திங்கள், 4 டிசம்பர், 2017

பறவையும்-இறைவனும்

MAYIL  images க்கான பட முடிவு
பறவையும்-இறைவனும் 

அன்னம்-இது பிரம்மனுக்கு வாகனம்,நலனுக்காகத் தமயந்தியிடம்  சென்றது.

சிம்புள்(சரபம்)-சரபம் என்பது இரண்டு சிங்க முகங்களும்,இரண்டு சிங்க உடல்களும்,இரண்டு இறக்கைகளும்,எட்டு கால்களும் கொண்ட ஒரு கொடிய பறவையாகும்.இது சிங்கத்தைத் கொல்லத்தக்கதாகும்.பறவைகளுக்கெல்லாம் அரசு என்று சொல்லப்படும்.

இரணியனைக் கொன்ற நரசிங்க மூர்த்தி ஆணவம் கொண்டு ரத்த வெறி கொண்டு அட்டகாசம் செய்து வந்தார்.எல்லோரையும் பயமுறுத்தி வந்தார்.இதனைக் கண்ட பிரம்மன் சிவமூர்த்தியைத் துதித்தார்.உடனே சிவமூர்த்தி சரப உருவம் கொண்டு நரசிங்க மூர்த்தியின் கோபம் தணித்து சரப மூர்த்தி என்னும் திருநாமம் அடைந்தார்.

அன்றில் (சரபம்)-இது கிரவுஞ்ச் பறவை,இணை பிரியாதது.சிவனைப்  பூஜித்து முக்தி பெற்றது.

கருடன்--விஷ்ணுவின் வாகனம்,புராணங்களில் மிகப் பிரசித்திப் பெற்றது கருடன் வைணவர்கள் கருடாழ்வார் எனப் போற்றும் தெய்வீகப் பறவை.

குயில்--தட்சன் செய்த வேள்வியை வீரபத்திரர் அழித்தபோது அங்கிருந்த இந்திரன் குயில் உருவம் கொண்டு பறந்தோடினான்.அவனையும் வீரபத்திரர் தண்டித்தார் என்கிறது புராணம்.

கோட்டான்--ஒரு சாபத்தால் லட்சுமி கோட்டனாகப் பிறந்து முட்டைகள் இட அதிலிருந்து குதிரைகள் இவ்வுலகில் தோன்றினவாம்.

கிளி--மன்மதனுக்கு வாகனம்,சிவனைப்  பூஜித்து முக்தி பெற்றது.

ஆந்தை ---அசுப சகுனமாகக்  கருதப்படும் ஆந்தையானது சிவபூஜை செய்து முக்தி அடைந்ததாக புராணங்கள் வருணிக்கின்றன.

கோழி ---கந்த மூர்த்திக்கு கொடியாம்.இது திருச்சிராப் பள்ளியில் அரசன் சேனை மறித்துப் போரிட்டது.

புறா--சிபிச் சக்கரவர்த்தி காட்டில் இருக்கும்போது இவனது தவத்தைத் சோதிக்க இந்திரன் வேடனாகவும்,அக்னி தேவன் புறாவாகவும் உருவம் கொண்டு வந்தனர்.

மயில்--கந்தமூர்த்திக்கு வாகனமும் இந்திரனுக்கு ஆபத்து ஏற்பட்டபோது தன் உடம்பைக் கொடுத்து உதவியது.

கழுகு--சடாயுவின் உருவம் இவ்வுருவம் கொண்ட இருவர் திருக்கழுக்குன்றத்தில் இன்றும் தவம் புரிவதாக நம்பிக்கை உண்டு.ராமாயணம் கழுகு இனமான சடாயுவின் சிறப்பை பெரிதும் போற்றுகிறது.

காகம்--சனி வாகனம்,யமனுக்குப்  பரிகாரம் செய்ய உதவும் பறவை.

தேன்வண்டு --இந்திர கோபப் பூச்சி ஆகியவனவும் சிவமூர்த்தியைப் பூஜித்து முக்தி பெற்று புராணங்களால் பெரிதும் பேசப்படும் புள்ளினங்களாக உள்ளன.

கரிக்குருவி--மதுரையில் குருவிக்கு மந்திரம் உபதேசம் அளித்தார்.

நாரை--மதுரை மீனாட்சி பொற்றாமரைத் தீர்த்தத்தில் உண்ண வந்தது.சிவமூர்த்தி ஞானோதயம் பெற்று முக்தி பெற்றது.

ஈ--அகத்திய முனிவர் பூஜிக்க காலம் வாய்க்காமல் கொண்டு பூஜித்தார்.இவர் பூஜித்த தலம் திருஈங்கோ எனப்படும் இது குளித்தலை வடமேற்கே உள்ளது.










  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக