செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பாபாவின் அறிவுரை

ஹாய் ப்ரண்ட்ஸ்    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் .

எல்லோரும் வரலக்ஷ்மி பூஜையை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள்? .நான்கூட வரலக்ஷ்மி விரதம் இருந்ததால் தொடர்ந்து என் பதிவை போடமுடியவில்லை.உங்களுடன் எனக்கு தெரிந்தவற்றை   பகிர்ந்து கொள்வதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன் .

போனபதிவில் சொன்ன மாதிரி நான் ஓரு தீவிர பாபாபக்தை .பாபாவை நினைக்காத நாளே இல்லை .ஒவ்வொரு நொடியும் அவரை நினைக்கிறேன் .நான் செய்யும் செயல்கள் அனைத்தும் பாபாவின் இயக்கமே .

இன்னிக்கு பாபா நமக்கு சொன்ன சில அறிவுரைகளை சொல்லலாம் என்று இருக்கேன்.
வாங்க !பார்க்கலாம்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள் .என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் .நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன்.

 எல்லா  ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன் ,என்னை நினைப்பவனை எந்த துன்பமும் நெருங்காது . 

எவர்  உள்ளத்தில்  நான் இருக்கிறேனோ  அங்கு அன்பு இருக்கும் . 

  • நம்பிக்கை ,பொறுமை  பாபா மீது  வைத்தால் நாம் நினைத்தது  நிறைவேறும் .

    சாயி சாயி  என்று சொன்னால்  பாவங்கள் தீர்ந்து விடும்.

    பாபா எண்ணம் ,செயல் ,சொலால் இறைவனை சரணடை என்கிறார் .

    என்னை வணங்க பூஜை பூனஸ்காரம்  தேவையில்லை .ஆத்மார்த்தமாக என்னை வணங்கு .நான் உன்னுடன் இருப்பேன் .

    கஷ்டம் வந்தால் துவண்டு போகாதே .அது உன் பூர்வ ஜென்ம கர்மா .இன்பத்தை எவ்வாறு சந்தோசமாக ஏற்கின்றாயோ அதே போல் கஷ்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று என் மீது போட்டு விடு .நான் பார்த்து கொள்கிறேன் . கவலைபடாதே !

என்ன நண்பர்களே  பாபா அறிவுரையை கேட்டு அவரை முழுமையாக நம்பிக்கையுடன் ஜெபம் செய்தால் நிச்சயமாக பாபா நம் மீது கருணைக்காட்டுவார் .
ஜெய் சாய்  ராம் !
வாழ்க வளமுடன் 
உங்கள் அன்பு தோழி  ஈஸ்வரி 

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

எண்ணெய் ஸ்நானம்

 ஹாய் ப்ரண்ட்ஸ்

வணக்கம் . சிறு இடைவெளிக்குப் பிறகு என்னுடைய ஆன்மீகப் பயணத்தை தொடர்கிறேன் .இதுவரைக்கும் இறைவனைப் பற்றி நான் எழுதிக்கிட்டு வந்தேன் .அத்துடன் சில பயனுள்ள
தகவல்களையும் உங்ககிட்ட பகிர்ந்து கொள்ளலாம் என்று  இருக்கேன்.

எண்ணெய் குளியல் 


நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம்.வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும் .
விசேஷ நாட்களிலும் ,பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும்.இது
வயதானவர்களுக்கு ,நோயாளிகளுக்கு ,சிறு குழந்தைகளுக்கு பொருந்தாது.




எண்ணெய் தேய்த்து, நாம் தீபாவளி அன்று ,அதிகாலையில் குளிப்போம் .இது எல்லோருக்கும்
பொதுவானது. அறிந்ததும் கூட .

எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நன்மை ,தீமை? என்று பார்ப்போம்.

ஞாயிற்று கிழமை -----அழகு போகும்திங்கள் கிழமை -----பொருள் சேரும்செவ்வாய் ------குடும்பத்திற்கு ஆகாதுபுதன் ----கல்வி வளரும்வியாழன் ------அறிவு அழியும்வெள்ளி ------புகழ் உண்டாகும்சனி ------சம்பத்து உண்டாகும்


அமாவாசை ,பிறப்பு ,இறப்பு காலங்களில் வெந்நீரில் குளிக்க கூடாது.


மீண்டும் அடுத்த பதிவில்
நன்றி .

உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி



புதன், 19 ஆகஸ்ட், 2015

தானம் செய்வதால் பலன்

ஹாய் ப்ரண்ட்ஸ் ,  வணக்கம்


ஆன்மீக தேடல் ஒரு நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் படியாகவும்,என்றும் நாம்
இறைவனை நினைக்க வேண்டும் என்ற விதமாகவும் அமையும்.

இறைவனைப்  பற்றி பேசுவது ,அவர் புகழ் பாடுவது ,அவர் புகழைக் கேட்பது ,இறைவனுக்காக
பூஜை செய்வது எல்லாமே ஆன்மீகம் தான். அந்த வகையில் நான் உங்களிடம் அவரைப் பற்றி
செல்வது கூட ஓர் வகை ஆன்மிகம் தான் .

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கடவுளை நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். நம்பிக்கையுடன் வேண்ட வேண்டும்.

இன்னிக்கு நான் தானத்தைப் பற்றி சொல்லலாம் என்று  இருக்கேன். தானம் நம் கர்ம வினையை
நீக்கும் .இல்லாதவருக்கு செய்யும் தானமானது நம் கர்ம வினையை நீக்குவதுடன், நம்மை
கடவுள் அருகில் கூட்டி செல்கிறது.

 என்ன தானம் கொடுத்தால் என்ன பலன்? 

தானத்தில் சிறந்தது அன்னதானம்.எந்த தானம் செய்தாலும் போதும் என்ற மனம் ,பெறுபவருக்கு ஏற்படாது. இன்னும் கொடுக்க மாட்டார்களா? என்ற எண்ணம் வாங்குபவருக்கு தோன்றும்.ஆனால் அன்னதானம் ஒன்றே வயிறு நிரம்பியவுடன் திருப்தி அடையும்.

அன்னம் ---வறுமை ,கடன் நீக்கும்


துணி தானம் செய்தால் ஆயுள் அதிகமாகும் .


தேன் தானம்  ----புத்திர பாக்கியம்  கிட்டும் .



தீப தானம் ---கண் பார்வை தெளிவாகும்.





அரிசி ----பாவங்களை போக்கும்

நெய் -----நோய்களை போக்கும் 





நெல்லிக்காய் -----ஞானம் கிடைக்கும் .



பால் ----துக்கம் நீக்கும் 



பழங்கள் -----புத்தியும் ,சித்தியும் கிட்டும்

தங்கம்-----குடும்ப தோஷங்களை நீக்கும்.


வெள்ளி தானம் செய்தால் மனக்கவலை நீங்கும்.


பசு -----ரிஷி,தேவர் ,பிதுர் கடன்கள் அகலும் .

தேங்காய் ----நினைத்த காரியம் வெற்றி அடையும்.


தயிர் ------இந்திரிய விருத்தி உண்டாகும்.



 நாங்கள்  வேலைக்கு போறதுனால இந்த தானம் எல்லாம் செய்ய நேரமில்லை என்று   நீங்கள்  சொல்லலாம். 


உங்கள்  வீட்டு பக்கத்திலே பசு இருந்தால் அதற்கு அருகம் புல் கொடுங்கள் .வாழைப்பழம் கொடுத்தால் நம் கர்ம வினைகள் எல்லாம் போய் விடும் .பசுவிற்கு செய்யும் தானம் நம் முன்னோர்களுக்கு செய்வது ஆகும் .

கோவிலுக்கு போனால், அங்கே  இருக்கிற ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள் .

உங்களுக்கு அந்த பரம்பொருள் குறைவில்லாத வாழ்வை அளிப்பார் .

ஓம் நம சிவாய 



இந்த பதிவைப் பார்க்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என்  நன்றிகள் .

















செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

இடும்பன்


 இடும்பன்

ஹலோ பிரண்ட்ஸ், 

எப்பிடி இருக்கேங்க?அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் .
என்னுடைய ஆன்மீக பயணத்தில் கூட வரும் அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .


சாமி கும்பிட நாம் எல்லோரும் முருகன் கோவிலுக்கு செல்கிறோம்.அங்கே  இடும்பன் சிலை
வைத்திருப்பார்கள்.அதையும் வணங்குகிறோம்.அந்த இடும்பன் யாரு?அவரை ஏன் கும்பிறோம்?என்று நிறைய பேருக்கு தெரியாமலேயே வணங்குவோம்.தெரிந்து வணங்கினால்  இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து .


பொதுவாக,எந்த காரியமானாலும் அதன் அர்த்தத்தை தெரிந்துகிட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

பழனி மலை தோன்ற காரணமான இடும்பன்


                இவர்தாங்க இடும்பன்.இவர் மலையை தூக்கிட்டு இருக்கிறதை வைத்துதான் காவடி
தூக்கும் வழக்கம் வந்தது.

இடும்பன் நம் தமிழ் கடவுள் முருகனின் பக்தன்.அகத்திய முனிவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும்போது,அங்கிருந்த இரண்டு மலையான சக்தி கிரி,சிவ கிரியை எடுத்து வர எண்ணினார்.
அவருடைய சீடன் இடும்பன் என்ற அசுரனைப் பணிகிறார் .



அப்போது தேவலோகத்தில்  பிள்ளையாருக்கும்,முருகனுக்கும் பழ விசயத்தில் சண்டை உண்டானது.முருகன் தன் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு தெற்கு நோக்கி வருகிறார்.
இடும்பன் மலைகளை சுமந்து வந்த களைப்பின் காரணமாக சிறிது நேரம் ஓய்வு எடுத்து போகலாம் என எண்ணி மலையை கீழே இறக்கி வைத்தான்.

ஓய்வு எடுத்த பின்,மீண்டும் மலையை எடுக்க முயற்சிக்கும் போது எடுக்க முடியவில்லை.இடும்பனுக்கோ ஒரே ஆச்சரியம் .மழையின் மீது ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தான்.
மலையை விட்டு கீழே இறங்குமாறு இடும்பன் சொல்லியும் கேட்கவில்லை .இடும்பன் கோபத்துடன்
சிறுவனை தாக்கினான்.அவர்களுக்குள் சண்டை மூண்டது.சண்டையில் சிறுவன் வெற்றி பெற்றான்.
இடும்பன் தன்னை வென்றது யார்?என சிந்தித்து பார்க்கையில் சிறுவனாக வந்தது முருகன் தான்
என்று அறிந்தான்.

முருகனிடம் மன்னிப்பு கேட்டு,2 வரங்கள் கேட்டான்.முதலில் இடும்பன் போல் யார் காவடி தூக்கி வந்தாலும் முருகன் அவர்களை காக்க வேண்டும் .இரண்டாவது,அந்த மலைக்கு, தானே காவலாளி
ஆக  வேண்டும் என்பதுதான்.

இந்த இரு மலைதான் பழனி மலையாகவும்,இடும்பன் மலையாகயும் இருக்கிறது.


காவடி தூக்குவதும்,திருஆவினன் குடி என்ற பழனிமலை உருவானதும் இடும்பன்தான் காரணம்.


இதை பகிர்ந்து கொள்வதில் நான் ஒரு கருவியாக இருக்கிறேன். என்னை எழுத வைப்பது எல்லாம்
நான் வணங்கும் அனைத்து சாமிகளே காரணம் எனச் சொல்லி பதிவை முடிக்கிறேன்.

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி














சனி, 15 ஆகஸ்ட், 2015

ஆடி பூரம்

ஹாய் பிரண்ட்ஸ்
 
அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .ஆடி மாதத்தில் வரும் பண்டிகைகள் நாம் எல்லோரும்
சிறப்பாக கொண்டாடிக்கிட்டு  இருக்கோம் . ஆடி மாதத்திலே அம்பாளுக்கு சக்தி அதிகம்.
ஒரு குழந்தை யாரைவேண்டுமானாலும் மறக்கும் .ஆனால் தாயை மறக்குமா?.நம் கஷ்டங்களை எல்லாம் அடியோடு கரைப்பவள் அம்மாவுக்கு அம்மாவான அந்த அம்பாள் தான் . நம்ம எப்போதுமே
அம்பாளுக்கு உண்மையுள்ள குழந்தையாக இருக்கணும்.அம்பாள் நம்மை ஒவ்வொரு நாளும்
வழிநடத்தி நம் கையைப் பிடித்து கூட்டிடு போறாள் .அதற்கு நன்றி சொல்லுங்க முதலில் .

நம்பிகையுடன் இரு கரம் கூப்பி வணங்குங்க.

இன்னிக்கு ஆடி பூரத்தை பற்றி தான் பாக்க போறோம்.

ஆடி பூரம் .அம்மன் தோன்றியது ஆடிப்பூரம் அன்றுதான் என்பார்கள்...பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்று தேவர்கள் வளைகாப்பு அம்பாளுக்கு செய்வித்ததும் ஆடிப்பூரம் தினத்தில்தான் என சொல்வர்...அதனால் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபட்டால் மங்களம் பெருகும்..நினைத்தது நடக்கும்..ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால் அவ்வருடம் முழுக்க,சிறப்பாக இருக்கும்.







அம்மன் கோயில் செல்ல முடியாதவர்கள், வேப்பிலையை அம்மனாக பாவித்து ,செம்பு குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி ,குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி,(வெள்ளைக்காடா துணியை மஞ்சளில் முக்கி எடுத்தது)வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி,அதன் மேல் இக்குடத்தை வைத்து ,பூ மாலைகள் சூடி,வண்ண வளையல்கள்  கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து,நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து ,நைவேத்தியம் ஒன்று தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி ,12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு ,பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம் ..பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் ,கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்...


என்றேன்றும் வளமான வாழ்க்கை வாழ இறைவனை ப்ராத்திகின்றேன் .


உங்கள் அன்பு சகோதரி  ஈஸ்வரி 






..

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பைரவர்

பைரவர்


சிவபெருமானின் அறுபத்தி நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.பைரவர் வாகனம் நாய் .
சொர்ணாகர்ஷண பைரவர் ,ஆதி பைரவர்,கால பைரவர் ,உக்ர பைரவர் என அழைக்கப்படுகிறார் .


கால பைரவர்,சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சிவன் கோவிலின் வடகிழக்குப் பகுதியில் நின்ற
கோலத்தில் இருப்பார்.ஆடைகள்  எதுவுமில்லாமல்,பன்னிரு கைகளுடன் நாகத்தை  பூனூலாகவும் ,
சந்திரனைத் தலையில் வைத்தும்,சூலாயுதம் ,பாசக்கயிறு ,அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.


கால பைரவர் சனியின் குருவாகவும் ,18 ராசிகள்,8திசைகள்,பஞ்ச பூதங்கள் ,நவக்கிரகங்களையும்,
காலத்தையும் கட்டுப்படுத்துபவராக கூறப்படுகிறார்.

உலகையும்,உயிர்களையும் காக்கும் தன்மை சிவ பெருமானுக்கே உரியது என்பதால்,ஒரு
கூறே பைரவ மூர்த்தியாக எழுந்தருளி,பக்தர்களுக்கு அருள்கிறது என்று ஞான நூல்கள் கூறு கின்றன .

பிரமன் நான்கு முகம்



மூம்முர்த்திகளில் ஒருவரான பிரம்மன்,ஆதிகாலத்தில் சிவனாரைப் போன்றே 5தலைகளுடன் திகழ்ந்தார் .ஒருமுறை,அவர் அகந்தையால் அறிவு மயங்கி சிவ  பெருமானை மதிக்காமல்
இருந்தார் .சிவபெருமான் பைரவரை தோற்றுவித்தார்.பைரவர்,பிரம்மனின் 5வது தலையை கொய்து எடுத்து கபலமாக்கிக் கொண்டார் .


அடி முடி தேடியபோது திருமுடி கண்டேன் எனப் பொய்யுரைத்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலை
பைரவர் மூலம் கொய்ததாக ஒரு புராண தகவல் உண்டு.பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட
இடம் திருக்கண்டியூர்  ஆகும்.


அந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன்,அவர்களைப் பெண் வேடத்துடன்
திரியும்படி செய்து அவமானப்படுத்தினான்.தேவர்கள்,சிவபெருமானை சரணடைந்தனர்.
அவர் ஸ்ரீ மகா பைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார் .அதி உக்கிரத்துடன் அந்தகன் மீது போர்தொடுத்த பைரவர் ,அவனைத் தபத் சூலத்தில் குத்தி அவனுடைய உடலிலிருந்து வழிந்த ரத்தத்தை குடித்தார்.அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன் பைரவரை
துதித்தான்.அதனால் மகிழ்ந்த ஸ்ரீ பைரவர்,அவனைச் சூலத்தில் இருந்து விடுவித்தாராம்.அதே போல்,முண்டகன் போன்ற அசுரர்களையும் அழித்து,ஸ்ரீ பைரவர் தேவர்களை  காத்து பரிபாவித்த
கதைகளும் உண்டு.

குழந்தை இல்லாமல்
வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திரு நாட்களில்
செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து ,நெய் தீபம் ஏற்றி வழிபட ,விரைவில்
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.

வெள்ளை வஸ்திரம் சாற்றி,தயிர்  அன்னம் ,தேன் ,தேங்காய்  சமர்பித்து வழிபடுவதால் பில்லி சூனியம் போன்ற தீவினை நீங்கும்.

பைரவர் 108 போற்றி



ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன் குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறத்தனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கனவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமி நாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் குரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்டபைரவனே போற்றி
ஓம் சட்டைநாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீகாழித்தேவனே போற்றி
ஓம் சுடர்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சந்நிதியுளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸரூபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபசக்ஷ்யனே போற்றி
ஓம் பாசக்குலைப்போனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹா பைரவனே போற்றி
ஓம் மணி ஞானனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி




இதை சொல்லி பயன் பெருக ! வாழ்க வளமுடன்!
















செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

நறுமணம் கமழும் சாம்பிராணி


 சாம்பிராணி



ஹாய் பிரண்ட்ஸ்


அனைவருக்கும் என்  அன்பு வணக்கங்கள்.இன்னிக்கு நான் சாம்பிராணியைப் பற்றி பகிர்ந்து
கொள்ளலாம்னு இருக்கேன் .

சாம்பிராணி ஒரு மரப்பிசின்.அனைத்து மதங்களும் சாம்பிராணியை பூஜைக்காக  பயன்படுத்துகிறார்கள்.இந்து சமயத்தில் அனைத்து சடங்குகளிலும் ,வழிபாடுகளிலும் இது பயன் படுத்தப்படுகிறது.


நம் சுற்று சுழலில் உள்ள அசுத்தத்தை நீக்கவும் ,ஒரு நேர்மறையான சக்தி அளிப்பதற்கே சாம்பிராணி உதவுகிறது. போபாலில் அக்னி ஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.



நமக்கு உண்டாகும் மிகப் பெரிய துன்பங்களை எல்லாம் ,அக்னி உருவாக காற்றோடு காற்றாக
பறந்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் சாம்பிராணி போட வேண்டும் .இறைவனின்
அருள் கடாட்சம் கிடைக்க நம் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு வணங்குவோம்.

தேள் ,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நம் வீட்டில் வராமல் இருக்கவும் ,அலை மகளின் அருள்
கிடைக்கவும் அந்தி சாயும் நேரத்தில் தூபம் போடவும்.

தீய  எண்ணங்கள் அகல ,கண் திருஷ்டி போகவும் தினமும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் .


சுமங்கலிகள் மங்கள நாளான செவ்வாய் ,வெள்ளியில் மாலை நேரத்தில் குளித்து விட்டு ,
தெய்வ படங்களுக்கு விளக்கேற்றி வைத்து ,சாம்பிராணி தூபமிட்டால் பீடைகள்,தரித்திரங்கள்
அகலும்.லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.



ஓம் லக்ஷ்மியே போற்றி! என்று சொல்லி ,என்  பதிவை முடிக்கிறேன் .

இன்னும் வேறொரு தலைப்பில் நாளை சந்திப்போம் .
ஈஸ்வரி