்


உங்கள் ஈஸ்வரி














விபூதி

அன்பார்ந்த தோழிகளுக்கு ,

                  என்னுடைய பதிவை  தொடர்ந்து பார்க்கும் அன்பு நெஞ்சங்களுக்கு  என்  அன்பார்ந்த 
வணக்கங்கள். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அர்த்தம் இருக்கிறது .அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் ? என்பதை 
தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுள் அருகில் செல்ல முடியும் .


 விபூதி


















 .விபூதிக்கு திருநீறு என்ற பெயர் உண்டு .விபூதி சைவர்களது புனித அடையாள சின்னம் ."எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு, இறுதியில் தீயில்  வெந்து பிடி சாம்பலாக போகிறது "என்ற தத்துவத்தை உணர்த்துகிறது .ஆகையால் ,தூய்மையான அறநெறியில்இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.


பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு .விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை ,
ஜெபம்,பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது .


ஸ்ரீ மகா லக்ஷ்மிக்கு உகந்தது விபூதி . திரு என்றால் மகா லக்ஷ்மி .விபூதியை திருநீறு என்று  அழைக்கிறார்கள் .

விபூதியை எந்த திசை பார்த்து பூச  வேண்டும் ?


'நீரில்லா நெற்றி பாழ் 'என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

சைவர் திருநீறும் ,வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில்  அணிதல் வேண்டும் .

வடக்கு  திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் ,
மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச  வேண்டும் . விபூதி நிலத்தில் சிந்துவது பாவம்.
 பூசும் போது திருசிற்றம்பலம் ,சிவாய நம  அல்லது சிவ சிவ என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும் .


திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும்.இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும் .





எப்போது விபூதி பூசலாம் ?


        காலை, மாலை ,பூசைக்கு முன்னும் ,பின்னும் ,ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில்
உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும் .

மூன்று படுக்கை வசக் கோடு  பூசுவதை "திரிபுண்டரம் "எனப்படும் .



இன்னும் விபூதியின் மகிமையை அறிய  ஒரு
சின்ன கதை இதோ!

'பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான் .உணவு,தண்ணீர்  மறந்து சிவனை நினைத்து ,கடும்தவம் இருந்தான் .ஒரு நாள் ,அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது.தவத்தை கலைத்துகண் திறந்து பார்த்தான் .அவனைச்  சுற்றிசிங்கங்களும்,புலிகளும் ,பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன .
பறவைகள் பழங்களை பறித்து கொண்டு வந்து ,அவன் முன் வைத்தது. பசி தீர சாப்பிட்டான்.மீண்டும் தவம் செய்ய துவங்கினான் . பலவருடங்கள் கடந்தோடியது.தவம் முடிந்து ,சிவ வழிபாட்டை தொடங்கினான்.
ஒரு நாள்,தர்பை புல்லை அறுக்கும் போது  அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.
அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான்.ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின்
கையைப் பிடித்து பார்த்தார்.என்ன ஆச்சரியம் !ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.வந்தது தாய்மானவர் என்பதை அவன் அறிந்தான் .



ரத்தத்தை நிறுத்தியது யார்?என்பதை அறிவேன் .சுவாமி !'உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் 'என்று பர்னாதன் வேண்டினான்.ஈசனும் காட்சி கொடுத்தார்.
"உனக்காகவே சாம்பல்லை உருவாக்கினேன் .அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என 
அழைக்கப்படட்டும் ".உன் நல் தவத்தால் விபூதி உருவானது 


.அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இதை பூசுபவர்களை  துஷ்ட சக்தி நெருங்காது .விபூதி என் ரூபம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார்.



               விபூதி பிள்ளையார்






















இங்கே இருக்குற படம் மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமைத்துள்ள விபூதி பிள்ளையார் . இந்த  பிள்ளையாருக்கு நம் கையால்  விபூதி அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் .இவரை வணங்கினால் ,வாழும்  காலத்தில்பொருளும் ,பிறவா நிலையும் கிடைக்கும் என்பது
பக்தர்களது நம்பிக்கை .நீங்களும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போனால்  பிள்ளையாரை தரிசனம் பண்ணுங்கள் .

விபூதியால் என்ன நன்மை ? என்று ராமன் அகத்தியரிடம் கேட்டார்.



பகை ,தீராத வியாதி ,மனநல பாதிப்பு ,செய் வினை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பூசினால்
அனைத்தும் விலகும் என்று உபதேசம் செய்தார்.

என்ன பிரண்ட்ஸ்,

இனிமேல்,  விபூதி பூசும் போது அதன் பொருள் அறிந்து பூசுவீர்கள் !என்று நினைக்கிறேன். என்
பதிவு நிறைய பேர்களுக்கு ஆன்மீகச்  சிந்தனையை தூண்டும் என எண்ணி ,இந்த பதிவை முடிக்கிறேன்.

சர்வமும் சிவமயம் !  சகலமும் சிவனருள் !நடப்பதெல்லாம் ஈசன் செயல்!




அன்பு தோழி ஈஸ்வரி

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

ஆடி 18 ம் பெருக்கு

ஆடி 18 ம் பெருக்கு


ஹலோ ப்ரண்ட்ஸ் 

இனிய காலை வணக்கம்.ஆடி மாதம் என்றாலே  அம்மனுக்கு திருவிழாதான்.இன்னிக்கு 18ம் பெருக்கு .ஆடி 
பெருக்கு காவேரி ஆற்றை சம்பந்தப்படுத்தி தான் ஆரம்பித்தது .

முன்னொரு காலத்தில் காவேரி 
ஆறு பெருக்கெடுத்து ஓடியது. தமிழ் நாட்டில்  காவேரி ,பெண்ணை ,பொருணை நதி ஓடுகிறது.
18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆடி பெருக்கு எனப் பெயர் வந்தது.


காவேரி ஆறு தென்னிந்தியாவில் புண்ணிய நதிகளில் ஒன்றாகும் .ஸ்ரீ ரங்கம் கோவிலில் அம்மா மண்டபத்தில் பெருமாள் காவேரிக்கு சீர் வரிசை அளிக்கும் காட்சியை  கண்டால் , கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .



பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவேரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரையிலும்
நதி கரையிலும்  ஆடி பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள் .இது கிராமப்புறங்களில் மிகச்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

பழங்காலத்தில்  காவேரி ஆற்றில் தண்ணீர் பிரச்சனை இல்லாத காலம் அது .

மக்கள் காலையில்  எண்ணெய் குளியல் செய்து ,புத்தாடையுடுத்தி மாலை ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் சென்று ,ஓடிவரும் காவேரி அன்னைக்கு பூஜை செய்வர்.பின் தம்முடன் கொண்டு வந்துள்ள சித்ரன்னங்களான

புளியோதரை ,மாங்காய் சாதம் ,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் ,மற்றும் சர்க்கரை சாதம் முதலியவை அன்னைக்கு நிவேதம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பர் .



ஒரு முறத்தில் வெற்றிலை ,பாக்கு ,தேங்காய் ,பழம் ,பூ ,ரவிக்கைத் துணி ,காதோலை ,கருகமணி ,திருமாங்கல்யச் சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து ,மற்றொரு முறத்தால் மூடி எடுத்து செல்வர்.


ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து ,கற்பூரம் ஏற்றி வணங்குவர் .தீபங்களை ஒரு வாழை மட்டையில் வைத்து முறத்துடன் ஆற்றில் மிதக்க விடுவர்.





இன்றைய நாட்களில் ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமாங்கல்யத்தை மாற்றி கொள்ளும் தினமாக அனுஷ்டிக்கின்றனர் .பழைய திருமாங்கல்யத்தை எடுத்து விட்டு புது மாங்கல்யத்தை அணிகின்றனர் .

 இப்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நகர் புறத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள
குழாய்களில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

ஆடி பெருக்கில்  ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம் கணவனின் நலனுக்காகவும் ,கன்னி பெண்களுக்கு சீக்கிரமே நல்ல கணவர் கிடைக்கவும் இன்று பூஜை செய்து வழிபடுகிறார்கள் .


என்ன தோழிகளே !சந்தோசமா ஆடி 18ம் பெருக்கை கொண்டாடுங்க .நாளை இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்.

நன்றி .
வணக்கம் .
`உங்கள் அன்பு தோழி   ஈஸ்வரி








ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

எந்த தெய்வத்தை வணங்கலாம்

ஹலோ நண்பர்களே
 
           எல்லோருக்கும் வணக்கம்.சாமியை வணங்குவதற்கு வயது வரம்பு கிடையாது .நம்
வீட்டு குழந்தைகளுக்கு சாமி கும்பிட சொல்லி கொடுங்கள்  .சாமி கும்பிட்டால்
நன்மைதான் வருமே ஒழிய தீமை ஒரு போதும் வராது .எனவே இந்த சின்னஞ்சிறு வயதிலே சாமி கும்பிட எல்லா பெற்றோரும்  சொல்லி கொடுங்கள் .



அதிகாலையில் குளித்து விட்டு ,தலைவாரி சாமியை கும்பிட்டால் அஷ்ட ஐஸ்வரியமும்  கிடைக்கும் .
பண்டிகைகாலங்களில் நம் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அதிகாலையில் எழுந்து குளித்து
புத்தாடை உடுத்தி ,சாமி கும்பிடும் அழகைப் பார்க்கவே இரண்டு கண் பத்தாது .






 எந்த காரியம் நடக்க எந்த தெய்வத்தை வணங்கலாம் ?


இடையூறுகள்  நீங்க ,வெற்றி உண்டாக விநாயகரை வழிபட வேண்டும் .

செல்வம் சேர ஸ்ரீ மகா லக்ஷ்மி ,ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை  வழிபடவும் .

நோய் தீர ஸ்ரீ தட்சணா மூர்த்தியை வழிபடலாம் .

ஆயுள்  ஆரோக்கியம் பெற சிவனை வழிபடவும்.

நல் புத்தி ,நல் பலம் ,பதவி ,கணவன் மனைவி ஒன்று சேர  ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியை வழிபடுங்கள் .

புத்திர பாக்கியம் பெற சந்தான லக்ஷ்மியையும் ,சந்தான கிருஷ்ணனையும் வழிபட்டு வாருங்கள் .

உணவு கஷ்டம் நீங்க ஸ்ரீ அன்ன பூரணியை வழிபட  வேண்டும்.

தொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குங்கள் .

திருமணம் நடை பெற தூர்க்கை,ஸ்ரீ காமாட்ஷி அம்மனை வணங்கவும் .

புதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜ லக்ஷ்மியையும்,பகைவர் தொல்லை அகல திருச்செந்தூர் முருகனையும் , ஞானமும் ,சக்தியும் பெற சிவனை வழிபடவும் .

தோழிகளே! உங்கள்  பிள்ளைகளுக்கு இந்த சின்ன வயதிலேயே ,சாமி கும்பிட பழக்கப்படுத்தி விட்டால் ,அவர்களுக்கு  வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் வேர் அவர்கள் மனத்தில் நிலைத்து
இருக்கும் .


இனி நாளை அடுத்த பதிவில் சந்திப்போம்.
 உங்கள்  தோழி ஈஸ்வரி










வெள்ளி, 31 ஜூலை, 2015

மதுரையை ஆளும் மீனாக்ஷி

ஹாய் எல்லோருக்கும் வணக்கம் 

மதுரை மீனாக்ஷி 

இன்னிக்கு வெள்ளிக்கிழமை .அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை .பெரும்பான்மையான  மக்கள் காலை யிலேயே அம்மனை கோவில் சென்று வழிபடுவது உண்டு. நான் வெள்ளிகிழமை தோறும் , லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் அம்மா என் வீடு தேடி வந்திடுவாங்கள்.அதில்  ஒன்றும் சந்தேகமே இல்லை 


என்னுடைய பிரியமான  தோழி உமா  என்னிடம் ,மதுரை மீனாட்சியைப்  பற்றி எழுதுமாறு கேட்டுக்கொண்டதால் அந்த மீனாக்ஷி அம்மன் அருளுடன் இந்த பதிவை  எழுதுகிறேன் .









காசியில் இறந்தால் முக்தி .திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி .மதுரை வீதியில் நடந்தாலே முக்தி .  


அந்த மதுரை மீனாட்சியைப் பற்றி கேட்டாலோ ,அவள் புகழை சொன்னாலோ நமக்கு நன்மை நிச்சயம்  என்று நம்புவோம். எனக்கு கிடைத்த  தெய்வீக அருள் உங்களுக்கும் கிடைக்க அந்த மீனாட்சி தாயாரை வேண்டுகிறேன்.

பொதுவாக சிதம்பரம் என்றால் சிவபெருமானுக்குதான் முதலிடம் .மதுரை என்றால் நம் அம்மா 
மீனாட்சிக்கு தான் முதலிடம் .இதைத்  தான் நிறைய பேர் மதுரைக்காரர்களை பார்த்து உங்க வீட்டுல மீனாட்ஷி ஆட்சிதானே ?என்று கிண்டல் செய்வார்கள் .


காரணம் மதுரை முழுவதும் அம்மாதான் இரவு ,பகல் என்று பாராமல் வலம்  வந்து அருள் புரிகிறாள் .


மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்ஷி என பெயர் பெற்றாள் .அன்னையின் 
கடைக்கண் பார்வை பட்டாலே சகல செளபாக்கியம் நம்மை வந்து சேரும்.மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது .அம்மனுக்கு மரகத வல்லி ,தடாதகை ,அங்கையற்கண்ணி,
சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே .

மீனாட்ஷி பிறப்பு   



அம்பிகை அவ்வப்போது பல அவதாரங்களை செய்து உலகிலுள்ள ஜீவராசிகள் அனைவருக்கும்
அருள்கிறாள் .அதில் ஒன்றுதான் சூர்யவம்சத்தில் நடந்தது .

மதுரையை ஆண்ட மலையத்வஜனுக்கும்,காஞ்சன மாலைக்கும் மகளாக, புத்ரகாமேஷ்டி யாகத்து அக்னியில்  இருந்து 3 வயது பெண்ணாக வந்தவள்  தான் மீனாட்ஷி . அக்னியிலிருந்து தோன்றிய பெண் மூன்று மார்புடன் தோன்றியதால் அரசன் அதை எண்ணி  வருத்தப்பட்டான் .அப்போது ஒரு குரல் கேட்டது .எப்போது அவள் மனதிற்கு பிடித்த கணவனை காண்கிறாலோ அப்போது மூன்றாவது மார்பு மறைந்து விடும் என்று அந்த குரல் கூறியது .அந்த குழந்தைக்கு "தடாதகை "என்று பெயர் சூட்டினார் .


அரசன் 64 கலைகளையும் தன்  மகளுக்கு கற்று தந்தார் .
தடாதகை எல்லா கலைகளிலும் வல்லவளாய் ,எட்டு திசைகளிலும் போரிட்டு வென்றாள் . பிறகு கைலாயத்தையும் வெல்ல வேண்டும் என்று சென்றாள் . அங்கு  சிவபெருமானை கண்டவுடன் அன்னையின்  உடலுள் ஒரு மாற்றம் .அவரே தன் மணாளன் என்ற உணர்வு மேலிட,அவருக்கு மாலையிடத் தயாராகிறாள் .




மதுரையில் ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் மிகச்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது .தன்  தங்கையை தாரை வார்த்து கொடுக்கிறார் நம் விஷ்ணு பெருமாள் .அன்று இரவு பல வண்ண பூக்களால் ஆன பல்லாக்கு  வீதிகளில் வரும். இதற்கு பூப் பல்லாக்கு என்று பெயர் .சுந்தரேசரும் ,மீனாட்ஷியும் பல்லாக்கில் வந்து மதுரை மக்களுக்கு காட்சியளிப்பர் .
மதுரையில் அடுத்த நாள் தேரோட்டம் நடைபெறும்.மறுநாள் அழகர் ஆற்றில் இறங்குவார் .ஒவ்வொரு மண்டபமாக சென்று பக்தர்களுக்கு அருள் புரிகிறார் .இறுதியாக அழகர் கோவிலுக்கு சென்று விடுவார் .

முத்தமிழருக்கு இயல் ,இசை, நாடகங்களை காட்டும் கலைக் கோவிலாகவும்,சிலை கோவிலாகவும் மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.


பொற்றாமரை குளம் 


இந்திரன், தான் பூஜிப்பதற்கு பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் .ஒரு நாரைக்கு சிவபெருமான் அருளிய வரத்தின்படி ,இக்குளத்தில் மீன்களும் ,நீர்வாழ் உயிரினங்கள்  இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.









இக்கோவிலில் மூலவர் சுந்தரேஸ்வரர்.இந்திரன்,வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு  பெற்ற தலம் .

மீனாட்க்ஷி அம்மன் கோவில் வெள்ளி அம்பலம் என்று அழைக்கப்படுகிறது . மதுரையில் 
சிவபெருமான் பாண்டிய மன்னனுக்காக  வலது காலை தூக்கி ஆடினார் என்பது சிறப்பு மிக்கது .


தலவிருட்சம் -----கடம்ப மரம் . மீனாட்ஷி அம்மன் கோவில்  சுவர்களில்  மீனாட்ஷி வரலாற்றை மிக அழகாக சித்திரம் வரைந்து ,பார்ப்பவர்களுக்கு எளிதாக புரியும்படி உள்ளது .


மதுரையில் வடக்கே குபேரன் வழிப்பட்ட பழைய சொக்கநாதர் கோவில் ,மேற்கே சிவனே லிங்க வடிவில் உள்ள  தன்னை ,தானே  வழிபட்ட   இடம் நன்மை தருவார் கோவில் .கிழக்கில் வழிபட்ட ஐராவத நல்லூர் மூத்தீஸ்வரன் கோவில் ,தெற்கில் எமன் வழிபட்ட திருவாலவாய் கோவில் .
  



மதுரை திரு மீனாட்சி அம்மன்  108 போற்றி

1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி4. ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி5. ஓம் அரசிளங்குமரியே போற்றி6. ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி7. ஓம் அமுத நாயகியே போற்றி8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி9. ஓம் அருள்நிறை அம்மையே போற்றி10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி12.ஓம் ஆதியின் பாதியே போற்றி13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி16.ஓம் இமயத்தரசியே போற்றி17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி18.ஓம் ஈசுவரியே போற்றி19.ஓம் உயிர் ஓவியமே போற்றி20.ஓம் உலகம்மையே போற்றி21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி23.ஓம் ஏகன் துணையே போற்றி24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி25.ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி26.ஓம் ஒப்பிலா அமுதே போற்றி27.ஓம் ஓங்காரசுந்தரியே போற்றி28.ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி29.ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி32.ஓம் கனகமணிக் குன்றே போற்றி33.ஓம் கற்பின் அரசியே போற்றி34.ஓம் கருணயூற்றே போற்றி35.ஓம் கல்விக்கு வித்தே போற்றி36.ஓம் கனகாம்பிகையே போற்றி37.ஓம் கதிரொளிச் சுடரே போற்றி38.ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி39.ஓம் காட்சிக்கினியோய் போற்றி40.ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி41.ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி42.ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி43.ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி44.ஓன் கூடற்கலாப மயிலே போற்றி45.ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி46.ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி47.ஓம் சக்தி வடிவே போற்றி48.ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி49.ஓம் சிவகாம சுந்தரியே போற்றி50.ஓம் சித்தந்தெளிவிப்பாய் போற்றி
51.ஓம் சிவயோக நாயகியே போற்றி52.ஓம் சிவானந்த வல்லியே போற்றி53.ஓம் சிங்கார வல்லியே போற்றி54.ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி55.ஓம் செல்வத்துக்கரசியே போற்றி56.ஓம் சேனைத் தலைவியே போற்றி57.ஓம் சொக்கர் நாயகியே போற்றி58.ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி59.ஓம் ஞானாம்பிகையே போற்றி60.ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி61.ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி62.ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி63.ஓம் திருவுடை யம்மையே போற்றி64.ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி65.ஓம் திரிபுர சுந்தரியே போற்றி66.ஓம் திருநிலை நாயகியே போற்றி67.ஓம் தீந்தமிழ்ச் ச்சுவையே போற்றி68.ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி69.ஓம் தென்னவன் செவ்வியே போற்றி70.ஓம் தேன்மொழியம்மையே போற்றி
71.ஓம் தையல்நாயகியே போற்றி72.ஓம் நற்கனியின் சுவையே போற்றி73.ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி74.ஓம் நல்ல நாயகியே போற்றி75.ஓம் நீலாம்பிகையே போற்றி76.ஓம் நீதிக்கரசியே போற்றி77.ஓம் பக்தர்தம் திலகமே போற்றி78.ஓம் பழமறையின் குருந்தே போற்றி79.ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி80.ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி81.ஓம் பவளவாய்க் கிளியே போற்றி82.ஓம் பல்லுயிரின் தாயே போற்றி83.ஓம் பசுபதி நாயகியே போற்றி84.ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி85.ஓம் பாண்டிமா தேவியே போற்றி86.ஓம் பார்வதி அம்மையே போற்றி87.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி88.ஓம் பெரியநாயகியே போற்றி89.ஓம் பொன்மயிலம்மையே போற்றி90.ஓம் பொற்கொடி அம்மையே போற்றி91.ஓம் மலையத்துவசன் மகளே போற்றி92.ஓம் மங்கள நாயகியே போற்றி93.ஓம் மழலைக் கிளியே போற்றி94.ஓம் மனோன்மணித்தாயே போற்றி95.ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி96.ஓம் மாயோன் தங்கையே போற்றி97.ஓம் மாணிக்கவல்லியே போற்றி98.ஓம் மீனவர்கோன் மகளே போற்றி99.ஓம் மீனாட்சியம்மையே போற்றி100.ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி101.ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி102.ஓம் யாழ்மொழியம்மையே போற்றி103.ஓம் வடிவழகம்மையே போற்றி104.ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி105.ஓம் வேதநாயகியே போற்றி106.ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி107.ஓம் அம்மையே அம்பிகையே போற்றி108.ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி



இந்த போற்றியை சொல்லி அம்மன் அருள் பெறுங்கள் .

அம்மா கருணை மழை பொழிந்தால் மட்டுமே நமக்கு நல்ல வாழ்வு அமையும் என்று சொல்லி ,நம்பிக்கையுடன் அம்மனை வேண்டுங்கள் .அம்மா நம்முடன் என்றும் இருப்பாள் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன் .

வார  இறுதி நாளை நல்லா  என்ஜாய் பண்ணுங்க .மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 




























வியாழன், 30 ஜூலை, 2015

சங்கர நாராயணன்

சங்கர நாராயணன் 


தபசு என்றால் தவம் என்று பொருள்.ஆதிசக்தி கோமதியம்மனாக அவதரித்து,சிவனை நோக்கி தவமிருந்த விழாதான் ஆடி தபசு.

ஒரு காரியத்தில் இறங்கும்போது அதிலிருந்து சிறிதும் விலகாமல்,வெற்றி அடைவது மிகப்பெரிய செயல்.

ஏன் பார்வதிதேவி தவம் இருந்தார்கள்?

சங்கரன்,பத்மன் என்ற நாக அரசர்கள் இருந்தனர்.இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே அவர்கள் எலியும்,பூனையுமாக இருந்தனர்.அது என்ன தெரியுமா?அதுதான் சிவன் பெரியவரா?விஷ்ணு பெரியவரா? என்பதுதான்.

அதற்கு காரணம் சங்கரன்--வீர சைவன் 

                             பத்மன் ---பழுத்த வைணவன் 

நேராக இதற்கு விடைகாண,உலகாளும் அம்மா இருக்கும் கைலாயத்திற்கு போய் விவரத்தை சொன்னார்கள்.அம்மாள் புகுந்த வீட்டுபக்கம் பரிந்து பேசுவாளா?பிறந்த வீட்டு பக்கம் பரிந்து பேசுவாளா?

ஹரியும்,சிவனும் ஒன்றுதான் என்று எவ்வளவோ அம்மாள் சொல்லிப் பார்த்தாள்.அதிலும் ஹரியைத்தானே முதலில் சொல்றீங்கனு?வம்பு பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.அம்பாள் பாடு திண்டாட்டம் ஆயிருச்சு!

