புதன், 31 அக்டோபர், 2018

தீபாவளி ஸ்பெஷல் - எத்தனை மணிக்கு எண்ணெய்க்குளியல் – வழிகாட்டிய மஹா பெரியவர்

தீபாவளி ஸ்பெஷல் - எத்தனை மணிக்கு எண்ணெய்க்குளியல் – வழிகாட்டிய மஹா பெரியவர்

deepavali-special-at-what-time-can-take-oil-bath-guiding-maha-periyava
தீபாவளிக் குளியல் நேரம் குறித்து மறைந்து காஞ்சி மகாப்பெரியவர் கூறியுள்ள அறிவுரை நம்மிடம் பொதுவாக உள்ள சந்தேகத்திற்குத் தீர்வாக உள்ளது. அவர் கூறியுள்ளதாவது, "இந்து தர்ம  சாஸ்திரப்படி சூர்யோதயத்துக்கு முன் அப்யங்கனம் (எண்ணெய்க் குளியல்) செய்யக்கூடாது என்பது விதி. விதியை அப்படியே பின்பற்றுவது சாதரண மானிடர் இயல்பு. ஆனால் பூதேவி அப்படிப்பட்டவளா? வித்தியாசமான ஒரு விதியை பகவானிடமிருந்து வரமாக வாங்கி தன் பிள்ளைக்கு சிறப்பை தேடிக் கொடுத்து விட்டாள். தீபாவளி நாளில் மட்டும் சூரியோதயத்துக்கு முந்தி வரும் அருணோதய காலத்தில் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்காக பகவானின் அங்கீகாரத்தைப் பெற்றாள்.Related image
அருணோதயம் என்றால் அருணன் உதயமாகும் நேரம். அருணன்  என்பவன் சூரியனுடைய தேரோட்டி. நல்ல சிவப்பு நிறத்திற்கு சொந்தகாரன்.சூரியன் அடிவானத்தில் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த காலத்துக்கு முன்பே,வானில் சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத் தான் அருணோதயம் என்கிறாம். ஒரு முகூர்த்தம் என்பது நாற்பத்தெட்டு நிமிட கணக்கு.
அதனால் தீபாவளியன்று சூரியோதயத்துக்கு ஒரு முகூர்த்தம் முந்தியே எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும். விடிவதற்கு முன்னால் எண்ணெய்க் குளியல் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்வதும் தவறு.எதையும் நல்ல நேரத்தில் செய்யும் போது அதன் பலன் இரட்டிப்பாகும் என்று கூறியுள்ளார். தனது அடியவர்களுக்கு எப்போதும் நன்மையானதையே கூறி வழிகாட்டும் காஞ்சி மகானின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

திங்கள், 29 அக்டோபர், 2018

தமிழில் சங்கல்பம் செய்து பூஜை செய்வது எப்படி?

தமிழில் சங்கல்பம் செய்து பூஜை செய்வது எப்படி?



சிறிது மலர்களையும் அட்சதையையும் எடுத்துக்கொண்டு கை கூப்பிக்கொள்ளவும். 

பின் வரும் மந்திரங்களைக் கூறவும்.vinayagar images download க்கான பட முடிவு



ஓம் விநாயகப்பெருமானே போற்றி!
ஓம் முருகப்பெருமானே போற்றி!
ஓம் சிவபெருமானே போற்றி!
ஓம் உமை அம்மையே போற்றி!
ஓம் எஙகள் குல தெய்வமே போற்றி!
ஓம் எங்கள் இஷ்டதெய்வமே போற்றி!



(அவரவர் அன்னை, தந்தை, குரு, முன்னோர்களை மனதில் தியானம் செய்யவும்.)

எல்லாம் வல்ல சிவபெருமானே போற்றி போற்றி.
இன்று ... வருடம் ... (தக்ஷிணாயனம்/ உத்தரயணம்) ... ருது, ... மாதம், ... (வளர் பிறை/ தேய்பிறை),  ... திதியில், ... கிழமை, ... நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், ... (காலை/மாலை) வேளையில், ..... இறைவனுக்கு, (108 நாமவளிகள் / 1000 நமாவளிகள்) கூறி வழிபட இருக்கிறோம்.

இந்த ஊரும் உலகமும், நாங்களும், எங்கள் உறவுகளும், நண்பர்களும், மற்றும் எங்கள் குடும்பமும், நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும், நிறைந்த செல்வமும், நல்ல புத்தியும், மன அமைதியும், மனமகிழ்ச்சியும் பெறவும்,
எங்கள் ஜாதகத்தில் உள்ள குறைகள் நீங்கி, நவகோள்களும் நன்மையே செய்யவும்,
நாங்கள் செய்த பாவங்கள் போகவும்,
வியாதிகள் அகலவும்,
துன்பங்கள் தொடராமல் இருக்கவும்,
உன்னை என்றும் மறவாமல் வழிபடவும், அருள் புரிவாய்.

மேலும் எங்கள் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,
நல்ல வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, வீடு வாகன வசதிகள் பெருகவும்,
இளவயதினருக்கு உரிய வயதில் திருமணம் கை கூடவும்,
திருமணமான மகளிருக்கு மாங்கல்ய பலமும், தம்பதியர்க்கு நன்மக்கள் பேறு கிடைக்கவும் அருள் புரிவாய்.

நாங்கள் மனம் மொழி மெய்யால் நல்லதையே செய்யவும், நல் அருள்புரிவாய்.

கோயில்கள் தோறும் வழிபாடுகள் குறைவற நடைபெறவும்,
நாட்டில் நல்ல மழை பொழிந்து நாடு செழிக்கவும்,
உன்னை வழிபடுபவர்களின் மனக்குறை எல்லாம் நீங்கவும்,
நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்கவேண்டும்.

( அவரவர் பெயர், நட்சத்திரம் கூறி அவரவர் வேண்டுதல்களை மனதில் சிந்தித்து வழிபடவும்.)

மலர்களை வழிபடும் தெய்வத்திடம் சேர்க்கவும்.தொடர்புடைய படம்



நாமாவளி கூறி அருச்சனை செய்து வழிபடவும்.

அருச்சனை முடிந்த பிறகு

1. ஊதுபத்தி காட்டுதல்
2. தீபம் காட்டுதல்
3. திருவமுது படைத்தல்.
4. தாம்பூலம் அளித்தல்.
5. கற்பூரம் காட்டி வழிபடுதல்.
6. மலர் தூவுதல்.

இறைவனை மனதில் இரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமரச்செய்து,
சங்கொலி செய்தல்,
சாமரம் வீசுதல்,
நிறை குடம் காட்டுதல்,
கண்ணாடி காட்டுதல்,
குடை அளித்தல்,
கொடி அளித்தல்,
மணி ஓசை செய்தல்,
மங்கள இசை முழங்குதல்,
நான்கு வேதங்கள் கூறுதல்,
திருமுறை விண்ணப்பம் செய்தல்,
இறைவனுக்கு தோத்திரங்கள் கூறி பாடல்கள் பாடுதல்,
வலம் வந்து வழிபடுதல்
ஆகியவை செய்து பின் நாம் இதுவரை செய்த வழிபாட்டில் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி வேண்டுதல்.தொடர்புடைய படம்



”கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தை
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.”

உன் பாத கமலங்களில் சரண் அடைந்தோம் எங்களைக் காப்பாற்றுவாயாக!

என்று கூறி மங்களம் பாடுதல்.

சுபம் .. மங்களம்.

வியாழன், 25 அக்டோபர், 2018

நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்


நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் 


புதன், 24 அக்டோபர், 2018

அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை!

அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை!aanmeegam images க்கான பட முடிவு
நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க கூடிய விஷயங்கள் ஒவ்வொன்றும் அறிவியல் ரீதியாக ஏற்பட்டவையே.யாரும் சும்மா சொன்னால் கேக்க மாட்டார்கள்..அதே விஷயத்தை ஆன்மீகத்தின் அடிப்படையில் சொல்லும்போது மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.இங்கே காரணங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். 


விரத நாட்களில் எண்ணெய் குளியல்  கூடாது ஏன் ?
 விரதத்திற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு விரத நாட்களில் வெறும் தலைக்கு  குளிக்கலாம் என்றனர். எண்ணெய்க் குளியல் நம்மைச் சுற்றிலும் ஓர் புகை வளையத்தை ஏற்படுத்துவதாக சமீபகால அறிவியல் தெரிவிக்கின்றது. இதை நமது முன்னோர்கள் பழங்காலந்தொட்டே அறிந்துள்ளனர்.



குளித்ததும் முதலில் முதுகைத் துடைப்பது ஏன்?
குளிக்கும்போது உடலின் எல்லாப் பாகங்களிலும் குளிர் பரவினாலும் மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில்தான். முதுகெலும்பில் ஆழ்உணர்வு பாதிக்குமளவு குளிர் பரவி விட்டால் நோய்வாய்ப்பட நேரும். குளத்திலோ, ஆற்றிலோ குளிப்பவர்கள் முதலில் முதுகு குளிர்வதை உணர்வர். எனவே நம் பெரியவர்கள், 'முதுகில் மூதேவி வருவதற்குள் முதலில் துடை' என்ற மரபினை வைத்தனர்.

குங்குமப் பொட்டின் மங்கலம்
தொடர்புடைய படம்
நெற்றியில் இரு புருவங்களுக்கிடையே உள்ள மத்திய பாகம் ஆக்கினை (ஆக்ஞா சக்கரம்) முக்கியமான நரம்பு புள்ளியாகும். இது மனித உடலின் ஐந்தாவது திறன் மையம். இங்கே குங்குமப் பொட்டு வைப்பதால் உடலிலிருந்து சக்தி வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மனம் ஒருநிலைப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைத்தவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது. நமது சமயச் சின்னங்களான விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இவற்றை நெற்றியில் தரித்து நாம் நலம் பெறுவோம்.

ஆலயமணிதொடர்புடைய படம்
ஆக விதிகளின்படி மணி ஓசை கெட்ட சக்திகளை விரட்டுவதாகும். கடவுளின் பூஜைக்கான நேரம் என அறிவுறுத்துவதாகும். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் பல்வேறு மன ஓட்டத்தில் இருந்து நம்மை விடுவித்து இறைசிந்தனையில் ஆழ்த்துகிறது மணியோசை. மேலும் மணியோசை நமது வலது மற்றும் இடதுபக்க மூளைக்குச் சமமாகச் செல்கிறது. மணியை அடித்த பின் அதன் ரீங்காரம் ஏழு நொடிகளில் உடலிலுள்ள சப்தநாடிகளையும் சென்றடைந்து அவைகளை விழித்தெழச் செய்கிறது.

வடக்கே தலை வைத்துப் படுத்தல் கூடாது ஏன்?
வாராத வாழ்வு வந்தாலும் வடக்கே
தலைவைத்துப் படுக்காதே
என்பது பழமொழி.
அறிவியல் காரணம் நமது உடலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது. வடக்கு தெற்காக பூமியின் காந்தப்புலம் உள்ளது. நாம் வடக்கே தலைவைத்துப் படுக்கும் போது, நமது காந்த சக்தியும், பூமியின் காந்த சக்தியும் சம அமைப்போடு இருப்பதில்லை. மாறுபாடு ஏற்படுவதால் உடல்நிலை பாதிப்படைகிறது. உடலில் உள்ள இரும்புச் சத்து காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மூளைக்குச் செல்வதால் தலைவலி, ஞாபகமறதி, மூளைச் சிதைவு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சுமங்கலிகள் மெட்டி அணிவதுதொடர்புடைய படம்
திருமணமான பெண்கள் காலில் வெள்ளியாலான  மெட்டி அணிவது நம் பண்பாடு. இதன் பின்னுள்ள அறிவியல் விளக்கம் யாதெனில், கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமடைகிறது. இதயம் பலமடைகிறது. மாதவிலக்குச் சீராகிறது. வௌ்ளி ஒரு மின்கடத்தி என்பதால் பூமியிலிருந்து சக்தியை எடுத்து உடலுக்குக் கடத்துகிறது.

சுமங்கலிகள் தங்கத்தாலி அணிதல்தொடர்புடைய படம்
பெண்கள் தம் மனம்கவர் மணாளன் கட்டிய தாலியை இதயத்திற்கு அருகிலேயே வைத்திருப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

வணக்கம் கூறும் முறை
தொடர்புடைய படம்
தெய்வங்களை வணங்கும்போது தலைக்கு மேலே கைகூப்பி வணங்க வேண்டும். பின்னர் இதயத்திற்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும். குருவை வணங்கும்போது நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும். அன்னையை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். நமக்குச் சமமானவர்களை, கூப்பிய கைகளின் விரல்களை அவர்களுக்கெதிரே நீட்டி வணங்க சொல்ல வேண்டும்.
கடவுளை வணங்கும்போது இரு கரங்களை இணைத்துக் குவித்து வணங்குவதால் விரல்நுனிகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த அழுத்தம் கண்கள், காது மற்றும் மூளைக்குச் செல்கிறது. தீபாராதனையின் போது கடவுள் சிலையிலிருந்து வெளிப்படும் பஞ்சபூத சக்தி நம் ஐந்து விரல்கள் வழியாக நம் உடலுக்குள் ஊடுருவி ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் நமக்கத் தருகிறது.

தொடர்புடைய படம்துளசி இலையைக் காதுக்குப் பின் வைத்துக் கொள்வது 
மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடைய பகுதி காதுக்குப் பின்புறம்தான். துளசியைக் காதுக்குப் பின்புறம் வைக்கும்பொழுது துளசி இலையில் உள்ள மருத்துவக் குணங்கள் முழுமையாக உறிஞ்சப்பட்டு உள் செல்வதால், தலையில் நீர் கோர்க்காமல் துளசியின் இதமான சூடு நம்மைக் காக்கிறது. இதனால் மூளை மண்டலமும் பலம் பெறுகிறது.


ஞாயிறு, 21 அக்டோபர், 2018

சகல காரிய சித்தி பெற வரதராஜ பெருமாள் ஸ்லோகம்

சகல காரிய சித்தி பெற வரதராஜ பெருமாள் ஸ்லோகம்

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?

நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?


கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.



எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.

எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்:

சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.

செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.

ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி



    see my channel Tamilnattu samayal .please subscribe and support my channel.baby with parvathi image க்கான பட முடிவுதிருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி
    குழந்தையை பெற்றெடுத்த பின்பு தான் எல்லா பெண்களும் தாங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர். பழங்காலத்தில் அமைதியான வாழ்க்கை, நல்ல சத்தான உணவுகளை உண்ட நம் நாட்டு பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனால் இக்காலங்களில் பெண்கள் பலருக்கு குழந்தை பிறக்காத நிலை ஏற்படுகிறது. அதிலும் சில பெண்களுக்கு உடல் நல குறைபாடுகளாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும் கருச்சிதைவு உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி மந்திரம் இது.
    amman
    திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி
    1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
    3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
    4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
    6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
    7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
    8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
    9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
    10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
    11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
    12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
    13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
    14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
    15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
    16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
    17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
    18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
    19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
    20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
    21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
    22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
    23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
    24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
    25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
    26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
    27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
    28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
    29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
    30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
    31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
    32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
    33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
    34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
    35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
    36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
    37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
    38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
    39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
    40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
    41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
    42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
    43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
    44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
    45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
    46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
    47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
    48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
    49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
    50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
    51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
    52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
    53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
    54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
    55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
    56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
    57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
    58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
    59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
    60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
    61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
    62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
    63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
    64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
    65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
    66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
    67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
    68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
    69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
    70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
    71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
    72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
    73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
    74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
    75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
    76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
    77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
    78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
    79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
    80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
    81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
    82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
    83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
    84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
    85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
    86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
    87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
    88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
    89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
    90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
    91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
    92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
    93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
    94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
    95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
    96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
    97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
    98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
    99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
    100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
    101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
    102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
    103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
    104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
    105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
    106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
    107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
    108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி