புதன், 8 ஆகஸ்ட், 2018

வீடு தேடிவரும் மகாலட்சுமி


வீடு தேடிவரும் மகாலட்சுமி

வீடு தேடிவரும் மகாலட்சுமி

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

பார்வதி தேவி க்கான பட முடிவுதேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

1. வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள்.
2. கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.
3. ஸ்ரீலட்சுமிதேவிக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.
4. ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!
நினைத்தது நிறைவேறும்...!
அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபடுவதால், நினைத்தகாரியம் உடனே நிறைவேறும்.
அதேபோல், அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்டநாள் குணம் ஆகாமல் வாட்டும் பிணிகள், வெகுசீக்கிரம் அகலும்.
சகல செல்வங்களும் ஸித்திக்கும்...!
சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு.
அதாவது
1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகைப் பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க...!
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
அதேபோன்று, சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி
நமோஸ்துதே.

பார்வதி தேவி வழிபாட்டு விரதங்கள்


சிறப்பு படம்

பார்வதி தேவி வழிபாட்டு விரதங்கள்

பார்வதி தேவியை வழிபடத்தக்க விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:

வெள்ளிக்கிழமை விரதம்: சித்திரை மாதம், வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி, வாரந்தோறும் பார்வதி தேவியரைக் குறித்து மேற்கொள்ளும் விரதம் இது. விரதத்தின்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.

ஆடிப்பூர வழிபாடு :

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் நட்சத்திரம் வரும் நாள் Ôஆடிப்பூரம்Õ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த பூரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு பச்சைப் பயிறைத் தண்ணீரில் நனைத்து முளைவிட வைப்பார்கள்.

ஆடிப்பூரம் தினத்தன்று அது நன்றாக முளைவிட்டிருக்கும். அதை பெண்கள் தலையில் சுமந்து கோவிலுக்குச் சென்று அம்பிகைக்கு நைவேத்தியமாக வைப்பார்கள். பின்னர் அதை அவர்கள் பிரசாதமாகச் சாப்பிடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இவ்வாறு முளைப்பாரி எடுத்து நைவேத்தியம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துளசி வழிபாடு :

துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணு அருள் கிடைக்கும். வீட்டின் மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி, கோலமிட்டு வழிபட்டு வந்தால் நல்லது. துளசி மாலையை விஷ்ணுவுக்கும் அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் வளர்பிறை திவாதசி அன்று பிருந்தாவன துளசி பூஜை செய்ய வேண்டும். புஷ்பங்களால் அர்ச்சிப்பது விசேஷம்.

பாவை நோன்பு :

ஸ்ரீஆண்டாள் பாடி அருளிய திருப்பாவையும் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் பாடி அருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். 

‘மாதங்களில் நான் மார்கழி ஆவேன்’ எனக் கண்ணபிரான் கீதையில் அருளினார். வைணவர்களும் சைவர்களும் ஒருங்கே கொண்டாடும் மாதம் இது. வைகுண்ட ஏகாதசியும் ஆருத்ரா தரிசனமும் இம்மாதத்தில் தான் வருகின்றன. இம்மாதத்தில் அதிகாலையில் செய்யக் கூடிய பூஜையானது, ஒரு வருடத்தில் பூஜை செய்த பலனைத் தரும்.


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்

ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்

பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?


ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும். 
ஆடி பெருக்கு வரலாறு க்கான பட முடிவு

ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் வைபவம் தொடங்கும்.
பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள், ஓரகத்தி, அவர்களின் பிள்ளைகள், நாத்தனார், பக்கத்து வீட்டுத் தோழி என்று பட்டாளத்தோடு தேர் அசைவதுபோல தெருவைக் கடப்பார்கள். சிறு பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக்கொண்டு முன்னே போவார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும்.
வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
ஆனால் கடந்த பல வருடங்களாகக் காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு அத்தனை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆடிப்பெருக்கு என்பது மற்றுமொரு பண்டிகைக் காலம். காலையில் எழுந்ததும் இறைச்சிக் கடைகளை நோக்கிக் குவிகிறார்கள் மக்கள். தேவைக்குத் தகுந்தபடி இறைச்சி வாங்கி மதிய சாப்பாட்டைக் கொண்டாடிப் பண்டிகையை முடித்துக்கொள்கிறார்கள். வழக்கமாக ஒரு வாரத்தில் விற்கும் தொகை அன்று ஒரு நாளில் மட்டும் விற்கிறது என்கிறார்கள் டாஸ்மாக் வட்டாரத்தில்.

வீட்டிலேயே கொண்டாடலாம்..!

காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார் ஆச்சாள்புரம் சம்பந்த சிவாச்சாரியார். எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்: “ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா நிறைவாகும்” என்கிறார் சம்பந்த சிவாச்சாரியார்.






ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.




செவ்வாய், 31 ஜூலை, 2018

ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த வழிபாடுகள்


ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த வழிபாடுகள்



புதன், 25 ஜூலை, 2018

முருகனுக்கு பிடித்த சாக்லேட் நைவேத்தியம்!

முருகனுக்கு பிடித்த சாக்லேட் நைவேத்தியம்!

பொதுவாக இந்துமத தெய்வங்களுக்கு அவல், கடலை, மோதகம் என்பவற்றையே நைவேத்தியமாக படைப்பதுண்டு. ஆனால் கேரளாவில் உள்ள இந்த பாலமுருகனுக்கு பிடித்த நைவேத்தியம் என்னவென்று பாருங்களேன்.
குழந்தையும் தெய்வமும் ஒன்றென கூறுவார்கள். அதற்கேற்ப, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்தான் இந்த பாலமுருகனுக்கும் பிடித்த நைவேத்தியமாம்.முருகனுக்கு பிடித்த சொக்கலேட் நைவேத்தியம்! க்கான பட முடிவு
சாக்லேட்  கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கும் இந்த ஆலயம் இந்தியாவின், கேரளா மாநிலத்தின் ஆலப்புழா நகரில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாலமுருகன் ஆலயத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்று வருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய குடும்பத்தினர் குறித்த ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அதன்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை கோயில் மணியை அடித்துள்ளார்.
குழந்தையின் செயலை கண்டித்து பெற்றோர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன், முருகனின் நாமத்தை உச்சரிக்க தொடங்கியுள்ளார்.
தெய்வ குற்றத்தினாலேயே இப்படி நேர்ந்ததாக எண்ணிய பெற்றோர், பரிகாரம் செய்வதற்காக கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன்போது, கோயிலின் கருவறைக்குள் சென்ற குழந்தை தனது கையிலிருந்து சாக்லேட்டை கடவுளுக்கு படைத்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தை உடனடியாக நலமடைந்துள்ளார். இதனால், பாலமுருகனுக்கு பிடித்த பிரசாதம் சாக்கலேட்தான் என்பது செவிவழியாக பரவ, தற்போது பக்தர்கள் முருகனுக்கு 
சாக்லேட்டை நேர்த்திக்கடனாக செலுத்த தொடங்கியுள்ளனர்.

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்

ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்

 
காளிகாம்பாள் தலத்தில்
 விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.