அம்பாளுக்கு இவர்கள் வாயால் சொன்னால் சரிபட்டு வர மாட்டார்கள் என்று சிவனை நோக்கி தபசில் உட்கார்ந்து விட்டாள்.ஒரு கையில் விபூதியும்,ஒரு காலை தூக்கியும் நம் அன்னை தவம் செய்தாள்.

காதல் கணவன் சிவபெருமான் கோமதிஅம்மன் முன் தோன்றினான்.அன்னையும் வரத்தை கேட்டாள்.

அன்னை கேட்ட வரத்தை கேட்டு ஈசன் ஒரு நிமிடம் ஆடி போனார்.அன்னையிடம்,நல்லா யோசித்துதான் இந்த வரத்தைக் கேட்கிறாயா?என்று கேட்டார்.ஆமாம் ஐயனே!நான் கேட்கும் வரத்தை உங்கள் அன்பு மனைவிக்கு தர மாட்டீர்களா?என்றால் அன்னை.

அந்த வரம் என்ன தெரியுமா?இதுதான்.

அன்னை தன்னுடைய இடப்பாகத்தை தன் அண்ணனுக்கு கொடுப்பதுதான்.

விஷ்ணு எங்கும் நிறைந்தவர்.தூணிலும்,துரும்பிலும் இருக்கும் என் அண்ணன் விஷ்ணுவை வாம பாகத்திலும் [இடப்பாகம்] காட்டி அருள வேண்டும் என்று அம்மாள் சிவனிடம் வரம் கேட்டாள்.

தேவி!உடலையும்,ஆத்மாவையும் பிரிக்க முடியுமா?அதுபோல் நானும்,ஹரியும் ஒருவரே! என்ற உண்மையை உலகத்திற்கு விளக்க,சங்கர நாராயணனாக காட்சி அளிக்கிறேன்  என்று கூறி, காட்சி கொடுத்தார் சிவபெருமான்.
ஹரி ஓம் நமசிவாய!

ஒரு புறம் சிவன் உருவம்,இடப்பாகம் விஷ்ணு 
ஒரு புறம் செம்மேனி,மறுபுறம் நீல மேனி 
ஒரு புறம் தலையில் கங்கை --சந்திரன் சடை முடி ,மறுபுறம் வஜ்ர மாணிக்க மகுடம்   
ஒரு புறம் புலித்தோல் ,மறுபுறம் பீதாம்பரம் 
ஒரு புறம் ருத்திராட்சம்,மறுபுறம் துளசி மாலை 

ஆடி பவுர்ணமி அன்று ஆடிதபசு விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது.சங்கர நாராயணன் சன்னதியில் விபூதி பிரசாதம்,துளசி தீர்த்தம் உண்டு.வில்வ அர்ச்சனையுடன் துளசி அர்ச்சனையும் செய்யப்படுகிறது.சிவனையும்,விஷ்ணுவையும் இணைக்கும் அம்மாளுக்கு குங்கும அர்ச்சனையும் உண்டு.

அம்மாளுக்கு எந்த குழந்தையிடமும் பேதம் பார்ப்பது இல்லை.சைவ குழந்தையோ,வைணவ குழந்தையோ என்றைக்கும் குழந்தை குழந்தைதான்.அம்மா அம்மா தான்.கோமதி தாய் திருவடியை 
வணங்குவோம்.

சங்கரன் கோவில் திருநெல்வேலியில் உள்ளது.இங்கு புற்றுமண் பிரசித்தி பெற்றது.இதை உடலில் பூசி,தங்கள் வயல் ,வீடுகளில் தெளித்து சுகம் பெறுவர்.உடல் நோய்,பூச்சிக்கடி நீங்கும்.

தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும்.வேண்டிய வரத்தை வேண்டியபடி தருவாள்.குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். சுபிஷங்கள் அனைத்தும் தேடி வரும். 

கருணைக்கடலான அம்பாள் நம் மீது கருணை மழை பொழிந்து ,நம்மை எல்லையில்லா ஆனந்த வாழ்க்கைக்கு அழைத்து செல்வாள்.

ஓம் சக்தி!ஓம் சக்தி !ஓம்